அப்சல்கான் Vs சிவாஜி

அப்சல்கான் சுமார் 300 கிலோ எடை கொண்டவன், 7அடி நெருங்கும் உயரம் கொண்டவன், பீரங்கியினை இழுக்கும் காளைகளே முடியாத இடங்களில் தனி ஒருவனாக பீரங்கியினை தூக்கும் வலிமை கொண்டவன், தன் தோளில் இருவரை சுமந்துதான் உடல்பயிற்சி செய்வான், சிறந்த மல்யுத்த வீரன், அவன் ஒருவனை வளைத்து பிடித்தால் அவனிடமிருந்து தப்ப முடியாது

வஞ்சம் பேசி ஏமாற்றி கொல்வதில் வல்லவன், தெற்கே பல நாயக்க சிற்றரசர்களை சமாதானம் பேச வரவைத்து கொன்றவன், எதிரி பலமானவனாய் இருந்தால் அவனின் கூட்டாளிகளை பிரித்து அவனை பலவீனபடுத்தி கொல்பவன் என்றெல்லாம் தகவல்கள் வந்தன‌

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த சிவாஜி தனக்கு ஆதரவான நிலஜாகீர் தலைவனுக்கெல்லாம் அவசர செய்தியினை அனுப்பினான்

அப்சல்கான் வந்தால் யாரும் எதிர்க்கவேண்டாம், அவனுக்கு கட்டுபட்டதாக சொல்லுங்கள், அவனை முன்னேற விடுங்கள், இதற்கெல்லாம் இப்பொழுது விளக்கம் சொல்லமுடியாது, அவனுடன் சண்டையிட வேண்டாம் அவனை வரவேற்று உள்ளே அனுப்புங்கள் இது சிவாஜி உத்தரவு

இது சிவாஜியின் தளபதிகளுக்கும் கூட்டாளிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்திற்று ஆனாலும் சிவாஜி செய்வதில் காரணம் இருக்கும் என நம்பி அவன் உத்தரவிட்ட வண்ணமே செய்தனர்

இதனால் நிலஜாகீர்தாரர்களை ஆசைகாட்டி ஏமாற்றும் அப்சல்கானின் தந்திரத்தை முதலிலே முறியடித்தான் சிவாஜி, காரணம் இதை செய்யாவிட்டால் நிச்சயம் பணத்துக்கு விலைபோகும் யாரோ ஒருவர் சிவாஜிக்கு சிக்கலை உருவாக்கியிருக்கலாம் அல்லது அப்சல்கான் அவர்களை அடியோடு ஒழித்திருக்கலாம்

சிவாஜியின் உத்தரவுபடி அப்சல்கான் வரும்பொழுது எதிர்ப்பே இல்லை, சிவாஜி மோதவருவான் அவனை சுற்றிவளைத்து பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும் என முடிவோடு வந்த அப்சல்கானுக்கு இதெல்லாம் ஆச்சரியமானது

அப்சல்கானுக்கு முதல் இன்ப அதிர்ச்சியினை கொடுத்தவன் சிவாஜியின் கூட்டாளி கண்டோஜி தாதே

அப்சல்கானை பன்ஹாலி கோட்டை அருகே எதிர்கொண்ட அவன் அப்சல்கானிடம் பணிந்தான் கண்டோஜி

அந்த வழியாகத்தான் அப்சல்கான் கடந்து செல்லவேண்டும் அங்கு போரை எதிர்பார்த்த நிலையில் அப்பகுதி தலைவன் வந்து தானே பணிந்ததில் அப்சல்கானுக்கு பெரும் சந்தோஷம்

கண்டோஜி தொடர்ந்தான் “மாவீரரான அப்சல்கானே, ஏதோ சிவாஜியின் மிரட்டலுக்கு பயந்து நாங்கள் அவனை ஆதரித்தது உண்மை, ஆனால் நாங்கள் பிஜப்பூரின் விசுவாசிகள்

உங்கள் பலம் என்ன? படை என்ன? கோட்டை என்ன? உங்கள் நகத்துக்கு அந்த சிவாஜி தாங்குவானா? அவனை நம்பி உங்களிடம் மோத எங்களுக்கென்ன பைத்தியமா? நீங்கள் எங்களை மீட்க வந்த தெய்வமய்யா, நாங்கள் உங்களை அனுமதிக்கின்றோம், எங்களுக்கு சேதமில்லா வகையில் நிலங்களை கடந்து சென்று அவனை ஒழியுங்கள்” என கோரிக்கை வைத்தான்

கண்டோஜியின் இந்த வார்த்தைகளை கேட்டதும் தொடை தட்டி சிரித்தான் அப்சல்கான்

“இதுதான் சிவாஜிக்கும் எனக்குமுள்ள வித்தியாசம், என்னை கண்டதுமே அவனை விட்டு இங்கு ஓடிவந்துவிட்டார்களா? இதில் ஆச்சரியமென்ன? வாழ விரும்புகின்றவர்கள் நம்க்கு அடிமை ஆவது சகஜமல்லவா?” என சொல்லி வடக்கே இன்னும் நகர்ந்தான் எங்கும் அவனுக்கு எதிர்ப்பே இல்லை

இது சிவாஜி தன்னை உள்ளேவிட்டு அடிக்கும் தந்திரம் என்பதை அறியா அப்சல்கான் அப்பகுதியே தன் கட்டுபாட்டுக்குள் வந்தது போல் படை நகர்த்தினான்

சிவாஜியின் சூழ்ச்சி அறியாமல் உள்ளே வந்த அவன், தன் படைகளை இரண்டாக பிரித்து தன் மகன் பாசில் கான் என்பவனோடு சேர்த்து தன் தளபதி சித்தி ஹலில், கட்டே என்பவனை ஒரு பிரிவுக்கு தலைவனாக்கி கிழக்கு பக்கம் வழியாக வடக்கே அனுப்பினான், அந்த படை புனே, சூபே பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டது

சித்தி அல்லது சித்தி என்பது அரபு தேசங்களின் வீரர்களுக்கான பெயர், அதாவது ஆப்ரிக்கர் அல்லாமல் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் இருந்து வந்த வீரர்களின் பெயர்கள்

தெற்கே அப்சல்கான் தயாராய் இருந்தான், அவனை அண்டி சர்வார் கான் எனும் என்பவன் ஹப்சி அல்லது ஹாப்சி எனும் ஆப்ரிக்க வீரர்களுடன் தயாராய் இருந்தான்

ஆப்ரிக்கர்கள் உடலாலும் செயலாலும் மூர்க்கமானவர்கள் என்பதால் அவர்களை சேர்க்க ஒரு ஆர்வம் சுல்தான்களுக்கு இருந்தது, அவர்களும் அடிமைகளாகவோ இல்லை நல்ல கூலிக்கே ஓடிவந்தார்கள்

ஆம் இங்கு அப்படித்தான் வெளிநாட்டு சேனை இருந்தது, அரேபியா ஆப்கன் உஸ்பெக் என ஒரு இனதொகுதியின் படை இருந்தது, ஈரானியர் துருக்கியர் என இன்னொரு பிரிவு இருந்தது

ஆப்ரிக்க பகுதியில் இருந்து திரட்டிவரபட்ட இன்னொரு பிரிவும் இருந்தது, எல்லோரும் அடியாட்களாய் இந்தியா வந்து அள்ளலாம் என குவிந்தனர், பலர் அள்ளினர் சிலர் ஆட்சியினையும் பிடித்தனர்

இந்தியர்களுக்கான அரசு ஏதும் இன்றி எல்லாம் ஆப்கானியர்களின் அரசாக இருந்ததால் இம்மாதிரி கூலிபடைகளின் மிகபெரும் வேட்டைகாடாக இருந்தது அன்றைய இந்துஸ்தானம், இந்துஸ்தானம் என்பது பெயரளவில் இருந்ததே தவிர உள்ளூர அது அமீரகமாகத்தான் இருந்தது

சித்தி என ஆப்கானிய வீரர்களும், ஹாப்சி எனும் ஆப்ரிக்க வீரர்களும் கொண்ட படையினைத்தான் கொண்டு வந்து குவித்திருந்தான் அப்சல்கான்

இப்பொழுது சிவாஜியினை 4 பக்கமும் முற்றுகையிட்டான் அப்சல்கான், ஆம் மேற்கே அபீச்னியர் உதவியுடன் களமிறங்க தயரான படை, வடக்கும் கிழக்கும் பாசில்கான், சித்தி ஹிலால் படைகள் தெற்கே அப்சல்கான் மற்றும் சர்வார்கான் படைகள் என மிகபெரிய வளையத்தில் சிவாஜியினை வளைத்திருந்தான்

இனி இந்த வட்டத்தை சுருக்கி சிவாஜியினை வளைத்து பிடிப்பது அவன் திட்டம், ஏப்ரல்மாதம் அப்பக்கம் வந்தவன் எதிர்ப்பு ஏதுமில்லாததால் சிவாஜிக்கு தூது கடிதம் அனுப்பினான்

தூது என்றால் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது கோட்டையினை இடித்து கொல்வோம் எனும் இரண்டே வாய்ப்பு, இது சம்பிரதாயமான ஒன்று

சிவாஜி சில நாட்கள் காலம் கடத்தினான், தான் சண்டையிட விரும்பவில்லை என்றும் மிகபெரிய பிஜப்பூர் சேனையினை கண்டு தான் அஞ்சியது போலவும் செய்திகளை பரப்பினான்

