அமலா பால் , பொன்னார் , வீரமணி
வரி ஏய்ப்பில் சிக்கினார் நடிகை அமலா பால்
அதாவது அம்மணிக்கு பென்ஸ்கார் வாங்க ஆசை, ஆனால் நேரடியாக வாங்கினால் வரி அது இது என கறந்துவிடுவார்கள் என அஞ்சிய அவர் புதுச்சேரியில் ஒரு போலி முகவரி மூலம் கார் வாங்கியிருக்கின்றார்
இதனால் கேரள அரசின் வருமானம் குறைந்துவிட்டதாம், நிலமை சிக்கலாகின்றது
அம்மணி மீது புகார் நிரூபிக்கபட்டால் சிறைதான்
என்ன செய்வது? இதற்குத்தான் ஏதாவது ஒரு கட்சியில் இருக்க வேண்டும் என்பது, இருந்தால் அரசியல் பழிவாங்கல் என சொல்லி தப்பிக்கலாம்
உடனே அமலா பால் ஏதாவது ஒரு கட்சியில் சேர்வது நல்லது.
அ.தி.மு.க., முடிந்து ஓராண்டாகி விட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக முடிந்துவிட்டது என்பது உங்கள் பிரச்சினை அல்ல, பாஜக இங்கு முளைக்கவே இல்லையே அது அல்லவா உங்கள் பிரச்சினையாக இருக்க வேண்டும்
அதைபற்றி ஏன் ஒன்றும் சொல்வதில்லை மிஸ்டர் பொன்னார்?
மிஸ்டர் வீரமணி, இந்த தேவர் ஜெயந்தியில் கொஞ்சம் பகுத்தறிவு பேசினால்தான் என்ன?
பிராமணன் ஏதும் செய்தால் ஓடிவந்து ஆரியம், பிராமணியம் என பகுத்தறிவு பேசுவது
மற்ற சாதி ஏதும் செய்தால் கப்சிப்பாக அமர்ந்துகொள்வது, இதுதான் பெரியார் சொன்ன பகுத்தறிவா?
இந்த பன்றிக்கு பூனூல் போடுதல் போன்ற அழிச்சாட்டிய செய்த பெரியார் திராவிட கும்பலையும் இப்பொழுது காண முடியாது.
ஆனால் சாதி ஒழிப்பு என சொல்லிகொண்டே இருப்பார்கள்.
எங்கே ……க்கு குருபூஜை நடத்த சில பகுத்தறிவுவாதிகள் கிளம்பட்டும் பார்க்கலாம்?