அன்றொரு நாள் அதே மதுரையில் இந்திரா….

இன்று இந்திய தமிழக மாகாண அமைச்சர் தியாகராஜன் கார்மேல் செருப்பு வீசபட்டு சில சர்ச்சைகள் வெடித்திருக்கலாம், திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த சரவணன் போன்றோர் இதனால் கட்சிவிட்டு விலகியும் இருக்கலாம்

ஆனால் இம்மாதிரி கல் எறி, செருப்பு சம்பவங்கள் ஏன் கொலைமுறயர்சிகளை கூட தமிழக அரசியலில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலே தொடங்கி ஏகபட்டமுறை செய்த கட்சி திமுக‌

அக்கட்சியின் வரலாறெல்லாம் இம்மாதிரி வன்முறைகளாலே நிரம்பி கிடக்கின்றது

இன்று மதுரையில் திமுக அமைச்சருக்காக பொங்குகின்றார்கள், அதுவும் எல்லையில் உயிர்நீத்த ராணுவவீரனின் அஞ்சலியில் சர்ச்சை நடந்திருக்கின்றது

உண்மையில் ஆழமாக நோக்கினால் அந்த வீரனின் சாவுக்கு காரணம் காஷ்மீர் பிரச்சினை, அந்த காஷ்மீரில் இப்பொழுதுவரை பூரண ராணுவநடவடிக்கைக்கு சம்மதிக்காமல் மகபூபாவினை ஆதரித்து சர்ச்சை அரசியல் செய்யும் கட்சி திமுக‌

அவ்வகையில் அமைச்சர் தியாகராஜனுக்கோ திமுகவினருக்கோ அந்த அஞ்சலிக்கு செல்ல தகுதியே இல்லை, இந்த குழப்பங்களுக்கும் சாவுக்கும் அவர்களும் மறைமுக காரணம் என்பதை மறுக்கமுடியாது

இந்நிலையில் இன்று “அய்யய்யோ பாஜகவினர் வன்முறை” என்பவர்கள் சில வருடங்களுக்கு முன்பு மோடியினை திமுகவினர் விரட்டியதை கூட மறந்திருக்கலாம் அவர்களுக்காக 1978ல் இதே மதுரையில் அன்றைய இந்திரா காந்தியினை திமுகவினர் கொலைவெறியுடன் தாக்கி விரட்டி அடித்ததை சொல்லத்தான் வேண்டும்

977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 2 மாதங்களில், காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி தமிழகத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டார்.

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காரணமாக ஆட்சியை இழந்ததுடன், அடக்குமுறைக்கும் ஆளான திமுக, அதற்காக இந்திரா காந்திக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 29.10.1977 அன்று மதுரை வரும் இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தது.

திமுகவின் இந்த போராட்ட அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக மீது சர்க்காரியா ஆணைய விசாரணை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பாய்ந்ததால், அதிலிருந்து தப்புவதற்காக மொரார்ஜி தேசாய் அரசை குஷிப்படுத்தும் வகையில் இந்திரா காந்தி மீது தாக்குதல் நடத்த திமுக சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் செய்திகள் பரவின.

இதையடுத்து சென்னையில் இந்திரா காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், அதையும் தாண்டி இந்திரா காந்தி மீது மிகப்பெரிய கொலைவெறித் தாக்குதலை திமுகவினர் நடத்தினார்கள்.