உண்மையில் அவன் ஒரு விஷயத்துக்கு காத்திருந்தான் அது ஜூன் ஜூலை காலங்களில் மராட்டியத்தில் பெய்யும் கனமழை, அந்த மழை வந்தால் அப்சல்கான் திணறுவான் என கணக்கிட்டான் சிவாஜி

அவன் கணிப்பு பொய்க்கவில்லை இருமாத மழையில் வசமாக சிக்கினான் அப்சல்கான், சிவாஜி இன்று நாளை என சரணடைதலை இழுத்து தன்னை மழையில் சிக்க வைத்துவிட்டதை உணர்ந்து பல்லை கடித்து அமைதியானான்

அதே நேரம் மலைக்கு சண்டையிட செல்லவும் அவனுக்கு மனமில்லை காரணம் மலைசண்டை அவனுக்கு தெரியாது, மேலே இருந்து சிவாஜி படைகள் தாக்கினால் அது சிவாஜிக்கே முழு பலம் என்பதும் அவன் அறியாததல்ல‌

இந்த பெரும் சேனை மலை யுத்தத்துக்கு ஆகாது என்பதால் சிவாஜியினை மலையில் இருந்து இறக்க முடிந்தவரை முறசித்த்தான் அப்சல்கான், ஆனால் சிவாஜி திறமையாக நாட்களை கடத்தினான்

மழை சற்று குறைந்ததும் தன் முற்றுகையினை ஒருமாதிரி செய்தான் அப்சல்கான் சிவாஜியின் கோட்டைகளை துண்டித்தான் ஒரு கோட்டைக்கும் இன்னொரு கோட்டைக்கும் இடையே தடுப்புகளை ஏற்படுத்தினான், சிவாஜியின் பகுதி ஆங்காங்கே துண்டிக்கபட்டது

இது கோட்டையின் வழங்கலை அதாவது உணவு உள்ளிட்டவற்றை துண்டிக்கும் எச்சரிக்கை சிவாஜி இதனால் வழிக்கு வருவான் என காத்திருந்தான்

ஆனால் சிவாஜி வரவில்லை மழைகாலம் முடிந்து ஆகஸ்டு மாதம் வந்தது

சிவாஜியினை சமவெளிக்கு இழுக்க மிக கொடிய திட்டம் ஒன்றை தீட்டினான் அப்சல்கான் அது அவனின் பிரத்யோக பாணியான இந்து ஆலயம் உடைப்பு

பல ஆலயங்களை உடைத்தான், சிவாஜி பல்லை கடித்தபடி சரியான நேரத்துக்கு காத்திருந்தாலும் அவனுக்கு அவகாசம் கொடுக்கமுடியாதபடி மிகபெரிய கொடூரம் ஒன்றை அரங்கேற்றினான் அப்சல்கான்

பண்டரிபுரம் விட்டல் ஆலயம், துல்ஜாபூர் பவானி ஆலயம் என பிரசித்தியான ஆலயங்களை தாக்கி அங்கே பசுவினை வெட்டி ரத்தம் தெளித்து தன் அட்டகாசத்தின் உச்சியில் இருந்தான்

அப்சல்கானுக்கு அஞ்சி துல்ஜாபூர் பவானி சிலையினை பக்தர்கள் மறைத்து வைத்திருந்தனர் பூஜையெல்லாம் இல்லை, விட்டல்நாதர் ஆலயத்துக்குக்கும் அதுவே நடந்தது

அப்சல்கான் அப்படி மிரட்டி கொண்டிருந்தான், மிக வேகமாக இருந்தான்

ஆம், அவனுக்கு பெரும் அச்சமும் உள்ளூர இருந்தது அது ஒருவேளை மொகலாயர் இங்கே வந்தாலும் வரலாம் என அஞ்சினான் இதனாலே வேகமாக காட்சிகளை முடிக்கத்தான் ஏப்ரல் மாதமே கிளம்பினான் ஆனால் சிவாஜியின் தந்திரத்தால் மழைகாலத்தில் சிக்கி கொண்டான்

மக்களுக்கு சொல்லணா கோபமும் ஆத்திரமும் வந்தது, ஆனால் சிவாஜி ஏதாவது செய்வான் என தங்கள் கண்ணீரை துடைத்து கொண்டிருந்தனர் அவர்கள் பிரார்த்தனை அதிகமாயிற்று, அந்நேரம் அவர்கள் செய்ய கூடியது அதுதான் அதை கண்ணீரோடு செய்தார்கள்

இந்துபெணகள், இந்து ஆலயங்கள், பசுக்கள் என தொட்டால் சிவாஜி பொங்கி வருவான் என்பது அப்சல்கானுக்கு தெரியும் அதனால் அதை தந்திரமாக செய்தான்

ஒரு கட்டத்தில் சிவாஜியும் இதில் சிக்கினான், ஆம் சிவாஜி இனி பொறுப்பதில்லை என யுத்தத்துக்கு கிளம்பியபொழுது அவனை இரு விஷயங்கள் தடுத்தன‌

சிவாஜியின் ஆஸ்தான ஜோதிடர்கள் அந்நேரம் யுத்தம் தொடங்குவது சரியல்ல என்றார்கள், ஒரு இந்து தலைவனாக ஜோதிடர்கள் சொல்வதை அவன் நம்பினான் அதில் உண்மை இருந்ததையும் உணர்ந்தான்

ஜாதக ரீதியாக அது அவனுக்கு சோதனையான காலம், பொதுவாக யுத்தங்கள் சில பிரயாணங்களை குறிப்பிட நாளில் தொடங்க கூடாது, 12 நட்சத்திரங்களின் நாளில் சென்றவர்கள் திரும்புவதில்லை

இந்து மதத்து வானியல் பாரத கண்டத்தின் எல்லா இடங்களிலும் இருந்தன, அதை சமஸ்கிருதம் எனும் பொது மொழி இணைத்தது

இதனால் தமிழர், தெலுங்கர், ஒரியர், மராட்டியர் என மொழியாக பிரிந்தாலும் இந்து எனும் சங்கிலியால் ஒரே வகை வானியல் பின்பற்றபட்டது

ஒரு தமிழ் சித்தரும் சொல்வார்

“ஆதிரை பரணி ஆரல்

ஆயில்யமுப் பூரம் கேட்டை

தீதுறு விசாகம் சோதி

சித்திரை மகம்ஈ ராறும்

மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார்

பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே”

பரணி, கிருத்திகை , திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்கள் பயணத்துக்கோ வெளிகிளம்பவோ ஏற்றவை அல்ல, அந்நாளில் முயன்றால் தேரை பாம்பின் வாயில் மாட்டியது போல் மாட்டுவார்கள் என்கின்றார் சித்தர்

இந்த நம்பிக்கையும் பாரம்பரியமும் இந்துஸ்தானம் முழுக்க இருந்தது

இதனால் ஜாதக ரீதியாக இந்துக்கள் இந்நாளில் ஏதும் தொடங்குவதில்லை ஆனாலும் சிவாஜி திருஞானசம்பந்தரின் “கோளாறு பதிகம்” சொல்லி வாதிட்டான்

அந்நாளில் தெற்கில் இருந்து தென்னக மொழிகளில் இருந்து இந்து காவியங்கள் வடக்கே செல்வதும் வடக்கே இருந்து தெற்கே வருவதும் இயல்பானவை, சமஸ்கிருதம் அந்த சங்கிலி இணைப்பாக இருந்தது, பெரியபுராணம் கூட வடமொழியில் உண்டு, சிவாஜி அதை தாதாஜி கொண்டதேவ் மூலம் அறிந்திருந்தான்

ஆம் பெரிய புராணம் எனும் சைவ நூல் சமஸ்கிருதத்துக்கு முன்பே மாற்றபட்டது அதற்கு “சிவபக்தி விலாசம்” “உபமன்யு விலாசம்” என இரு நூல்கள் உண்டு வெவ்வேறு ஞானியர் மொழிபெயர்த்தது

இந்த கல்வெட்டு காஞ்சி கோவிலில் கூட உண்டு, இந்த உபமன்யு விலாசம் தமிழக பெரிய புராணம் சொல்லா அரும்பெரும் தகவல்களையெல்லாம் சொல்லும்

ஆம் தமிழக நாயன்மார்கள் வரலாறு இந்தியா எங்கும் சைவர்களால் போற்றபட்ட காலம் இருந்தது, மராட்டியரும் அதை படித்தனர், பெங்களூர் பகுதியோடு தொடர்புடைய கொண்டதேவும் அதை கற்றிருந்தார் அதைத்தான் சிவாஜிக்கு சொல்லி கொடுத்திருந்தார்

ஜாதககட்டம் மோசமானால் கோளறு பதிகம் பாடி சென்றால் துன்பமில்லை எனும் நம்பிக்கை அன்று இந்துக்களிடம் இந்தியா முழுக்க இருந்தது.

