அன்று நடந்திருப்பது இப்பொழுது புகைகின்றது
இந்தியாவின் இரு போர்விமானத்தை வீழ்த்தினோம் என அபினந்தன் கைதுசெய்யபட்டபொழுது சொல்லிகொண்டிருந்தது பாகிஸ்தான்
சரி ஒன்று மிக் விமானம் அபிநந்தனுடையது, அந்த இன்னொரு விமானம் என்ன வகை? பைலட் யார் என இந்தியா கேட்டதற்கு பாகிஸ்தான் பதில் சொல்லவே இல்லை, “அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்” என தீபா சொன்னது போல சொல்லிகொண்டிருந்தது
இப்பொழுது மாபெரும் பல்டி அடித்திருக்கின்றது, ஒரு வகையில் இது அவர்களுக்கு அவமானம்
ஆம் இரண்டு விமானம் அல்ல, ஒரு விமானத்தைத்தான் வீழ்த்தினோம் என பாகிஸ்தான் ராணுக செய்தி தொடர்பாளர் அறிவித்திருக்கின்றார்
அவருக்கு தவறான தகவல் சொல்லபட்டதாம், ஜனகராஜ் ஸ்டைலில் சாரி.. என இழுக்கின்றார்
சரி பரவாயில்லை உண்மையினை இப்பொழுதுதாவது திருந்தினார்களே என பார்த்தால், நாங்களாவது திருந்துவதாவது என அடுத்த குண்டை வீசுகின்றார்கள்.
அதாவது ஒரு விமானம் வீழ்த்தியதுதான் உண்மையாம், அப்படியே இனொரு உண்மையும் உண்டாம்
அது என்னவென்றால் அவர்கள் விமானம் இந்தியா பக்கம் வந்த பொழுது இந்தியாவின் நடமாடும் ஏவுகனை தளங்களை எல்லாம் இடம் மாற்றி பதறியதாம் இந்தியா, அது ஏன் என இந்தியாதான் விளக்க வேண்டுமாம்
அதாவது அவர்கள் ஏதோ விவகாரத்தை கிளறுகின்றார்கள்
அன்று எல்லை தாண்டி பால்கோட்டை விமானபடை அடித்தாலும் ஏவுகனை உட்பட பல விவகாரங்களோடு இந்தியா தயாராக இருந்திருக்கின்றது
அதாவது தாக்குதலுக்கு பின் ஏவுகனை ஏவும் சாதனம் உட்பட இந்தியா தயாராகியிருக்கின்றது
அந்த தகவலை பெற்ற பாகிஸ்தான் இந்திய ஏவுகனை தளங்களுக்கு ஏதோ ஆபத்தை விளைவிக்க வந்திருக்கின்றது
அப்பொழுது ஏதோ நடந்திருக்கின்றது
அதைத்தான் இழுத்துவிடுகின்றது பாகிஸ்தான், ஏன் இந்தியா அதை மறைக்கின்றது என விவகாரத்தை இழுக்கின்றது
இந்தியாவோ “ஏன் என்ன நடந்தது என அவர்கள் சொல்லமாட்டார்களாமா? ஏதும் நடந்தால்தானே சொல்வார்கள், அவர்கள் அப்படித்தான்” என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது
விவகாரம் இனி எப்படி திரும்பும் என பார்க்கலாம், ஆனால் ஏதோ அன்று நடந்திருப்பது இப்பொழுது புகைகின்றது