அன்புசெழியன் அலுவகத்தில் வருமான வரி சோதனை நடக்காதா?
இந்த அன்புசெழியன் என்பவர் அலுவகத்தில் எல்லாம் வருமானவரி சோதனை எல்லாம் நடக்கவே நடக்காதா?
எல்லா விஷயத்திலும் வரிந்து கட்டும் கமல்ஹாசன் என்பவரை அன்புசெழியன் விவகாரத்தில் காணவில்லை
இன்னும் பலரையும் காணவில்லை, அவர்களில் விஜயும் அவர் தகப்பனார் எஸ்.ஏ சந்திரசேகரும் ஒருவர்.
அன்புசெழியன் இல்லாவிட்டால் தமிழக சினிமா இல்லை எனும் அளவிற்கு அஞ்சி கிடக்கின்றது திரையுலகம் என்கின்றார்கள்
அன்புசெழியன் யாரால் உருவானார் என்பதும், அவர் மூலம் திரையுலகம் யாரால் கட்டுபடுத்தபட்டது என்பதும் தெரியும் சூழல் இது
அன்புசெழியனுக்கு ஏது இவ்வளவுபணம் என உலுக்கினாலே பல உண்மைகள் வரும், இப்படி 197 இடங்களில் ரைடு செல்லும் அவசியம் வராது.
சினிமா வரலாற்றில் எப்பொழுதும் இல்லாமல் மதுரை கதைகள் அதிகமாக சினிமாவாக வந்தபொழுது ஏற்பட்ட சந்தேகம் இப்பொழுதுதான் தீர்ந்தது
அண்ணனை குளிப்பாட்ட அத்தனை மதுரை கதைகள் வந்திருக்கின்றன, திருவிளையாடல் படத்திற்கு பின் அதிக மதுரைபடம் வந்தது இப்படித்தான், அதற்கு வட்டி குறைவு போல..
அண்ணன் அப்படி அசுர சக்தியாக வந்திருக்கின்றார். செட்டியார்கள், மார்வாடிகள் எல்லாம் விரட்டபட்டு அன்புவினை சுற்றியே திரையுலகம் இயங்கியிருக்கின்றது.
(இன்னும் கொஞ்சநாளில் அன்புசெழியன் “தியாக தயாரிப்பாளர்”, “வட்டி தள்ளிய வள்ளல்” என்றெல்லாம் போஸ்டர் அடிக்கபடும் என்கின்றார்கள், அந்த அளவு சினிமா அடிவருடிகள் அவரை சுற்றி இருக்கின்றன)
ஆக அன்புசெழியனை முடக்கிவிட்டால் தமிழ் திரையுலகம் அழிந்துவிடுமாம்
அந்த மகா அவசியமான நல்லகாரியத்தை உடனே போர்கால அடிப்படையில் செய்தால்தான் என்ன?
தமிழகம் உருப்பட எப்படி ஒரு வாய்ப்பு, தவற விடலாமா?