ஜாதகம் கணிக்கும் பொழுது இம்மாதிரி விஷயங்களையும் இந்துக்கள் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள், சிவாஜியும் தெரிந்திருந்தான்

நாளும் கிழமையும் சிவனடியார்களுக்கு இல்லை சிவகாரியத்துக்கு செல்வோருக்கு கோள்கள் தடை இல்லை என சம்பந்தரின் கோளறு பதிகத்தின் வடமொழி ஸ்லோகத்தை சொன்னான்

“கோளறு பதிகத்தில்” இரண்டாம் பாடலை காட்டினான்

“என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்

அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே”

அதாவது எலும்பு பன்றிக்கொம்பு , ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை , கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத்தலால் , அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது , பத்து , பதினாறு , பதினெட்டு , ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் என்கின்றார் சம்பந்தர்

ஒன்பது என்பது அசுவினி முதலாகக்கொண்டு எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம் என்பது ஒன்பதோடொன்று பத்து என்பது மகம். ஒன்பதொடேழு பதினாறு என்பது விசாகம் . பதினெட்டு என்பது கேட்டை, ஆறு என்பது திருவாதிரை உடையவை

மற்றயவை பரணி , கார்த்திகை . பூரம் , சித்திரை , சுவாதி , பூராடம் , பூரட்டாதி , நாள்கள் என்றதால் , ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின

அதாவது ஜாதக ரீதியாக இந்நாளில் தொடங்கும் காரியம் செல்லாது, ஆனால் சிவனை நினைந்து செல்லும் பொழுது இந்த நட்சத்திர தோஷம் வராது என்கின்றார் சம்பந்தர்

இதை சொல்லி வாதிட்டான் சிவாஜி

ஆனால் ஜோதிடர்கள் தடுத்தனர் அது துறவியருக்கு, அப்படியும் திருஞானசம்பந்தர் சமணர் வைத்த தீயில் சிக்கித்தான் பிழைத்தார், ஜாதக ரீதியாக இது உமக்கு பேரிழப்பு ஏற்படும் நேரம் ஒரு உயிர் பிரியவேண்டும் என எச்சரித்தனர்

சிவாஜி உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தான் , அங்கே பேசினாள் ஜீஜாபாய்

“சிவாஜி, ஒரு வீரன் உணர்ச்சிவசபட கூடாது. அவன் மிகபெரிய வீரன் என்றால் இங்கே அல்லவா வரவேண்டும் ஆனால் அதைவிடுத்து நம் ஆலயங்களை தாக்குகின்றான் என்றால் என்ன அர்த்தம்?

அவன் உன்னை அங்கே இழுத்து வீழ்த்தபார்கின்றான், சிக்கிவிடாதே

நீ வருவாய் என திட்டமிட்டு ஆலயங்களை இடிப்பவன் வழியில் உனக்கு எவ்வளவு கண்ணிகளை படுகுழிகளை வைத்திருப்பான்?, ஆத்திரபட்டு எல்லாம் கெடுத்து கொள்ளாதே

சிவாஜி நமக்கு தேவை அவன் தலை, அதுதான் அது ஒன்றுதான். அவனை உள்ளே விட்டது போல இந்த கோட்டை பக்கமும் இழுத்துவிடு” என ஆலோசனை சொன்னாள்

சிவாஜி இது பற்றி சிந்தித்தபொழுது சகுணங்களும் அவனுக்கு எதிராக இருந்தன ஆந்தை கூவல் அப்படி இருந்தது

பொதுவாக ஆந்தை 10 வகையாக குரல் எழுப்பும், ஒரு கத்து கத்தி அது அடங்குவதற்கும் தொடர்ந்து இருமுறை, மும்முறை என 10 முறை கத்துவதற்கும் சில சகுனங்கள் உண்டு

ஆந்தையினை ஞானபறவையாக கொண்டாடினார்கள் இந்துக்கள்

அது ஒரு முறை கத்தினால் சாவு, இருமுறை கத்தினால் சுபம்,மும்முறை கத்தினால் பெண் வழி துன்பம், நான்கு முறை கத்தினால் கலகம், ஐம்முறை கத்தினால் பயணம் அமையும் அது நலமாகும், 6 முறை கத்தினால் வரவு வரும், 7 முறை கத்தினால் பொருள் அழிவு, 8 முறை கத்தினால் சாவு, 9 மற்றும் 10 முறை கத்தினால் மிக நல்ல சகுணம்

அன்று ஆந்தை ஒரு முறை 8முறை கத்தியது, சிவாஜி பின்வாங்கினான்

தாய் சொல்வதை கேட்டு நிதானமானவன் அப்சல்கானுக்கு தூது அனுப்பினான், அவனை வகையாக மடக்க நாட்களை நீட்டினான், சிவாஜி தூதுவனாக சென்றது பந்தோஜி கோபிநாத்

பந்தோஜி சென்று அப்சல்கானை சந்தித்தான், “எங்கள் சிவாஜி உங்களுடன் மோத விரும்பவில்லை, அதே நேரம் சில உறுதிமொழிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார், அதை நீங்கள் செய்தால் உங்களுடன் பேச தயாராக இருக்கின்றார்” என்றான் பந்தோஜி

சிவாஜி தன்னிடம் வகையாக சிக்கிகொண்டான் என நம்பிய அப்சல்கான் தன் தரப்பில் கிருஷ்ண பாஸ்கர் என்பவனை தூது அனுப்பினான்

இந்த கிருஷ்ண பாஸ்கர் ஷாஜாஜியின் கூட்டாளி, சிவாஜிக்கு அறிமுகமானவர் அவர் சொன்னால் சிவாஜி நம்புவான் என கணக்கிட்டு கிருஷ்ண பாஸ்கரை அனுப்பினான் அப்சல்கான்

அப்பொழுது வாயி எனும் இடத்தில் பாசறை அமைத்திருந்தான் அப்சல்கான் இதிலிருந்து மேற்கேதான் சிவாஜி தங்கியிருந்த பிரதாப்காட் கோட்டை இருந்தது

கிருஷ்ணன் பாஸ்கர் ஷாஹாஜியின் ஆளாக இருந்தாலும் சிவாஜி அவனை முழுக்க நம்பவில்லை, பேச்சுவார்த்தைக்கு சென்றால் அப்சல்கான் என்ன செய்வான் என்பதை முழுக்க உணர்ந்திருந்தான்

ஆனால் அப்சல்கானை தன் கையால் கொல்வதுதான் சிவாஜியின் முடிவாக இருந்ததால் அப்சல்கானை தன் வலையில் விழவைக்க இப்படி பேச்சுவார்த்தையினை இழுத்து கொண்டிருந்தான்

ஒரேடியாக பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் அப்சல்கானுக்கு அஞ்சி ஒளிந்திருப்பது போல் பாவனை காட்டி மெல்ல மெல்ல சில உறுதிமொழிகளை வாங்கி பேசசெல்வது அவன் திட்டமாய் இருந்தது, அதைத்தான் அப்சல்கான் நம்பவும் சாத்தியம் இருந்தது

அப்படி கிருஷ்ண பாஸ்கரும் அப்சல்கான் சொன்ன சில உறுதிகளை சொன்னான் “சரணடைந்தால் குறைந்த தண்டனை வாங்கி தருவானாம், நீங்கள் வடக்கே கோட்டைகளை உறுதிபடுத்தி வலுவாக்கியதால் சுல்தானிய சேவை என சலுகை உண்டாம்

மாறாக நீ மறுத்தால் இந்த பகுதியே இருக்காதாம் முழுக்க அழித்து மக்களை எல்லாம் ஒழிப்பானாம், எந்த இந்துமதத்துக்காக நீ வளேந்தினயோ அந்த கோவில் கல் கூட இருக்காதாம்

கோட்டைகளை ஒப்படைத்து சுல்தானிடம் மன்னிப்பு கேட்டால் ஒரு ஜாகீர்தாரனான, ஒரு தளபதியாக நீர் வாழ அப்சல் வழி செய்வானாம்” என்றெல்லாம் நிறைய சொன்னான் பாஸ்கர்

இதெல்லாம் சம்பிரதாய பசப்புகள் என அறிந்த சிவாஜி விரைவில் அப்சல்கானை சந்திக்க வருவதாக மட்டும் சொல்லி அனுப்பினான்

இந்நிலையில் சிவாஜிக்கு மிகபெரிய சோகம் நிகழ்ந்தது, அவனின் முதல் மனைவி சால்பாய் 25 செப்டம்பர் 1659ல் இறந்தாள், அவள் நீண்டநாள் நோயுற்றிருந்தாள் எனினும் சிவாஜி மனமொடிந்தான்

ஆம், அது ஜோதிட ரீதியாக அவனுக்கு இழப்பு ஏற்பட வேண்டிய காலம், அது அவன் மனைவி வடிவில் வந்தது, ஜோதிடர் சொன்னது நடந்தது, சிவாஜி 4 வயது மகனின் தாய் இறந்த துக்கத்தில் சில தினம் மூழ்கியிருந்தான்

சாம்பாஜியினை வளர்க்கும் பொறுப்பு ஜீஜாபாய்க்கே வந்தது, சால்பாய் மரணத்தில் அவளும் மனம் கலங்கி இருந்தாள்

இதை கேட்டதும் துள்ளி குதித்தான் அப்சல்கான், காரணம் இந்த மரணத்தால் சிவாஜி மனமுடைந்து முடங்கி கிடப்பதாகவும் இனி அவன் சண்டையிடும் ஏன் பேரம்பேசும் ஆற்றலை கூட இழ்ந்ததாகவும் செய்திகள் அவனை எட்டின‌

மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் இருந்தான் அப்சல்கான், அவனின் நெருங்கிய தளபதிகளும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர்

சிவாஜியினை அடக்கிவிட்டதாகவும் தன்னை எதிர்க்க வரும் முன் அவன் மனைவி இறந்துவிட்டதால் இதனை துர்சகுணமாக கருதி சிவாஜி அடங்கிவிடுவான் எனவும் நம்பிகொண்டான்

“ஏ சூபி ஞானியே என்ன சொன்னீர், வந்தால் பார்க்கலாம்” என்றா சொன்னீர்? அதை சிவாஜியோடு வந்தால் நான் பார்க்கலாம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும், வருகின்றேன் இதோ சிவாஜியினை உள்ளே அடைத்து கூண்டோடு வருகின்றேன்” என சொல்லி கொண்டேன்

ஆனால் தெய்வம் எப்பொழுதும் சிவாஜி பக்கம் இருந்தது, பவானி அவனுக்கு துணையாக இருந்தாள் என்பதற்கு சாட்சியாக அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின‌

ஆம் அப்சல்கானின் நெருங்கிய தளபதிகள் துல்ஜாபூர் கோவிலை அடித்து களங்கபடுத்தியபொழுது பல இந்து பெண்களை இழுத்து வந்து மதம் மாற்றி அடிமைபடுத்தினர், அதில் பேரழகியான பெண் ஒருத்தி இருந்தாள்

அவளை அப்சல்கானின் தளபதி ஆசைநாயகியாக வைத்து கொண்டாலும் அவள் அவனை வெறுப்புடனே நோக்கினாள், துர்காவதி எனும் அவள் பெயரை ஜனக்துலாரி என மாற்றி இருந்தான் அவன்

சிவாஜி சரணடையபோகின்றான் என்றதும் அவன் குடித்து கும்மாளமிட்டான், அவள் முன்னால் வந்து “உங்கள் சிவாஜி என்னாக போகின்றான் தெரியுமா? எங்கள் திட்டம் என்ன தெரியுமா?” என அரைபோதையில் உளறினான்

சிவாஜி எனும் பெயரை கேட்டதும் ஜனக்துலாரி அதிர்ந்தாள், அவள் ஒரு இந்துவாக சிவாஜி ஒருவனே தங்களுக்கு அடிமைதளையினை விடுவிப்பான் இந்து பெண்களுக்கு தனி தேசம் தந்து இந்து பெண்களை இந்து பெண்களாக வாழவைப்பான் என நம்பினாள், எல்லா பெண்களையும் போல் நம்பினாள்

இப்பொழுதும் சிவாஜி ஏதும் செய்வான் எனும் நம்பிக்கை இருந்தது அதனால் எப்படியோ இவனுக்கு போக்கு காட்டி தப்பிவந்தாள்

அவளுக்கு சிவாஜியினை இவர்கள் நம்ப வைத்து ஏதோ செய்ய போகின்றார்கள் என்பது தெரிந்தது, இதனால் அவன் ஆசைக்கு இணங்குவது போல் இணங்கி நிறைய குடிக்க வைத்தாள்

“உங்களுக்கு நாயகியாக முடிவு செய்துவிட்டேன், இந்த சிவாஜி இந்துபெயரை சொல்லி எங்கள் செல்வத்தை எல்லாம் பறித்தான், நீங்கள் எனக்கு வைர அட்டிகை தருவீரா? மாளிகை தருவீரா” என கேட்டு அவனை மெல்ல மயக்கினாள்

போதை இல்லாமலே ஒரு பெண் இதை கேட்டால் சரி என ஒப்புகொள்ளும் ஆண் மனம் முழு போதையில் மறுக்குமா அவன் முழுக்க அவள் வசமானான்

மெல்ல கேட்டாள் “அந்த சிவாஜியினை எப்படி பிடிப்பீர்கள்? அவன் சிக்கமாட்டானே?”

“அடியே அப்சல்கானை யாரென நினைத்தாய்? அவர் மாபெரும் வீரன் அறிவாளி, சிவாஜி அவரை சந்திக்க வரும்பொழுது அவர் அவனை கட்டி தழுவுவார், அப்பொழுது அவரின் வார்பட்டையில் தடவபட்டிருக்கும் மருந்து பொடியினை அறியாமல் சிவாஜி அவரை தழுவுவான்

அவர் தன் பலத்தால் அவன் முகத்தை தன் பட்டையில் அழுத்துவார், அதை சுவாசிக்கும் சிவாஜி மயங்கி சரிவான், அவ்வளவுதான் அவனை தூக்கி கூண்டில் அடைத்து பிஜப்பூர் நோக்கி கிளம்புவார்”

அதை கேட்டதும் அவளுக்கு வியர்த்து கொட்டிற்று, ஆனாலும் வெளிகாட்டாமல் பேசினாள்

எப்படி சாத்தியமாகும்? அவர் படைகளும் வருமே உங்களை வீழ்த்தி திறந்துவிட்டால்?

முடியாது , அவனிடம் இப்பொழுது யாருமில்லை அப்படி இருந்தாலும் விடமாட்டோம், உனக்கு தெரியுமா? கூண்டில் சிவாஜி இருக்கும் பொழுதே அவன் கண்முன்னால் அவன் அன்னை, அவன் மகன், அவனின் இதர குடும்பமெல்லாம் சீவபடும், அப்சல்கானை எதிர்த்தால் என்னாகும் என காட்டபடும்

பிஜப்பூரில் மக்கள் வேடிக்கை பார்க்க இழுத்து செல்லபடும் சிவாஜி அங்கு தலை வெட்டபட்டு தலைகீழாக தொங்கவிடபடுவான்

அதை காணும் ஒவ்வொரு இந்துவுக்கும் இனி உரிமை, சுயராஜ்யம் , இந்து உரிமை என்ற கனவே எழாது” என சொல்லி அவளை அணைத்து கொண்டான்

அவள் மெல்ல அவன் பிடியில் இருந்து நழுவினாள், அவன் போதையில் மூழ்கியிருந்தான். இந்த மாபெரும் கொடுமையினை எப்படியாவது சிவாஜிக்கு தெரிவிக்க அவள் திட்டமிட்டாள்

ஒரு பிஜப்பூர் வீரனை போல் உடையணிந்து முகத்தை ஒருமாதிரி மறைத்து முகாமில் இருந்து வெளியேறியவள் வெய் ஊரில் இருந்த கோவில் பூசாரியினை கண்டறிந்து சந்தித்தாள்

“அய்யா சிவாஜி நமக்கான கடைசி நம்பிக்கை, காலம் நம் துயர் அறிந்து கொடுத்த வீரதிருமகன், சிவன் நம்மிடையே தோன்றிய அவதாரம்.

அந்த மாவீரனை இந்து திருமகனை வஞ்சகமாக பிடிக்க வழி செய்கின்றான் அப்சல்கான், அவரை பிடித்து அவர் கண்முன்னாலே அவர் குடும்பத்தை கொன்று, ஒரு விலங்கினை போல கூண்டில் அடைத்து அவரை இழுத்து செல்வதுதான் அவன் திட்டம்

சிவாஜி இல்லையென்றால் இனி கோவில்கள் இருக்குமா, நீவீர் இருப்பீரா, இல்லை இந்து பெண்கள்தான் மானத்தோடு வாழமுடியுமா? என்னை போல எத்தனை லட்சம் பெண்கள் சீரழிந்தார்கள், இதனையெல்லாம் தடுத்து இந்து பெண்களை வாழவைக்க சிவாஜி தவிர நமக்கு நம்பிக்கை யார் உண்டு?

ஒரு இந்து பூசாரியாக நீர் சிவாஜியின் அருமையினை அறிவீர் என்பதால் உம்மை நம்பி இந்த செய்தியினை சொல்கின்றேன், அவரை காப்பாற்றுங்கள்” என உண்மையினை சொல்லிவிட்டு மறுபடி ஒன்றுமே அறியாதவள் போல் வந்து முகாமில் அமர்ந்து கொண்டாள்

அந்த அந்தண பூசாரி விஷயத்தை சிவாஜிக்கு சொன்னார், வழக்கம் போல் புன்னகைத்தான் சிவாஜி

சிவாஜி இந்த 4 மாத காலமும் மிக தேர்ந்த திட்டங்களை செய்திருந்தான், ஒரு பக்கம் அப்சல்கானை மிக எளிதாக உள்ளே வரவைத்தான், அவனை அஞ்சி தான் நடுங்கி ஒளிவதுபோல தந்திரமாக நடித்தும் கொண்டான்

அவன் நேருக்கு நேராகமோதி இருக்கலாம்,நிச்சயம் போர் நெடுநாள் நீடித்தால் அவுரங்கசீப் ஆள் அனுப்பத்தான் செய்வான் ஆனால் அது சிவாஜிக்கு நல்லதுமல்ல அதே நேரம் அப்சல்கான் தப்பிவிடவும் கூடும்

சிவாஜி குறிவைத்தது அப்சல்கானின் தலையினை, தன் அன்னையின் சபதத்துக்கு ஏற்ப தன் அண்ணனை கொன்ற அவனை தன் கையால் கொல்லவேண்டும் எனும் கோபம், நேரடி யுத்தத்தில் அப்சல் அதை தவிர்க்க வாய்ப்பு உண்டு