அதன் உண்மையான காரணம் அன்று ஆட்சியினை இழந்திருந்த இந்திராவினை சர்காரியா கமிஷனுக்காக குறிவைத்து அடித்தனர் திமுகவினர்

29.10.1977 அன்று மதுரைக்கு வந்திருந்தார் இந்திரா

அதே நேரம் மதுரை ரேஸ்கோர்ஸ் திடலில் பேசுவதாக இருந்தது. தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்ட மிக “பலமான’ ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். திமுகவினர் மட்டும் கொந்தளிப்பாக இருந்தார்கள் மதுரை மக்களுக்கு இந்திரா பிடித்தமானவராக இருந்தார்

மதுரை தெற்கு வாசல் அருகே இந்திரா வந்தபொழுது , திமுகவினர் சூழ்ந்து கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர்

அப்பொழுது ஆளதொடங்கியிருந்த எம்ஜி ராமசந்திரனுக்கு பெரும் நெருக்கடி, இந்திராவுக்கு மிரட்டல் என அந்த தாக்குதல் இருந்தது

சில கற்கள் கார் கண்ணாடியினை உடைத்து இந்திராவின் மூக்கை தாக்கின அவருக்கு ரத்தம் கொட்டிற்று

காரில் பழ.நெடுமாறன் நான், மரகதம் சந்திரசேகர், ஆர்.வி. சுவாமிநாதன், சித்தன் ஆகியோர் இருந்தார்கள்

தாக்குதலின் வீரியத்தை கண்ட நெடுமாறனும் சித்தனும் இந்திராவினை காருக்குள் மறைத்து மேலே தலையணைகளை அடுக்கி காரை வேகமாக செலுத்த சொன்னார்கள்

அந்த டிரைவர் மிக சாமர்த்தியமாக நடைபாதையில் காரை ஏற்றி திருப்பி வேகமாக கூட்டத்தை கடந்து சென்றார்

பின் பாதுகாப்பான சர்க்கிள் ஹவுஸ் பகுதிக்கு அவரின் கார் விரைந்தது, பாதுகாப்பு பலபடுத்தபட்டு பத்திரமாக டெல்லி சென்றார் இந்திரா

அந்த தாக்குதல் நாடுமுழுக்க பெரிய அலையானது, ஆனால் தமிழகத்தில் சில திமுகவினர் வெறுமைக்கு கைதுசெய்யபட்டு விடுவிக்கபட்டனர்

பின்னாளில் இந்திரா கொலையாளிகளுக்கு அதுவே உந்துசக்தி ஆகியிருக்கலாம்

அப்பொழுது கருணாநிதி சொன்ன வார்த்தைகள்தான் அவரின் இன்னொரு முகத்தை காட்டின , இந்திரா ரத்தம் வழிய தப்பி சென்றார் என்ற செய்திக்கு மிக கொச்சையான பதிலை சொன்னார் கருணாநிதி

“பெண்ணின் சேலையில் படும் ரத்தத்திற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்”

இந்த தரகுறைவான வார்த்தைகளுக்கு பெரும் கண்டனங்கள் வந்தன, கட்சி தலைவராக கருணாநிதி பதிலளிக்க பெரும் நெருக்கடி தரபட்டது

அப்பொழுதும் ” தமிழர்களின் உணர்வுகளை இந்திரா புரிந்துகொள்ள வேண்டும்” என்பதோடு நிறுத்திகொண்டார் அந்த கருணாநிதி

இந்த சம்பவத்தின் சாட்சிகள் இன்றும் நெடுமாறனாகவும் இன்னும் பலராகவும் உண்டு

இப்படியெல்லாம் இந்திராவினை கொல்லமுயன்று அவமானபடுத்திய திமுக பின் “நேருவின் மகளே வருக” என காலில் விழுந்ததெல்லாம் வேறுவகை அதே நேரம் இந்திராவுக்கும் மானமில்லை என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

இன்று மதுரையில் பழனிவேல் ராஜனுக்கு நிகழ்ந்தது பற்றி பொங்குவோர் அன்று இந்திராவுக்கு நிகழ்ந்ததை பற்றி பேசவே மாட்டார்கள்

குறிப்பாக காங்கிரசார் பேசவே மாட்டார்கள், ஏன் என்றால் இந்திராவுக்கே பின் மானமில்லாமல் போயிற்று அதை காங்கிரசாரிடம் எதிர்பார்த்தால் எப்படி?