அந்நிய வடமாநில தொழிலாளருக்கு யார் உண்டு?
திரைதுறையில் பெப்சி என்றொரு அமைப்பு உண்டு , லைட்பாய், செட்டிங், போன்ற தொழிலாளர் அமைப்புகள் அவை, அந்த தொழிலாளர்கள் கூலிகள், இதனால் சூட்டிங் இல்லாவிட்டால் சம்பளம் கிடையாது
இதனால் திரை நட்சத்திரங்கள் உதவ தொடங்கிவிட்டன, அவர்கள் உதவுவது தன் துறைக்காக ஆனால் கனவோ தமிழ்நாட்டை ஆள்வதற்காக
தமிழக அடிமட்ட மக்களை நினைத்துபார்த்தால் வேதனை மிஞ்சும், கட்டட தொழிலாளர், அடைத்துவிட்ட கடைகளின் வேலையாட்கள், சந்தையினை நம்பி இருந்த கூலிகள் , ஏர்போர்ட் ரயில்வே ஸ்டேஷனை நம்பியிருந்த கூலிகள் ஓட்டுநர்கள் எல்லோரும் மிகுந்த வலியில் இருக்கின்றார்கள்
இவர்களின் நிலை இங்கு சிக்கல் ஆனால் வேர்கள் உண்டு, குடும்பம் சொந்தம் உறவு சொந்தமண் என ஏதாவது உண்டு
ஆனால் அந்நிய வடமாநில தொழிலாளருக்கு யார் உண்டு? அவர்கள் நிலை பரிதாபமே
அந்த இந்திய சகோதரர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும், சம்பந்தபட்ட அமைப்புகள் இதுபற்றி சிந்திக்கட்டும்
எல்லோரும் வாழட்டும், எல்லோரையும் வாழவைப்போம்..
குறைந்தபட்சம் வயிறார உண்ணவாவது வைப்போம்