அனுமர் வானரமே தான்

ஆம் அனுமர் வானரமே தான், யார் இல்லை என மறுத்தார்கள்?குரங்கினை மனிதன் வணங்குவது பகுத்தறிவா? அதெல்லாம் ஏற்புடையதா? என கேள்வி எழுப்பும் முன்னால் அனுமன் யார் என்பதை பார்க்கலாம்ராமனே பெரும் அதிசயம் ஏதும் செய்யாத மானிட பிறப்பு, அவர் உதாரண புருஷ அவதாரமே தவிர கண்ணன் போல பெரும் மாய‌ அவதாரமில்லை.அனுமன் வால் + நரன் என சொல்லபடும் கூட்டத்தில் இருந்தான். அவர்கள் வால்முளைத்த மனிதர்கள் என்ற வகையில் இருந்தார்கள். பலமிக்க இனம் அதுஅந்த இனத்தின் வாலி ராவணனையே தூக்கி போட்டு மிதித்திருந்தான், இன்னும் ஜாம்பவான் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள்ராமன் நாடோடியாக அங்கு வந்தபொழுது ராமனின் உயரிய குணங்களை கண்டு அனுமன் அவனிடம் அடைக்கலமாகின்றான், அந்த பக்தியே அவனின் பலத்தை அவனுக்கு காட்டுகின்றதுஅனுமனின் மனக்கண்ணும் அறிவு கண்ணும் ராமனால் திறக்கபடுகின்றன‌சரி அனுமன் என்பவர் குரங்கா என்றால், டார்வின் சொன்னது என்ன?மனிதன் குரங்கிலிருந்து வந்தான்.ஆனால் மீண்டும் மீண்டும் குரங்கிலிருந்து மனிதன் ஏன் வரவில்லை, குரங்கு இன்றும் குரங்காகவே இருக்கின்றதே என்றால் ஒரு விஷேஷித்த குரங்கு இருந்தது அது மனிதனை போலவே இருந்தது என முடித்துவிட்டார் டார்வின்ஆம் டார்வின் விஞ்ஞானத்தில் சொன்னதைத்தான் அன்றே காட்சிபடுத்தி வைத்தது இந்துமதம். ஆம் அப்படி ஒரு இனம் இருந்திருக்கின்றதுடார்வின் தியரி அடிப்படையில் ஒருவிஷயமுமில்லா ஐரோப்பிய மண்ணில் பெரும் புரட்சியாக கருதபட்டிருக்கலாம், ஆனால் பன்னெடுங்கால பாரமபரியமும் இயற்கையோடு இணைந்த மதமுமான இந்துமதத்துக்கு அது ஆச்சரியமே அல்ல‌அதை எல்லாம் என்றோ உணர்ந்து பதிந்து வைத்த பூமி இதுஅக்காலத்திலே அறிவார்ந்த இனம், வால்முளைத்த மனிதர்களாக வானரம் என இருந்தார்கள். அவர்களுக்கு அரசு இருந்தது, அரசன் இருந்தான்,வீரன் இருந்தான், அவதாரமும் அங்கு இருந்தது என்பதை இந்துமதம் சொல்லி வைத்ததுடார்வினும் அவன் விஞ்ஞானமும் பின்னாளில் சொன்னதை பல லட்சம் ஆண்டுக்கு முன்பே சொல்லி அது உண்மை எனவும் சொல்லி வைத்தது இந்துமதம்டார்வினை நம்பினால் இந்துமதத்தையும் ராமாயணத்தையும் அவர்கள் நம்ப வேண்டும், ஆனால் செய்ய மாட்டார்கள்ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு உண்மையினை சொல்லும், அனுமன் பாத்திரம் அதைத்தான் சொல்கின்றதுஇந்துமதம் ஒரு கடல். ஆன்மீகம் , பகுத்தறிவு, விஞ்ஞானம், உயிரியல், விலங்கியல், வேதியியல், பொருளாதாரம் , வானியல் என எந்த நதியானாலும் அது அக்கடலில்தான் கலக்கும்அக்கடலில் இருந்தே மேகமாக எழும்பும்ராமனை எதிர்த்ததால் பெரும் சிவபக்தனும் அந்தணமும் வேதவிற்பனர்களில் சிறந்தவனுமான ராவணனுக்கு அவன் அரண்மனை கூட மிஞ்சவில்லைராமனை வணங்கியதால் வானரம் இன்றும் கோவிலோடு வணங்கபடுகின்றது.அனுமன் என்பவன் விஞ்ஞானத்தாலும் ஏற்றுகொள்ளபடும் ஒரு இந்து அடையாளம் என்பதுதான் காலம் ஒப்புகொள்ளும் விஷயம்