அந்த விஷயம்தான் நெருடுகின்றது
அந்த விஷயம்தான் நெருடுகின்றது
விஸ்வரூபம் பட சர்ச்சையின் பொழுது கையில் காசு இல்லை நடுதெருவில் நிற்கின்றேன் நான் என புலம்பியவர் கமலஹாசன்
பெரும் பணம் இருந்தால் மருதநாயகம் படமெடுப்பேன் என சொல்லி திரிந்தவர்
நான் ஒரு சினிமா விவசாயி, சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்பவன், விவசாயி போலவே ஆண்டி என பகிரங்கமாக சொன்னவர் அவர்
திடீரென இவ்வளவு பணம் இவரிடம் வந்தது எப்படி? டிவிக்களில் இடையில்லாமல் விளம்பரம் செய்ய பலநூறு கோடி வந்த வழி எது?
இதை எல்லாம் விசாரிக்க போவது யார்?
மய்யத்தை தோண்டினால் பல புதையல்கள் இருக்கலாம், ஆனால் ஏதோ ஒரு பூதம் புதையலை காத்து நிற்கும் பொழுது அது எப்படி சாத்தியம்?