அனுபவஸ்தர் இல்லாமல் தடுமாறுகின்றது திமுக‌

விருதுநகரில் காமராஜரை தோற்கடித்த திமுகவால் நாகர்கோவில் தொகுதியில் நெருங்கமுடியவில்லை

அந்த தேர்தல்முடிவில் கலைஞர் தோல்வியினை மறைத்து சொன்னார், “நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல நாடார் மன்ற தேர்தல்”

இப்பொழுது நலமாக‌ இருந்திருந்தால், ஆர்.கே நகர் தோல்வியினை சமயோசிதமாக திருப்பிவிட்டிருப்பார்

“நடந்தது ஜெயாவின் அரசியல் வாரிசு என்பதற்கான தேர்தல், இதில் திமுக எப்படி வெல்ல முடியும்?

ஜெயாவின் அரசியல் வாரிசு திமுக ஆகுமா?

தினகரன் என்பவர் வெல்லாவிட்டால்தான் ஆச்சரியம், நியாயபடி ஜெயாவின் வளர்ப்புமகனான சுதாகரனே வென்றிருக்க வேண்டும், அவர் சிறையில் இருப்பதால் ஜெயாவின் அரசியல் வாரிசு தினகரன் என முடிவாயிருக்கின்றது”

இப்படி பட்டும் படாமல் சொல்லி அதிமுகவில் சிண்டு மூட்டிவிட்டு நகர்வார் கலைஞர்,

அப்படி ஒரு அனுபவஸ்தர் இல்லாமல் தடுமாறுகின்றது திமுக‌