அப்பல்லோவிற்கு மோடி ஏன் வரவில்லை?
2011ல் மோடி ஜெயலலிதாவினை கவனித்துகொள்ள நர்ஸ் அனுப்பினார் எனவும் அந்த நர்ஸ் விரைவிலே விரட்டபட்டார் எனவும் சில தகவல்கள் கசிகின்றன
அதனை தொடர்ந்து கோபமுற்ற மோடி உங்கள் உணவில் கவனமாக இருங்கள் என சொன்னதாகவும் செய்திகள் வருகின்றன.
அவர் பொதுவாக அப்படி கூறினாரா அல்லது சில விவகாரங்கள் பற்றி தெரிந்த பின் அப்படி ஜெயலலிதாவை எச்சரித்தாரா என்பது பற்றி தெரியவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது.
இதே 2011ல்தான் மன்னார்குடி கும்பலும் போயஸ்கார்டனில் இருந்து விரட்டபட்டதும் குறிப்பிடதக்கது
இதே காலகட்டத்தில் மன்னார்குடி கும்பல் மீது ஜெயா சாட்டிய குற்றசாட்டுக்களும் பயங்கரமானவை.
சோ ராமசாமிக்கும், மோடிக்கும் இருந்த நெருக்கம் உலகறியும்.
ஆக குஜராத் முதல்வராக மோடி இருந்தபொழுதே போயஸ் கார்டன் மீது அவருக்கு சந்தேக பார்வை விழுந்திருக்கின்றது தெரிகின்றது
ஜெயலலிதாவினை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை மோடி கவனித்துகொண்டே இருந்திருக்கின்றார்.
எய்ம்ஸ் டாக்டர்கள் வந்து சென்றபின்னும் அப்பல்லோவிற்கு மோடி ஏன் வரவில்லை? என்ற கேள்விக்கும் சில பதில்கள் புரிகின்றன, அவருக்கும் புரிந்திருக்கின்றது
உத்திரபிரதேச தேர்தலை முடித்துவிட்டு மோடியின் சீற்றபார்வை இங்கு விழ வாய்ப்பிருக்கின்றது என்கின்றார்கள்
இருக்கலாம், இல்லை என்றால் ஏன் நர்ஸ் கதையினை இப்பொழுது கசியவிடுகின்றார்கள்??