இன்னும் அப்சல்கானை இப்படி நம்ப வைத்து இழுக்காவிட்டால் அவன் நிச்சயம் சிவாஜி உருவாக்கிய வளமான புனே பகுதியினை நாசமாக்குவான் அதிலிருந்து அப்பகுதி மீண்டெழ நெடுங்காலமாகும்

இதனால் மிக தந்திரமாக அப்சல்கானை உள்ளே இழுத்து அவகாசம் கொடுத்தபடியே தன் வலைகளை ரகசியமாக விரிக்க தொடங்கினான்

சிவாஜி பிரதாப்காட் கோட்டையினை அப்சல்கானுடன் மோதும் இடமாக தேர்வு செய்தான், அதில் மிகபெரிய கவனம் இருந்தது

ஆம், என்னதான் டோர்னா, ராஜ்காட், ராய்காட், கொண்டனா என பல கோட்டைகள் இருந்தாலும் அவை எல்லாம் சுல்தானிய வீரர்களுக்கு பழக்கமான கோட்டைகள் அதன் சாதகங்களை அவர்களும் அறிவார்கள் என்பதால் அவற்றை விட்டு தான் கட்டியிருந்த பிரதாப்காட் கோட்டைக்கு வந்தான்

காரணம் அதன் தன்மையோ இதர வழிகளோ சுரங்கபாதை முடியும் இடமோ சுல்தானியர்களுக்கு தெரியாது என்பதால் அங்கே தன்னை நிறுத்தி கொண்டான் , ஜீஜாவும் அங்கே வந்திருந்தாள் சிவாஜி குடும்பமும் அங்கே பாதுகாப்பானது

ஒரு வாரத்தில் அப்சல்கானுடன் சந்திப்பு எனும் நிலையில் அதுவரை வைத்திருந்த வியூகங்களை மிக வேகமாக செயல்படுத்தினான் சிவாஜி, அப்சல்கான் எனும் புலிக்கு அழகான வலை வரித்தான்

அப்சல்கானை சிவாஜி துளியும் நம்பவில்லை, அவனுக்கு தேவை அப்சல்கானை ரகசியமாக வளைக்க சில கால அவகாசம் அதை தந்திரமாக செய்து நாட்களை கடத்தினான்

அப்சல்கான் எத்தனையோ பேரை இப்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொன்றது சிவாஜிக்கு தெரியும், நாயக்க இந்து அரசர்களான ராஜா கஸ்தூரி ரங்கா, மலையாள எல்லையின் சேர மன்னன் இவர்களையெல்லாம் அப்சல்கான் இப்படித்தான் வலைவிரித்து கொன்றான்

அப்படித்தான் தனக்கும் விரிக்கின்றான் என்பதை எளிதாக உணர்ந்திருந்தான் சிவாஜி, இதனால் பாதுகாப்புகளை பலபடுத்தினான்

சிவாஜிக்கு இன்னொரு கன்ஹோஜி ஜதே படை தலைவனாய் இருந்தான் அந்த கன்ஹோஜி ஜதேவினை 3000 வீரர்களுடன் கோட்டையினை சுற்றி காடுகளில் பதுங்கியிருக்க செய்தான், இவர்களிடம் குதிரை யானை எல்லாம் இல்லை, காரணம் அவற்றை மறைத்து வைக்க முடியாது

இவர்கள் ஈட்டி, வில், வாளுடன் பதுங்கி இருந்தனர். சிவாஜியினை அப்சல்கான் வளைத்தாலோ இல்லை தாக்கினாலோ காப்பது இவர்களின் வேலை

மோரோபந்த் பிங்கலே 5000 துருப்புக்களுடன் பர் காட் எனும் துணை கோட்டையில் நிலை கொண்டான் அடர்ந்த கானகத்தில் அக்கோட்டை மறைவாய் இருந்தது

பந்தல் மற்றும் ஷிலிம்கர் தலமையில் தேஷ்முக்குகள் போச்சே காலி எனும் இடத்தில் சுமார் 2000 துருப்புக்களோடு பதுங்கி இருந்தனர்

தெற்கே வாய்க்கு செல்லும் பாதை ஜோர் பள்ளத்தாக்கு வழியாக இருந்தது பாபாஜி போசலே மற்றும் ரகுநாத் பல்லால் அவர்களுக்கு இடையே சுமார் 3000 துருப்புகளுடன் இந்த பாதையை பாதுகாத்தனர்.

திரிம்பக் பாஸ்கர் அருகிலுள்ள துதோஷி என்ற கிராமத்தில் இருந்தார். அதோடு, விஸ்வாஸ்ராவ் நானாஜி திகே, ஆகியோர் உளவு தகவலோடு இருந்தனர்

சிவாஜியின் யுத்த தளபதி நட்டாஜி பால்கர் சுமார் 4 ஆயிரம் குதிரை படைகளோடு வேய் என அப்சல்கான் நிலை கொண்ட பகுதியில் இருந்து சற்று தள்ளி மலையோரமாக மறைந்திருந்தான்

யுத்தம் தொடங்கி சிவாஜியினை அப்சல்கான் தாக்கினால் அப்சல்கானை பின்னால் இருந்து அடிக்க இந்த ஏற்பாடு, சிவாஜியின் மிக முக்கிய படை இது

தானாஜி கோட்டைகளின் உள்பாதுகாப்பினை ஏற்றிருந்தான் யுத்தத்தில் அது மகா முக்கியமானது, இதர தளபதிகளான கங்க் மற்றும் காம்பாஜி போன்றோர் இதர கோட்டைகளில் தயாராக இருந்தனர்

இப்படி எல்லா ஏற்பாடுகளும் தயாராயின மிக சில நாட்களில் இந்த வியூகங்களை வகுத்துவிட்டு தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் சரியான நாள் கேட்டான் சிவாஜி

அவர்கள் சிவாஜியின் அபாய காலம் கடந்து சால்பாய் உயிரோடு கண்டம் கடந்ததை சொல்லி இனி ஆபத்தில்லை என நாள் குறித்தனர்

எதிரியினை அடக்க அன்னை நவமிதான் சரியான திதி கொண்ட‌ நாள், ராவணன் அழிந்ததும் நவமி அன்னை மகிஷனை கொன்றதும் நவமி

இரண்யவதமும் அந்த திதியே

இதில் தட்சுயாண‌ காலமே கொடுங்கோலர் அழியும் காலம் என இந்துமதம் சொன்னது, அந்நேரமும் சரியாக பொருந்திற்று, அந்த நவமியில் நாள் குறித்தார்கள், நேரம் அந்நாளில் செவ்வாய் உச்சமிருக்கும் நேரமாயும் குறித்தார்கள்

அவர்கள் குறித்து கொடுத்த நாள் நவம்பர் 10, 1659 மாலை நேரம் 4 முதல் 6 மணி

அந்த சந்திப்புக்கான இடமாக பிரதாப்காட் கோட்டையின் மலையின் அடிபகுதி குறிக்கபட்டது, இதை சிவாஜியின் தூதர் பந்தோஜி கோபிநாத்தும் அப்சல்கான் தூதர் கிருஷ்ணன் பாஸ்கரும் உறுதிபடுத்தினார்கள்

அதாவது சிவாஜி சமவெளிக்கு வரமாட்டான், அப்சல்கானும் சிவாஜி கோட்டையின் மலைக்கு செல்லமாட்டார் இருவருக்கும் பொதுவான இடத்தில் சந்திப்பார்கள்

சந்திக்கும் பொழுது இருவரின் சேனைகளும் வெகு தொலைவில் நிற்க வேண்டும், இருவரும் சந்திக்கும் இடம் அவரவர் நிலையில் இருந்து பீரங்கி, ஈட்டி, அம்பு எறியும் தொலைவுக்கு அப்பால் இருக்க வேண்டும், பிரதாப்காட் கோட்டையில் இருந்து பாறாங்கல்லை உருட்டிவிட்டாலும் தாக்காதபடி பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்சல்கானிடம் இருந்து உறுதி பெறபட்டது

சிவாஜியும் பதிலுக்கு அப்சல்கான் தனி பந்தலில் தன்னை சந்திக்க வேண்டும் என்றும் பெரும் சேனை இல்லாமல் சிறிய குழுவுடனே பந்தல் பக்கம் வரவேண்டும் என்றும் தங்கள் மெய்க்காப்பாளர்கள் இருவரையும் சோதித்த பின்பே சந்திப்பு நடக்கும் எனவும் பதில் சொன்னான்

அப்சல்கான் சம்மதித்தான்

அப்சல்கானை பொறுத்தவரை சிவாஜி சிக்கிவிட்டான் இனி கூண்டில் ஏற்றி வேடிக்கை காட்டி கொண்டு செல்வதுதான் பாக்கி என இருமாந்திருந்தான்

சிவாஜி மிக கூர்மையான திட்டங்களையும் வியூகங்களையும் பிரதாப்காட் கோட்டையில் செய்து தயாராகி கொண்டிருந்தான்,

அன்று ஆந்தை 10 முறை உற்சாகமாக கத்தியது, அந்த நாளும் வந்தது, நவம்பர் 10ம் தேதியாக‌ 1659ம் ஆண்டு விடிந்தது

அன்று காலையில் இருந்தே சிவாஜி விரதம் தொடங்கினான், வழக்கமாக ஒருவேளை உண்ணும் உணவை கூட அவன் தொடவில்லை

