அப்படி மைத்ரிபாலா என்ன பேசிவிட்டார்?

Image may contain: 1 person, glasses

இலங்கையில் சில இடங்களில் இந்நாளைய அதிபர் மைத்திரிபாலா பேச்சில் அசத்துகின்றார், அதெல்லாம் இங்குள்ள பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்கின்றன‌

சிங்கள, ஈழ மக்களின் ஒற்றுமையான பொற்காலத்தை நினைவுபடுத்தி கசப்பான காலங்களை கடக்க சொல்லும் அவரின் அணுகுமுறை இங்குள்ளவருக்கு எப்படி பொறுக்கும்? அதனால் கண்கள் சிவக்க மைத்திரிபாலா ஒழிக என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

அப்படி மைத்ரிபாலா என்ன பேசிவிட்டார்? அற்புதமான வரலாற்றை சொல்லியிருக்கின்றார்

அதாகபட்டது உலகின் முதல் பெண்பிரதமர் சிரிமாவோ பண்டாராநாயக, உலக நாடுகளின் முதல் பெண்பிரதமர் இலங்கையர் என்பதில் அன்று அத்தேசம் மகிழ்ந்திருந்தது

அவரின் மகள்தான் சந்திரிகா

இந்த சிரிமாவோ பண்டாரநாயகவின் கணவர் பண்டாரநாயக இலங்கை அதிபராக இருந்தபொழுதுதான் மலையக அகதிகள் இந்தியா விரட்டபட்டனர், அதனால் ஈழதமிழரின் ஆதரவும் அக்குடும்பத்திற்கு இருந்தது

அப்படிபட்ட சிங்கள குடும்பத்தின் சிரிமாவோ யாழ்பாணம் வந்தபொழுது ” ஈழபெண்கள் எல்லாம் தங்கள் தலைமுடி தெருவில் பட விழுந்து சொன்னார்களாம், அம்மா எம் தலைமுடி மீது நடந்து செல்லுங்கள், இலங்கை மாதர்குல மாணிக்கமான உங்களை கவுரபடுத்த இதனைவிட வேறுவழி தெரியவில்லை “

சிரிமாவோ “அப்படி முடியாது, என் குடிமக்களாகிய உங்கள் தலைமுடிமீது நடக்கமாட்டேன் உங்கள் அன்புக்கு நன்றி.” என மறுத்துவிட்டாராம்

இது நடந்திருக்கின்றது என வரலாறும் சொல்கின்றது, 1960களில் நடந்திருக்கலாம்

இப்பொழுது அப்படி எல்லாம் ஒற்றுமையாய் இருந்த நாம் இடையிலே சண்டையிட்டு நாசமானோம், இனி பழம் பொற்காலம் திரும்பவேண்டும் என்கின்றார் மைத்திரிபாலா

இது ஈழத்தவருக்கு பிடிக்குமா இல்லையா என்பது தெரியாது, ஆனால் தமிழகத்து ஈழவியாபாரிகளுக்கு நிச்சயம் பொறுக்காது

அங்கு அமைதி திரும்பிவிட்டால் இவர்களுக்கு என்ன வேலை? ஈழம் சென்று ஒடியலும் , சொதியும் சாப்பிடவா? அங்கு தமிழன் செத்துகொண்டிருந்தால்தான் இவர்களுக்கு மகிழ்ச்சி

இப்படி எல்லாம் உருக்கமாக பேசும் மைத்திரிபாலா விரைவில் இங்கு தமிழின துரோகி என அறிவிக்கபடலாம்.

“ஈழ மயிர்க்கதை சொல்ல வந்த மயிராண்டி” என அங்கிள் சைமனும் அவர் கோஷ்டியும் விரைவில் பொங்குவார்கள்.