அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம்
அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம், முதல் படத்தில் அன்புவிடம் சிக்கிவிட்டு இரண்டாம் படத்தை அன்புசெழியனால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தவர்கள் படமெல்லாம் வரபோகின்றதாம்
அதாவது என் கடனை கொடுத்துவிட்டு படத்தை வெளியிடு, இல்லாவிட்டால் மதுரை பாஷையில் சாகும் வரை திட்டுவேன், திட்டியே கொல்வேன் என மிரட்டி தடுக்கபட்ட படங்கள் அவை ..
(மனிதர் அப்படித்தான் செய்திருக்கின்றார், கொலை எல்லாம், அடித்து சித்திரவதை எல்லாம் செய்யவே இல்லை மாறாக அவ்வளவு அவமானமாக திட்டுவாராம், உடனே சிலர் செத்துவிடுவார்களாம்)
இப்போதிருக்கும் நிலையில் அவற்றை தடுத்தால் அன்புசெழியன் மீது என்கவுண்டர் வரை நடக்கும் என்பதால் அவர் தரப்பு ” எப்படியும் நாசமாய் போங்கள், எங்கள் பணத்தை கொடுக்காமல் வெளியிடபடும் படம் ஓடவே ஓடாது.” என சொல்லிவிட்டு அழுதுகொண்டே அனுமதிக்கின்றதாம்.
சில படங்கள் வாடிவாசலில் விடபடும் காளை போல துள்ளிகுதித்து வரலாம் என்கின்றார்கள், வரும் எண்ணிக்கையினை பொறுத்து அன்புசெழியனின் பராகிரமம் தெரியலாம்
அது இருக்கட்டும், பேசியே கொல்லும் அன்புசெழியன் அப்படி என்ன பேசுவார்? அதை கேட்டு சாகெல்லாம் செய்கின்றார்களாம்
அன்புசெழியனை பிடித்தால் தண்டிக்க எல்லாம் வேண்டாம் கலைஞர் முன்போ (அவர் நலம்பெற்ற உடன்) அல்லது தமிழிசை முன் பெர்மானன்ஸ் செய்ய வைக்க வேண்டும்
அன்பு செழியனால் முடிந்தமட்டும் திட்ட வைக்க வேண்டும்
இருவரும் அசருவார்களா? கொஞ்சமும் கலங்குவார்களா? என்னதான் அன்புசெழியன் பேசினாலும் கொஞ்சமும் அசைவார்களா? நெவர், மாறாக புன்னகைத்து விட்டு அவ்வளவுதானா, சோடா குடித்துவிட்டு தொடருகின்றீர்களா? என்பார்கள்.
அதன்பின் என்ன, அன்புசெழியனே தூக்கு கயிறு தேடி ஓடுவாரா மட்டாரா?