காலையில் தியானத்தில் இருந்தான் பின் தன் குருநாதர் ராமதாஸ் சுவாமிகளை மனதால் தியானத்தான், அதன் பின் தன் ரகசிய ஆட்களை அழைத்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என உறுதிபடுத்தினான், அங்கிருந்தும் செய்திகள் வந்தன, பல வடிவங்களில் வந்தன‌

பழக்கபட்ட மாடுகள், பறவைகள் இதர விலங்குகள் மூலம் சிவாஜிக்கும் தகவல்கள் வந்தன அவனும் சில ரகசிய வழிகள் மூலம் எல்லாவற்றையும் உறுதிபடுத்தினான்

நேரம் மதியம் இரண்டுமணியானது

சிவாஜி கிளம்பதயாரானான், அவனுக்கு மெல்லிய இரும்பு சங்கிலியால் செய்ப்பட்ட மேலாடையினை அணிவித்தாள் ஜீஜாபாய், அது கத்தி குத்தினாலும் உள்ளே இறங்காத பாதுகாப்பை கொடுக்கும்

அதன் மேல் அலங்கார உடைகளை அணிந்தான் சிவாஜி, கைகளில் மிகபெரிய மோதிரங்களை அணிந்து கொண்டான் அவை வைரமும் வைடூரியமாகவும் ஒளிவீசிற்று

பவானி கொடுத்த வாளை பவானி சிலை முன்னால் இருந்து எடுத்து வந்தாள் ஜீஜா, “ஜெய் பவானி, ஜெய் மஹாதேவா” என முழங்கியபடியே அவனுக்கு கட்டிவிட்டாள்

திலகமிட்டு வாழ்த்தி சொன்னாள், “இது இந்துஸ்தான விடுதலையின் முதல்படி, அந்த அப்சல்கானின் தலையினை மிதித்துத்தான் அடுத்தபடி ஏறவேண்டும்

உன் தந்தையினை தோளில் கையிட்டு கைது செய்தவனும் உன் அண்ணன் மட்டுமல்ல எத்தனையோ இந்து அரசர்களை கொன்றவனும் இந்து கோவிலை இடித்து இந்து பெண்களை நாசமாக்கியவனுமான அவனின் சாவு கொடூரமாய் இருக்க வேண்டும்

பண்டரிபுரம் நாதனும், பவானி அன்னையும் தங்கள் கோவிலில் அவன் செய்த நடுங்க வைக்கும் கொடுமைகளுக்கு பரிகாரமாக அவனை உன் கையில் ஒப்படைக்கட்டும், அவன் சாவு கால காலத்துக்கும் இந்து எதிரிகளுக்கு எச்சரிக்கையாய் இருக்கட்டும்” என்றாள்

சிவாஜி கிளம்பினான், ஜீஜாபாயும் எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தாள் அவளும் அவளுடனான பெண்களும் போர் கோலம் தரித்து வாளேந்தி தயாராக இருந்தனர்

அன்று சிவாஜியினை பார்க்க எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது, அவன் அலங்கார உடை உடுத்தியவன் அல்ல, ஒரு நகையோ மோதிரமோ அணிந்தவன் அல்ல‌

ஆனால் அன்று அவன் கைகள் மிகபெரிய மோதிரங்களை கொண்டிருந்தன, அவை அழகாக மின்னின‌

சிவாஜி பிஜப்பூரின் மிகபெரிய தலைவனை சந்திக்க செல்லும்பொழுது இந்துக்களை பிரதிநிதித்து அலங்காரமாக செல்கின்றான் என சொல்லி கொண்டார்கள்

சிவாஜி கிளம்பும் நேரம் ஒரு குரங்கு அவன் முன்னால் தாவி ஓடி ஒரு ஓரத்தில் நின்று அவனை உற்றுபார்த்தது ராமதாஸர் ஆசி கிடைத்துவிட்டதை நினைத்து வணங்கினான் சிவாஜி

வெளிவந்து வானத்தை நோக்கினான் அங்கே கருடன் வட்டமிட்டது, பண்டரிநாதனும் தனக்கு உத்தரவு கொடுத்ததை உணர்ந்தான்

கோட்டை கதவுகள் திறக்கபட்டு பந்தலை நோக்கி சென்றான்

அப்பக்கம் கம்பீரமாக பல்லக்குக்கு வந்தான் அப்சல்கான், அவன் திட்டபடி அழகான உடையில் மார்புக்கு குறுகாகவும் இடுப்பை சுற்றியும் வார்பட்டை அணிந்திருந்தான்

அவனின் திட்டபடி அந்த கூண்டு மறுபடியும் சரிபார்க்கபட்டது, ஆனால் அது வொய் அருகே பாசறையில் வைக்கபட்டது, சிவாஜியினை கட்டி தூக்கிவர சங்கிலிகளும் பூட்டுகளும் மட்டும் பல்லக்கில் மறைக்கபட்டன‌

குறிப்பிட்ட இடம் வந்தது சிவாஜி அப்பக்கம் நின்றான்,இப்பக்கம் நின்றான் அப்சல்கான்

தூதுவர்கள் மறுபடி செய்தி பரிமாறி கொண்டதும் வெளிவந்தான் அப்சல்கான் அவனுக்கு ஒரு திடீர் மேடை அமைக்கபட்டது

அதில் ஏறி சுற்றி பார்த்தான் அவனால் அடர்ந்த காடுகளை தவிர ஒன்றும் காணமுடியவில்லை, ஆனால் படை நிற்கும் அறிகுறிகள் இல்லாததால் புன்னகைத்தான்

ஆனாலும் தன் குழுவினருக்கு சுற்றிலும் ஈட்டிகளை எறிய சொன்னான் , பாறைகளை உருட்டிவிட சொன்னான் ஒரு சலசலப்புமில்லை என்பதால் நம்பிகொண்டான்

சிவாஜியின் மெய்காப்பாளன் ஜீவ மஹாலாவுடன் முன்னே வந்தான், அங்கே தன் மெய்காப்பாளன் சையத் பாண்டாவுடன் முன்னால் வந்தான் அப்சல்கான்

இந்த இருவரும் இப்பக்கம் முன்னால் செல்ல அப்பக்கம் இருந்து அவர்கள் இருவரும் பந்தலுக்கு வந்தார்கள்

அது திறந்த பந்தலாய் இருந்தது இரு ஆசனம் மட்டும் போடபட்டிருந்தது

சிவாஜி அப்சல்கானை தொலைவில் இருந்து பார்த்தான், ஒரு மாமிச மலைபோல் அங்கு நின்றிருந்தான் அப்சல்கான் அவன் தோற்றம் மிரட்டும் வகையில்தான் இருந்தது, அவனை கண்டதும் சிவாஜிக்கு ஆத்திரங்கள் பொங்கின ஆனால் அடக்கி கொண்டான்

அப்சல்கான் சிவாஜியினை முன்பு பார்த்திருந்தாலும் அவனை சுமார் 15 வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் பார்க்கின்றான், சிவாஜியின் தோற்றத்தில் மாற்றமில்லை, இந்த இந்து குள்ளனா நமக்கு சவால் இன்றோடு ஒழிந்தான் என மனதுக்குள் நினைத்து கொண்டான்

முதலில் சிவாஜியின் காவலன் ஜீவமஹாலா முன் சென்று அப்சல்கானிடம் ஆயுதம் இருக்கின்றதா என சோதித்தான், உடைவாளை தன் காவலன் பாண்டாவிடம் கொடுத்துவிட்டு கைகளை விரித்து நின்றான் அப்சல்கான்

அவனை சோதிக்க நெடுநேரம் ஆனது காரணம் அவன் உடல் அப்படி, யானைமேல் எலி ஊர்ந்தது போல் சோதித்தான் மஹலா

அவன் சோதனை முடிந்ததும் “பிரபு உங்கள் ஆடை கலைந்திருக்கின்றது” என சொல்லி அதை சரிபடுத்துவது போல அவர் வார்பட்டைகளில் ரகசியமாக மயக்க பொடியினை தூவினான் பாண்டா, இது யாருக்கும் தெரியாது

தூவிவிட்டவன் பின் சிவாஜியினை சோதிக்க வந்தான், சிவாஜி இந்து சம்பிரதாயபடி அவன் கைகளை கால்களை கழுவிவிட்டுத்தான் ஒருவன் என்னை தொடமுடியும் என சொன்னான் அவனும் கைகளையும் கால்களையும் அலம்பிவிட்டு சிவாஜியினை சோதித்தான் , சிவாஜி கையில் இருந்த பவானி வாள் மஹாலியிடம் கொடுக்கபட்டது

சிவாஜியிடம் ஆயுதம் ஏதுமில்லை, அவன் அணிந்திருந்த மெல்லிய கவச உடையும் கனமான பட்டுபோலவே தெரிந்தது, பாண்டா அப்சல் பக்கம் திரும்பினான்

இரு மெய்காப்பாளரும் தங்கள் தலைவர்களுக்கு அனுமதி கொடுத்து பல அடி தள்ளி நின்றனர்

அப்சல்கானும் சிவாஜியும் வேகமாக முன்னோக்கி சந்திக்க வந்தனர், இருவர் மனமும் உள்ளே நட்சத்திரம் போல் எறிந்தாலும் முகம் மட்டும் மின்னின‌

