அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்?

அண்ணே உங்களுக்கு ஒண்ணுமே தெரியல்ல, இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க ஆபத்து, அந்த பிராமணாலதான் ஈழத்துல அப்படி அழிச்சி போச்சி நம் இனம், வாங்க வந்து விளக்கு ஏந்தி அஞ்சலி செலுத்துங்க
அப்படி என்னடா நடந்துட்டு? அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்?
அண்ணே நீங்க பிராமணனுக்கு சப்போர்ட் பண்றீங்க, அவனுக பொல்லாதவனுக. இப்ப கூட பாருங்க இந்திய ராணுவத்துல ஒரு பிராமணும் இருக்க மாட்டான், சாக மட்டும் அடுத்தவன் வேணும் அவனுக்கு. அப்படித்தான் இலங்கையில நம் இனத்தையும் அழிச்சிட்டானுக
டேய் அப்படி எல்லாம் இல்லடா, பிராமணர் சில கமாண்டர்கள், தொழில் நுட்பத்தில் எல்லாம் இருக்காங்கடா
அண்ணே வீரம்னா அதுவா? அது கோழைத்தனம். ஈழத்துல என் உறவுகள் காட்டிச்சே அதுவீரம். அது பொறுக்காம ஆரிய இந்தியா, பிராமண இந்தியா ஒழிச்சிட்டு
ஓஹோ
ஈழத்துல
ஆமாண்ணே, அது வீரம் நிறைந்த போர்
சரி நடத்துனது யாரு?
மாவீரன் பிரபாகரன்
அவர் எங்க இருந்தார்?
பங்கருக்குள்ள, அணுகுண்டு கூட துளைக்க முடியாது
ஏண்டா டேய், இங்க பிராமணன் சண்டை போடலன்னு சொல்றது, பிரபாகரன் எங்கன்னு கேட்டா பங்கருக்குள்ளன்னு சொல்றது
அண்ணே அது வீரம்?
எதுடா யாழ்பாணத்தான் எல்லாம் ஐரோப்பா பக்கம் ஓட , கஷ்பட்ட கிழக்கு மக்களை வச்சி யுத்தம் பண்ணாரே உங்க பிரபாகரன் அதுவா வீரம்? சாக மட்டும் கிழக்கு பக்கம் உள்ளவங்க வேணுமா?
அப்படியாண்ணே
என்ன கொப்புடியான்னே? பின்ன எதுக்குடா கருணா பிரிஞ்சார்?
இப்படி எல்லாம் கேட்டா எப்படிண்ணே?
பின்ன என்னடா? யாரை எல்லாமோ பிடிச்சி உண்ணாவிரதம் இருக்க சொன்னார், சாக சொன்னார், பெண் மேல குண்ட கட்டி போய் வெடிச்சி சாகுண்ணு சொன்னார், அதெல்லாம் சொலலாத நீ, இங்க வந்து பிராமணன குதிச்சிட்டு இருக்க.. பிராமணனுக்கு பயம் அதிகம்னு
அண்ணே யுத்தத்தை வழிநடத்த அறிவான ஆள் வேணும்னே அவருக்கு மூளை அதிகம், அதான் அப்படி ஓளிச்சி கிடந்தாரு
அதாண்டா இங்கேயும் சிலர் பின்னால இருக்காங்க ஓடிரு நாய
உங்கள திருத்தவேமுடியாதுண்ணே, எவனோ ஒரு பிராமணன் குஷ்பு சங்கததுல சேரபோறேன்னு சொல்லிருக்கான் அதான் இப்படி பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க
டேய் நில்லுடா…