அனிதா எனும் மாணவிக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி…
அனிதா எனும் மாணவிக்கு ஏற்பட்டிருப்பது அநீதிதான், சந்தேகமே இல்லை
மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்றால் இந்த நுழைவு தேர்வுகள் எல்லாம் தேவையே இல்லை.
இன்று நுழைவுதேர்வு வந்துவிட்டதால் ஒரு ஏழைபெண்ணின் மருத்துவ கனவும் தகர்ந்துவிட்டது என கொதிக்கும் தமிழகத்தில்தான், எத்தனையோ உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு உயர் கல்விகள் அவர்கள் உயர்சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக மறுக்கபட்டது என்பதை வசமாக மறைத்துவிடுகின்றார்கள்.
இட ஒதுக்கீடால் பாதிக்கபடும் மாணவர்களுக்கு இழைக்கபடுவதும் அநீதியே, இம்மாதிரி போதிய மதிப்பெண் இருந்தும் நுழைவு தேர்வு என வைத்து வாய்ப்பு மறுப்பதும் அநீதியே
நுழைவுதேர்வு அரசால் நடத்தபடும்பொழுது, அதற்கான கோச்சிங் வகுப்புகள் மட்டும் தனியாரால் நடத்தபடுவது எப்படி நியாயம் ஆகும்?
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொடுக்கபடுவது வெட்டி சம்பளமா? அந்த ஆசிரியர்களை கொண்டே தனி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தினால் என்ன?
எல்லா பள்ளியிலும் எல்லா வசதிகளையும் செய்துவிட்டு நுழைவுதேர்வினை நடத்தட்டும், அல்லது மதிப்பெண் அடிப்படையில் இடங்களை ஒதுக்கட்டும்
நுழைவு தேர்வு எனும் தடையால் உயிரிழந்த அனிதாவினை எல்லோருக்கும் தெரியலாம், ஆனால் எல்லா தகுதிகளும் இருந்தும் உயர்சாதிபிறப்பு எனும் ஒரே காரணத்திற்காக கழுத்தை பிடித்து வெளியே தள்ளபட்டு மனதால் செத்த பல மாணவர்களை நாம் எல்லோரும் அறிந்திருக்க நியாயமில்லை
ஒரு மாணவி செத்துவிட்டாள் என்பதற்காக வந்து இன்று எல்லா கட்சிதலைவர்களும், பல நடிகர்களும் பொங்கிகொண்டிருக்கின்றார்கள், கட்சி தலைவர்களுக்கு கவலை தாளவில்லை
யாராவது சாகவேண்டும் அதனை வைத்து அரசியல் செய்யவேண்டும் என காத்துகொண்டிருந்த இயக்கங்கள் வரிந்துகட்டுகின்றன
காரணம் என்ன?
ஒரே காரணம் செத்தது மாணவி, மாணவர்களை தூண்டிவிட்டால் வரலாறுகாணா கலவரம் வெடிக்கும், இஷ்டத்திற்கு அரசியல் செய்யலாம், குழப்பம் விளைவிக்கலாம் எனும் கொடுர எண்ணமன்றி வேறல்ல.
இப்படித்தான் இந்தி எதிர்ப்பு என ஒரு காலத்தில் மாணவர்களை அழைத்து அதில் ஏராளமானோர் கொல்லபட்டு இன்று தமிழை எப்படி காப்பாற்றியிருக்கின்றார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
ஈழம் ஈழம் என 1980களில் மாணவர்களை தூண்டிவிட்டு பின் அது பெரும் படுகொலைகளில் முடிந்து பின் கையினை பிசைந்து நின்றவர்களும் இவர்களே
ஒரு மாணவி செத்துவிட்டாள், பொங்குகின்றார்கள். அவர்கள் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள்
ஆனால் எத்தனை விவசாயி செத்தான், இந்த அளவு எவனாவது பொங்கினானா?
எத்தனை மீணவன் செத்தான், ஒரு அனுதாபம் இப்படி வந்திருக்குமா?
வராது காரனம் விவசாயிக்கும் மீணவனுக்கும் உண்மை தெரியும், இவர்கள் நம்மை காக்கமாட்டார்கள் எனும் விஷயம் புரியும், வோட்டுக்காக அழுகின்றார்கள் எனும் கபடம் தெரியும்
அதனால் அவன் தனியாக தனக்காக அழுதுவிட்டு அவன் வேலைக்கு கிளம்புவான், எப்படியாது பிழைக்க போராடுவான்.
ஆனால் மாணவர் சமூகம் அப்படி அல்ல, ஏ மாணவனே உனக்கு எதிர்காலமில்லை என்றால் அச்சமூகமே பொங்கும், அதுவும் இம்மாதிரி உணர்ச்சிகரமான நேரங்களில் பல தற்கொலைகளே நடந்து அது பெரும் ரணகளமாக வெடிக்கும்
இந்த நாட்டில் விவசாயிக்கும், மீணவனுக்கும் எதிர்காலமே இல்லை, சத்தியமாக இல்லை அதெல்லாம் பற்றி இவர்கள் பேசுவார்களா என்றால் நிச்சயமாக இல்லை. எல்லாம் நாடகம்.
ஆளாளுக்கு ஆத்திரமாய் பொங்குகின்றார்கள், நாடு ஒரு மருத்துவரை இழந்துவிட்டதாம்
ஏன் விவசாயியும், மீணவனும் சாக பிறந்தவனா?
அரசியல் செய்வதானாலும் அதனை விவசாயி, மீணவன் பிணத்தினை விட்டுவிட்டு மாணவர் பிணத்தில் செய்கின்றார்கள் அல்லவா?
இத்தனை காலம் ஆண்டதும் இவர்கள்தான், ஆள்வதும் இவர்கள்தான், இப்பொழுது ஒப்பாரி வைப்பதும் இவர்கள்தான்
இவர்களை என்ன வகையில் வைப்பது என தமிழக மக்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
நாம் அழுத்தி சொல்வது இதுதான், நீட் என வைத்து ஒரு மாணவியின் கனவை கொல்வதும் ஒன்றுதான். உயர்குடியில் பிறந்ததால் அவர்கள் கனவை கொல்வதும் ஒன்றுதான்
நுழைவுதேர்வு என அறிவித்தால் எல்லா பள்ளிகளிலும் எல்லா பயிற்சிகளுக்கும் வழிசெய்யுங்கள், அல்லது அந்த கருமாந்திரத்தை தலை முழுகிவிட்டு மதிப்பெண் அடிப்படையில் வாய்பளியுங்கள்
இரண்டையும் செய்யாமல் இடஒதுக்கீடு, தனியார் நிறுவன பயிற்சிபெற்ற நகர்புற வசதியான
மாணவர்களோடு, பயிற்சி பெறாத கிராம மாணவர்கள் கலந்து கொள்ளும் நுழைவுதேர்வு என குழப்பினால் அனிதாக்கள் எல்லா சாதியிலும், எல்லா ஊர்களிலும் உருவாகிகொண்டேதான் இருப்பார்கள்
ஏழைபெண் என்கின்றார்கள், மிக மிக வறுமையில் வாடியவர் அவர் என்கின்றார்கள்
ஆனால் உச்சநீதிமன்றம் வரை அவர் வழக்கு தொடுக்க பின்னிருந்தவர்கள் யார்? அவர் அந்த அளவு போராட பின்னால் இருந்த சக்தி எது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது
இதனை பற்றி ஏதும் சொன்னால் நீ பார்பன அடிவருடி, மோடியின் காலணி என்றெல்லாம் அர்ச்சனைகள் பறந்து வரும்.