ஆப்கானிய சம்பிரதாயபடி வணக்கம் சொன்னான் அப்சல் கான், நமஸ்தே என இந்திய பாரம்பரியத்தில் கரங்களை குவித்தான் சிவாஜி

சிரித்து கொண்டே சிவாஜியினை கட்டி அணைத்தான் அப்சல்கான், சிவாஜி நாட்டியகாரி ஜனதுலானியின் எச்சரிக்கையினை நினைவில் கொண்டு மூச்சை அடக்கினான்

அப்சல்கானோ சிவாஜியின் கழுத்தை பிடித்து தன் வார்பட்டையில் அழுத்த முனைந்தான், சிவாஜிக்கு அது மல்யுத்த வீரனின் பிடி தப்பமுடியா பிடி என்பது தெரிந்தது

அப்சல்கான் அப்படியே கொல்வது போல் அமுக்கினான்

சிவாஜி இதுதான் தருணம் என முடிவெடுத்தான், அன்னை பவானியினை நினைத்தபடி மின்னல் வேகத்தில் மை விரல்கலை மடக்கினான், அப்பொழுதுதான் அந்த மோதிரம் ஒரு அபாய ஆயுதம் என்பதை வெளிகாட்டினான் சிவாஜி

ஆம் அதனுள் அந்த சிறிய ஆனால் உறுதியான ஆயுதம் இருந்தது

அதற்கு “நாக் வாக்” என பெயர், தமிழில் புலிநகம் என சொல்வார்கள்

புலி தன் நகங்களை எப்பொழுதும் மறைத்து வைத்திருக்கும், ஆபத்து காலத்தில்தான் நகத்தை விரித்து எதிரியினை கொல்லும் அவ்வகையில் கைவிரல்களில் அணிந்தால் மோதிரம் போல் தெரியும் அவ்வாயுதம் விரல்களை மடக்கினால் முன்னே நீளும், விரல்களை நீட்டினால் உள்ளே ஆயுதம் உள்ளிளுக்கபடும்

கோழி சண்டையில் அதன் கால்களில் கட்டபடும் சிறிய கத்தி போன்ற முனை இது, அதைவிட சிறியது இது

சிவாஜி விரலில் அணிந்திருந்தது உலோக கலவையால் செய்யபட கூர்மையான ஆயுதம் மிக வலுவானது, புலியின் நகம் போன்ற கூர்மையுடையது

விரலை மடக்கினான் சிவாஜி, அந்த உறுதியான கூர்முனை புலி நக ஆயுதம் வெளிபட்டது, முதலில் அப்சல்கானில் முதுகில் கீறினான் சிவாஜி, அதை எதிர்பாரா அப்சல்கான் பிடியினை விட்டான்

அவ்வளவுதான் நரசிம்ம அவதாரமாக மாறிதன் விரல்களில் இருந்த புலிநக ஆயுதத்தை அப்சல்கானின் வயிற்றில் பாய்ச்சி சர சரவென கிழித்தான் சிவாஜி, புலிபோல் குதறினான்

அப்சல்கனுக்கு ரத்தம் ஊற்றாய் கொட்ட தொடங்கி குடல் சரிய ஆரம்பித்தது

மின்னல் வேகத்தில் நடந்துவிட்ட இந்த காட்சியில் அப்படியே திகைத்து நின்றான் தள்ளி நின்ற அப்சல்கானின் மெய்காப்பாளன் பாண்டா

அப்சல்கான் அலறவும் “மஹாலி” என கத்தியபடி அந்தரத்தில் பந்தய புறாவினை போல் சுழன்றான் சிவாஜி அவனை நோக்கி வாளை வீசினான் மஹாலி

அந்தரத்தில் சுற்றியபடிவாளின் கைபிடியினை சரியாக பிடித்தான் சிவாஜி அதன் உறை கழன்றது, சுற்றிய வேகத்தில் அப்படியே அப்சல்கானின் கழுத்தை சீவினான் சிவாஜி

சீவிய தலையினை ஒரு கையால் பிடித்தபடியே சுழன்று தரையில் ஒரு காலை ஊன்றியவன், ஒரு கையால் அந்த தலையினை பிடித்து கொண்டே மீண்டும் சுழன்று அப்படியே தன்னை நோக்கி ஓடிவந்த பாண்டாவின் கரத்தை துண்டித்தான்

மேற்கொண்டு பாண்டாவினை நோக்கி மகாலி வாள் வீச பாண்டா தலையும் விழுந்தது

அப்சல்கானின் மரண ஒலி எழுந்து மின்னல் வேகத்தில் அடங்கிற்று ஒர் நிசப்தம் மட்டும் சூழ்ந்தது தலையின்றி உடல் கிழிந்து குடல் சரிந்து மிக கோரமாக செத்து கிடந்தான் அப்சல்கான்

பாரத கண்டத்தையே அலறவைத்தவனும் உலகின் மிக கொடிய ராணுவ தளபதி என கருதபட்டவனுமான அப்சல்கான் அங்கே ஒரு மிருகத்தை போல் குதறபட்டு செத்து கிடந்தான்

உடலும் முகமும் வாளும் ரத்தத்தத்தில் நனைந்திருக்க வெளிவே வந்து அப்சல்கான் தலையினை தூக்கி காட்டி “ஜெய்பவானி….” என கத்தினான் சிவாஜி

அப்சல்கான் தரப்புக்கு முதலில் ஒன்றுமே விளங்கவில்லை மெல்ல மெல்ல சிவாஜி இறங்கிவரும் பொழுது அவன் கையில் இருந்த அப்சல்கானின் தலையினை பார்த்து அலறினார்கள்

தளபதி இல்லா படை சண்டையிட முடியாது, வியூகமில்லை என்பதைவிட மனதால்தளர்ந்துவிடுவார்கள், அந்த சேனை அப்படித்தான் வெல வெலத்தது

தானாஜி… என கத்தினான் சிவாஜி, ஒரு பீரங்கி வெடிக்கபட்டது

அவ்வளவுதான் “ஜெய் பவானி ஜெய் மகாதேவா” என கோஷங்கள் அதிர மின்னெலென திரும்பும் திசையெல்லாம் சிவாஜி சேனை எழுந்தது

அப்சல்கான் படைகளுக்கு தாங்கள் வசமாக சிக்கிவிட்டது தெரிந்தது, சிவாஜி யுத்தத்தை தொடங்கினான்

சிவாஜியின் சேனை அப்சல்கானின் குழம்பிய படைகளை சூழ்ந்து அடிக்க ஆரம்பித்தன, ஏற்கனவே அச்சத்தில் இருந்த அந்த படைகள் இன்னும் குழம்பின‌

முதலில் பிரதாப் கோட்டையினை சுற்றி இருந்த கன்டோஜி ஜதேவின் படைகள் மிக எளிதாக ஆப்ரிக்க வீரர்களான ஹாப்சி வீரர்களை வளைத்தன‌

அந்த படைகள் கூலிக்கு வந்தவைகளால் உணர்ச்சியோ உத்வேகமோ இல்லை, வியூகம் சொல்லிகொடுக்க தலைவனும் தளபதியும் இல்லை என்பதால் எளிதில் வாயில் புல்லை கடித்து கைதூக்கின‌

அன்று அப்படி செய்தால் சரணடைதல் என பொருள்

யுத்தம் வெகு எளிதாக பிரதாப் காட் கோட்டை அருகே முடிந்தது ஆனால் அப்சல்கானின் எஞ்சிய பகுதி படைகளுக்கு செய்தி எட்டி அவைகளின் பதிலடி எப்படி இருக்கும் என தெரிய கொஞ்ச நேரமாகும் என்பதால் அப்சல்கான் தலையுடன் கோட்டைக்கு விரைந்தான் சிவாஜி

அங்கே வாசலில் அரியணைபோட்டு அமர்ந்திருந்தாள் ஜீஜாபாய், அவள் காலில் அவன் தலையினை வைத்தான் சிவாஜி, அந்த தலையினை சலனமே இல்லாமல் உற்றுபார்த்து கொண்டிருந்தாள் ஜீஜாபாய்

“எங்கிருந்து வந்து யாரை தொட்டு யார் மகனை கொன்றாய்.. இது எங்கள் மண் எங்கள் நாடு, இனி உன்னை போல ஒவ்வொருவனுக்கும் இதுதான் கதி

எங்கிருந்தோ வந்து இந்து ஆலயங்களை உடைத்து, இந்துக்களை அடக்கி இந்து பெண்களை சீரழித்த இந்த கொடியவனின் உடலை நம் கோட்டை வாசலிலே புதையுங்கள், அந்த அஸ்திபாரத்தில் இந்து ராஜ்ஜியம் கட்டி எழுப்பபடும்

இந்துஸ்தானிகள் எக்காலமும் யாருக்கும் அடிமையாக மாட்டார்கள், அவர்களையும் அவர்கள் சனாதான தர்மத்தையும் தொட்டவர்களை விட மாட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக அவன் கல்லறை காலம் காலமாக இங்கே சாட்சியாய் நிற்கடும் ” என சொல்லி ஓங்கி அந்த தலையில் உதைத்தாள் ஜீஜாபாய்

