அன்னையர் தின வாழ்த்துக்கள்

No automatic alt text available.

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் மிக தீவிரமாக எம்ஜிஆர் ஸ்டைலில் அம்மா அம்மா என உருகிகொண்டிருந்தார்கள்.

தாய்க்கு பாரதமும், தமிழனும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்?

நிலம், ஆறு என சகலத்திற்கும் பெண் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது.

இந்திய சமூக அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி தாயினை தொழுதிருக்கின்றார்கள், தாயிடம் செய்த சத்தியத்திற்காக உயிரையே விட்டிருக்கின்றான் கர்ணன்.

இந்திய சமூகம் அப்படித்தான் இருந்திருக்கின்றது

அக்காலத்தில் கண்விழித்த உடன் ஒருவன் தாயின் கால்களில் விழுந்து வணங்குவது இந்திய குடும்பங்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. தாய் என்பவளை அந்த ஸ்தானத்தில் வைத்திருந்தது நமது பாரம்பரியம்.

“அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்றதும், தாயிற் சிறந்தகோயிலுமில்லை என சொன்னதும் தமிழன்.
இன்றும் தமிழகத்தில் மனைவியினை தவிர எல்லா பெண்களையும் அம்மா அல்லது தாயே என அழைப்பதுதான் பண்பாடு.

எல்லா பாசத்தினையும் வெறுத்து துறவியான பட்டினத்தார் கூட, தாய்பாசத்தில் உருகி அழியா பாடல்களை கொடுத்திருப்பதை கவனித்திருக்க முடியும்

கிராமங்களில் வயது குறைந்த சிறுமிகளையும் “தாயீ” என அன்போடு அழைப்பதுதான் நமது சிறப்பு.

இப்படியாக நம்மிடம் அன்னை பற்றி ஏதும் இல்லாதது போலவும், வெள்ளையன் மே 14ம் தேதி கொண்டாட சொன்ன பிறகுதான் நாம் மறக்காமல் அந்த நாளில் அன்னையினை நினைவு கூறவேண்டும் என்பதும் நகைப்புகுரியது.

இதற்கெல்லாம் பெரும் காரணம், கல்வியில் நமது பண்டைய நாகரீகங்களை தாங்கிய, பாரம்பரியங்களை தாங்கிய கல்வியினை கற்பிக்காதது.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என ஒரு
தமிழ்குழ்ந்தை படித்திருக்குமானால் அது மே 14ல் மட்டும்ற்கு வியந்து நிற்காது, தமிழகம் இப்படி கொண்டாடாது.

பண்டைய ஓலைசுவடிகள் மறைந்து நமக்கு அச்சிக்கு வந்தது மிக சொற்பமே, அவற்றையும் நாம் தொலைத்துகொண்டிருக்கின்றோம்.

அன்னையினை வணங்கினால் எல்லா ஆசீர்வாதமும் கிடைக்கும் என என்பதில் சந்தேகமே இல்லை

இன்றும் பாருங்கள், தமிழக அரசியல் மற்றும் சகல துறைகளில் உச்சம் பெற்றிருக்கும் பலரினை பாருங்கள், கடவுளை வணங்கி இருக்கமாட்டார்கள், ஆனால் தாயினை வணங்குபவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் எவ்வளவு அநியாயக்காரராயினும், பெரும் அயோக்கியர்களாயினும் தாயினை வணங்கியதால் பெற்ற ஒரே ஆசீர்வாதம் அவர்களை தாங்கி நிற்பது கண்கூடாய்
தமிழகம் கண்ட அன்னையின் சிறப்பு அப்படி.

அன்னையினை வணங்கும் எல்லோருக்கும் எல்லா நாளும் அன்னையர் தினமே

எங்கோ தொலைதூரத்தில் இருந்து கொண்டு தாயின் குரலில் “நல்லா இருக்கியாய்யா” என்ற வார்த்தையினை கேட்டவுடன் , பொங்கி வரும் அழுகையினை மறைத்துகொண்டு பேசி முடித்துவிட்டு, போனை வைத்தபின் ஓவென அழும் மகன்களுக்கும், மகள்களுக்கும் எந்நாளும் அன்னையர் தினமே

இப்பக்கம் இவர்கள் அழுதால், அப்பக்கம் பிள்ளைகளிடம் கஷ்டத்தை சொல்லாமல் தாய் அழுதுகொண்டிருப்பாள்

தாய்பாசம் அவ்வளவு வலிமையானது..

முகநூல் எல்லாவித‌ நண்பர்களையும் கொடுக்கும், சிலருக்கு காதல்களையும் கொடுக்குமாம்

ஆனால் சில நேரங்களில் அன்னையினையும் கொடுக்கின்றது, அப்படி நமக்கெல்லாம் அன்னையாக கிடைத்திருப்பவர் Savithri Ramakrishnan அவர்கள்

அவருக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து