அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள்

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள், அடிக்கடி தமாஷ் செய்வார்கள், உடனே மற்றவர்களும் கூட சேர்ந்து பெரும் காமெடி செய்வார்கள்

அப்படி டெக்சாஸ்லில் உள்ள மொலோசியா கிராமத்தில் 13 பேர் தாங்கள் தனிநாடு உருவாக்கிவிட்டதாக சொல்லி தமாஷ் செய்தார்கள், சும்மா அல்ல இது 40ம் ஆண்டு சுதந்திர விழா என சொல்லிகொண்டார்கள்

மற்ற மக்களும் வாழ்த்தினார்கள், இவர்களோ இது எங்கள் கொடி இது எங்கள் அரசு, இது எங்கள் மக்கள் என சொல்லிகொண்டே இருந்தார்கள்

அந்த 13 பேர்தான் அமைச்சர்கள், அதிபர்கள் அவர்கள்தான் மக்கள், அவர்கள் தான் ராணுவம் அவர்கள்தான் மொத்தமும்

சரி காமெடி போதும் வரி கட்டினீர்களா என அமெரிக்க அரசு கேட்க, அடுத்த நாட்டுக்கான நிவாரண உதவியினை எப்பொழுதோ வழங்கிவிட்டோம் என மறுபடியும் சிரிக்க வைத்திருக்கின்றார்கள்

உலகின் பல நாடுகளின் சுதந்திரத்தினை அமெரிக்கா தடுக்கின்றது என்பதை இப்படி அங்கு சிலர் காமெடி செய்து எதிர்ப்பு தெரிவிப்பார்களாம்

இது அவர்கள் உலக வல்லரசான காலத்தில் இருந்து உள்ள விஷயம், வியட்நாம் போரின் பொழுதும் அமெரிக்கர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவித்தார்கள்

இது அதில் ஒருவகை அவ்வளவுதான், இது நிச்சயமாக வேடிக்கை

ரஜினி ரசிகர்கள் பாரதிராஜாவினை கண்டு கொள்ளாதது போல அமெரிக்க அரசும் இவர்களை கண்டு கொள்ளாது

ஆனால் இது நமது பக்கம் நாம் தமிழர், தமிழர் உரிமை, இன உணர்வு என பேசிகொண்டிருப்பவர் காதில் விழுந்தால் என்னாகும்?

சீனா எங்கிருக்கின்றது என தெரியாமலே, சீனாவுடன் இந்தியா யுத்தம் புரிந்தால் சீனாவினை ஆதரித்து தமிழ்நாடு அமைப்போம் என சொல்லிகொண்டிருக்கும் கூட்டம் இது

ஒருவேளை இந்த அமெரிக்க சம்பவம் தெரிந்துவிட்டால்?

உலகம் காமெடியாக நினைப்பதெல்லாம் இவர்களுக்கு மகா சீரியஸ், உலகம் சீரியஸ் என நினைப்பதெல்லாம் இவர்களுக்கு காமெடி

அவ்வளவுதான், தமிழகத்தில் சீரியசாக 10 பேர் , 5 பேர் சேர்ந்து நாடு அமைப்பார்கள், அங்கிள் சைமன் தன் அலுவகத்திலே அதிபர், வெளியுறவு, ராணுவம் என 4 மேஜைகளை போட்டு சுதந்திர பிரகடனத்தை அறிவித்துவிடுவார்

“அமெரிக்காவில் மொலிசியா இருப்பது போல் நாங்கள் கவுரவமாக இந்த நாட்டிற்குள் நாடாக இருப்பதில் என்ன தவறு என் சொந்தமே ” என சீரியசாக கிளம்புவார்கள்

“இலக்கை அடைந்தோம், இன விடுதலை பெற்றோம், இது தமிழ் வானம்” என அவராக தன் அல்லக்கைகளோடு மொட்டை மாடியிலும் கத்துவார்

அதற்கும் கைதட்ட ஒரு கூட்டம் இருக்கும், அதோடு விடுமா? அண்ணே வாருங்கள் பாகிஸ்தானோடு சேர்ந்து இந்தியாவோடு யுத்தம் தொடங்கி அகண்ட தமிழகம் அமைப்போம் என சிலர் சீரியசாக சொல்வார்கள்