அந்த தலை கோட்டைக்கு வெளியே விழுந்தது

அங்கே அவன் தலையோடு அவன் கோரமான உடலும் கொண்டுவரபட்டு பாண்டாவின் உடலும் சேர்த்து புதைக்கபட்டது, இன்றும் அந்த கல்லறை உண்டு

பிரதாப்காட் கோட்டையின் அடிவாரத்தில் உண்டு

சிவாஜி களத்துக்கு விரைந்தான் காரணம் அப்சல்கான் ஒருவனே கொல்லபட்ட நிலையில் 4 பக்கமும் சூழ்ந்த பிஜப்பூர் தளபதிகளை விரட்டி அடிக்க வேண்டும் எனும் அவசியம் இருந்தது

முழு யுத்தம் வெடித்தது, சிவாஜி சேனை தூள் பறத்தியது. அந்நிலையில் சிவாஜியின் மனம் தனக்கு தகவல் அனுப்பிய நாட்டியகாரியினை தேடியது, அவளை போன்ற பல நூறு பெண்களை விடுவிக்க துடித்தது

இதனால் முதலில் தென் எல்லையினை கையில் எடுத்து பிஜப்பூர் கோஷ்டி ஒரு பெண்ணை கூட கொண்டு செல்லமுடியா அளவு, ஒரு கொள்ளை பொருளை கூட கொண்டு செல்லமுடியாஅளவு காவலை முதலில் வலுபடுத்தினான்

இப்பொழுது அவன் முற்றுகைக்குள் பிஜப்பூர் படைகள் சிக்கின, மிக பயங்கர யுத்தம் தொடங்கிற்று

கன்ஹோஜி ஜெதே மோரோ,பந்த் பிங்கலே, ரகுநாத் பல்லால் ,பாபாஜி போசலே, தானாஜி என சிவாஜியின் தளபதிகள் வெறியாட்டம் ஆடினர்

அந்நிலையில் குதிரைபடையோடு வேகமாக களத்துக்கு வந்தான் நட்டாஜி பால்கர், யுத்தம் இன்னும் வலுவானது

இந்துக்களின் பதிலடியினை முதன் முதலாக ரத்தம் ஒழுக ஒழுக, மனம் பதைக்க பதைக்க பார்த்து அஞ்சி ஒடுங்கி கொண்டிருந்தன ஆப்கானிய, ஆப்ரிக்க, ஈரானிய, துருக்கிய, அரேபிய கூலிபடைகள், அப்படி ஒரு அடியினை அன்றுதான் கண்டார்கள்

மிகபெரிய பலம் மிக்க ஆப்ரிக்கரும் மூர்க்க தாக்குதலை கொண்ட உஸ்பெக் ஆப்கானியரும் மரண அடி வாங்கி மண்டியிட தொடங்கினர், சிவாஜி படைகளின் வியூகம் அப்படி இருந்தது

யுத்தம் சிவாஜி பக்கம் வெற்றியாய் சரிய தொடங்கியது, காவிகொடி உயர ஆரம்பித்தது

சித்தி ஹலால், கேடட், சார்வான் கான் என மூவரையும் முடக்கினால் யுத்தம் முடியும் என்ற நிலையில் தகப்பன் அப்சல்கானின் சாவுக்கு பழிவாங்க மூர்க்கமாய் தாக்க தொடங்கினான் அவன் மகன் பாசல்கான்

இதனிடையே அப்சல்கான் கொல்லபட்ட செய்தி பிஜப்பூரை எட்டிற்று ,சுல்தானியம் குழப்பத்திலும் அச்சத்திலும் மூழ்கியது

பாரத கட்டத்தினையே தன் உறுமலிலும் நடையிலும் பயமுறுத்திய மாபெரும் சக்தியான அப்சல்கானை சிவாஜி வயிற்றை கிழித்து கொடூரமாய் கொன்று தலையினை வெட்டினான் என்பதில் ஆடிபோனார்கள்

ஷாஹாஜி மனதுக்குள் நிம்மதி அடைந்தான், தான் செய்யமுடியாததை சிவாஜி செய்தான் என்பதில் அவனுக்கு ஆழ்ந்த நிம்மதி வந்தது, இனி சிவாஜியினை அடக்க எவனுமில்லை என்பது அவனுக்கு தெரிந்தது

சிவாஜி அப்சல்கானையே கொன்றுவிட்டான் இனி எந்நேரமும் தெற்கே பாயலாம் எனும் பெரும் அச்சம் எழும்பிய நிலையில்தான் அப்சல்கானின் குடும்பத்தார் சுமார் 63 பேர் உயிரை விட்டனர்

இது நடந்த வரலாறு ஆனால் எப்படி நடந்தது என்பதில்தான் குழப்பம் உண்டு

ஒரு தரவு அப்சல்கான் சொன்னபடி அவன் மெய்காப்பாளர்களே சிவாஜி கையில் இவர்கள் கிடைக்க கூடாது என்பதற்காக கொன்றார்கள் என்கின்றது

இன்னொரு தரப்பு அப்சல்கான் மேல் தீரா பகைகொண்ட தென்னக நாயக்கர்கள் சமயம் பார்த்து கொன்றார்கள் என்கின்றது, சிலதரப்போ அது ஆப்ரிக்க ஈரானிய இன மோதலில் நடந்த கொலை என்கின்றார்கள்

ஏகபட்ட எதிரிகளை தனக்கு எதிராக உருவாக்கிய அப்சல்கானின் குடும்பம் இப்படி மொத்தமாக அழிந்தது

இந்து ஆலயங்களை இடித்து கொள்ளை அடித்து, இன்னும் பெரும் பாதகங்களை செய்த அப்சல்கானின் வம்சம் இப்படி அடியோடு அவனைபோல் அழிந்தது, ஒரு வகையில் இது தெய்வத்தின் சாபம் அல்லது கோபம்

இதைத்தான் அந்த இஸ்லாமிய சுபி ஞானியும் சொன்னார்

அப்சல்கானின் குடும்பத்தார் புதைக்கபட்ட இடம் இன்றும் பிஜப்பூர் அருகே சாத் கபார் எனும் இடத்தில் 60க்கும் மேற்பட்ட கல்லறைகளாக உண்டு

இந்து ஆலயங்களை நொறுக்கி இந்து பெண்களை வதைத்த அவனின் முடிவு இப்படித்தான் முடிந்தது, அதுவும் பசுவினை வெட்டி ஆலங்களை அசிங்கபடுத்திய அவனின் கொடூர போக்கெல்லாம் அவனையும் அவன் குடும்பத்தையும் ரத்த வெள்ளத்திலே அழித்தது

பிஜப்பூர் இப்படி இருக்க, பிஜப்பூரின் எஞ்சிய சேனை அவர்களின் தளபதி ருஸ்டம் சாமன் தலமையில் திரண்டிருந்தது, காரணம் சிவாஜி பிஜப்பூரை நோக்கி வர வாய்ப்பும் இருந்தது, வென்றவன் தோற்ற தரப்பு மேல் பாய காரணம் பிரமாதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை

நிலமை இப்படி இருக்க வடக்கே சிவாஜியின் சேனை அப்சல்கானின் தளபதிகள் ஒவ்வொருவராக முடக்கியது, சிலர் புல்லை கடித்தனர், சிலர் அலறி அடித்து எங்கெல்லாமோ ஓடினர்

ஜின்சிரா தீவில் இருந்த சேனை கப்பல் மூலமே பிஜபூருக்கு ஓடிற்று

சித்தி கலால், பாசில் கான், சார்வர் கான ஆகியோர் தப்பி ஓடியிருந்தனர், கூலிக்கு வந்த படைகளை கூலிகளின் தலைவன் விட்டு ஓடுவதில் ஆச்சரியமில்லை

ஆனால் அப்சலின் இரு மகன்கள் என எல்லோரும் வளைக்கபட்டனர், காயம்பட்ட சித்தி வீரர்கள், ஹாப்சி வீரர்களெல்லாம் இனி சாவுதான் என அஞ்சி ஒடுங்கி இருந்தனர்

ஏகபட்ட குதிரைகளும், பீரங்கிகளும், ஆயுதங்களும், யானைகளும் சிவாஜியால் கைபற்றபட்டன மிக வலுவான நிலைக்கு வந்தான் சிவாஜி

பிடிபட்டவர்களை காண தானே நேரடியாக வந்தான் சிவாஜி, சுமார் 500 ஆண்டுகால பாரத வரலாற்றில் இந்து கூட்டம் ஆப்கானிய படைகளை கதறடித்து முழங்காலில் நிறுத்தியது அதுதான் முதல் தடவை

முதல் தடவையாக ஆப்கானியரிடம் சிக்கிய இந்து பெண்கள் மீட்கபட்டிருந்தன, சிவாஜி தங்களை கைவிடமாட்டான் என நம்பிய அப்பெண்கள் அவனுக்காய் ஆனந்த கண்ணீருடன் காத்திருந்தனர், அவர்களில் ஓரமாக நின்றுகொண்டிருந்தாள் ஜனதுலானி

ஆம் அது அற்புதம், நம்ப முடியா அதிசயம், நடக்கவே நடக்க முடியா ஆச்சரியம்

அந்த அற்புதத்தை செய்த சிவாஜி களத்துக்கு வேகமாக வந்தான், அவன் குதிரையில் காவிகொடி கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது, அவன் இடுப்பில் அந்த பவானியின் வாள் மின்னிகொண்டிருந்தது