அப்பாவுவினை பேசவைக்கும் அளவிற்கா திமுகவில் ஆளில்லாமல் சென்றுவிட்டது???

Image may contain: 1 person, close-up

கலைஞர் டிவியில் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசிகொண்டிருக்கின்றார்

மனிதர் ஆரம்பம் முதல் திமுக தொண்டர் அல்ல, தாமாகாவில் இருந்தவர், பின் சுயேட்சை

ராதாபுரம் தொகுதி அவரை நம்பியது, கலைஞரும் நம்பினார் திமுகவில் சேர்த்தார்

அதன் பின் தானே ராதாபுர குறுநில மன்னன் நானே என நினைத்துகொண்டார் அப்பாவு, யாரையும் மதிப்பதில்லை, யாரையும் அனுசரித்து செல்லவுமில்லை

ஏதோ பிச்சைகேட்டு வருபவரை போல எல்லோரையும் அவர் நடத்த தொடங்கிய விளைவு தேர்தலில் வெளிப்பட்டது

அவருடன் இருந்த பலரே அவரை விட்டு விலகினர், விளைவு அதிமுக எளிதாக வென்றது. அதிமுகவிற்கு அது சாதகமான தொகுதி அல்ல, ஆனால் வெல்லும் நிலைக்கு அதை கொண்டு சென்றவர் சாட்சாத் அப்பாவு

அங்கு திமுக பின்னோக்கி செல்ல முதல் காரணம் இவர்தான், அந்த அளவு ஒரு மாதிரியான அணுகுமுறையில் மக்கள் வெறுப்பினையே சம்பாதித்திருக்கின்றார்.

இப்பொழுதெல்லாம் அவர் பணக்கார தொழிலதிபர்களுக்கு ஆதரவானவர் என்பதை தவிர அவர் தொகுதியிலே வேறு பெயர் அவருக்கு இல்லை

உண்மையில் அவருக்கு அரசியல் தெரியாது, விருப்ப ஓய்வு பெற்று ஒரு தொழிலதிபரின் பினாமியாக தாமாகா சார்பில் நின்று வென்றவர்

திமுக பற்றியோ, அது தொண்டர்களை அணுசரித்து செல்லும் விதம்பற்றியோ ஒரு மண்ணும் அவருக்கு தெரியவில்லை.

ஏடாகூட பேச்சுக்களாலும், தொண்டர்கள் மனம் வெறுக்கும் செயல்களினாலும் திமுகவினை அங்கு சரித்துகொண்டிருக்கின்றார்.

ராதாபுரம் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது, அதை திமுகவின் பாதுகாப்பான தொகுதியாக மாற்றத்தான் கலைஞர் வாய்ப்பு கொடுத்தார்

அதெல்லாம் வீணாக்கிவிட்டு கலைஞர் டிவியில் ஏதோ அண்ணா காலத்து அரசியல்வாதி போல பேசிகொண்டிருக்கின்றார்

அப்படி திமுகவினை ராதாபுரம் தொகுதியில் சரித்தவர்தான் இன்று கலைஞர் டிவியில் பேசிகொண்டிருக்கின்றார்

அப்பாவுவினை பேசவைக்கும் அளவிற்கா திமுகவில் ஆளில்லாமல் சென்றுவிட்டது???

திமுகவினை தன் சொந்த தொகுதியில் கெடுத்து கொண்டிருப்பவரை எல்லாம் உயர்த்திபிடிக்கும் திமுக இனி என்னாகபோகின்றதோ?


அடேய்

1996ல் ரஜினி படத்தோடும் சைக்கிள் சின்னத்தோடும் வென்றுதான் அரசியலுக்கு வந்தார் அப்பாவு

அப்பொழுதெல்லாம் ரஜினி ரசிகர்களோடு அவர் ஓட்டுகேட்ட சாட்சிகள் இன்றும் அப்பக்கம் உண்டு, ரஜினி எங்களை ஆதரிக்கின்றார் வாக்களிப்பீர் என தெரு தெருவாக வந்தவர் அப்பாவு

அவரால் மறுக்க முடியுமா?

அந்த அப்பாவு ரஜினியினை எதிர்க்கின்றாராம், இதற்கும் சிலர் கைதட்டுகின்றார்களாம்

ரஜினியினை விமர்சிக்க இவருக்கு என்ன தகுதி?

அன்று மட்டும் ரஜினி வேண்டுமாம், இன்று வேண்டாமாம்