அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி…
அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது, இம்முறை 17 பேர் கொல்லபட்டிருக்கின்றார்கள்
இது தீவிரவாத தாக்குதலோ, ரவுடி கும்பல் மோதலோ இல்லை காவலர்கள் நடத்திய தடுப்பு தாக்குதலோ அல்ல , மனம் வெறுத்த மனநோயாளிகள் செய்யும் காரியம்
நமது ஊரில் கோபம் வந்தால் சிலர் பேசாமல் இருப்பார்கள், சிலர் சீமான் அளவு கத்திவிட்டு அமைதி ஆவார்கள், சிலர் தமிழிசை போல புலம்பிகொண்டிருப்பார்கள்
இங்குள்ள மனநிலையும், வாழ்க்கை முறையும் வேறு
அமெரிக்கா அப்படி அல்ல, தனிமனித சுதந்திரம் மிக்க நாடு, யாரும் யாரையும் கட்டுபடுத்தமுடியாது. பெற்றோரும் பிள்ளைகளை அறிவுறுத்த முடியாது. இதனால் ஒரு மாதிரி தனித்து திரியும் உள்ளூர மனநோயாளிக மாறுவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது
அவர்கள் பணிச்சுமையும், தனிமையும் வாழ்க்கை முறையும் அப்படி மாற்றிவிடுகின்றன
மனகிறுக்கு பிடித்த நிலையில் துப்பாக்கி எடுத்து பலரை சுட்டுவிட்டு அவர்களும் செத்துவிடுகின்றார்கள்
இவ்வளவு நடந்தும் ஏன் துப்பாக்கியினை அரசு தடுக்கவில்லை? ஏன் எல்லோர் கையிலும் துப்பாக்கி இருக்கின்றது
அமெரிக்க சட்டம் அதுதான். அவர்கள் பிரிட்டிசாரை துப்பாக்கி முனையில் விரட்டியவர்கள். நாளையே மக்கள் விரோத அரசு அமையும் பட்சத்தில் அவர்களையும் விரட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அன்றே அது அனுமதிக்கபட்டது
அது இன்றுவரை தொடர்கின்றது
இச்சட்டத்தை மாற்ற வேண்டும் என ஒரு கும்பலும் இல்லை எங்கோ எப்பொழுதோ நடக்கும் விவகாரங்களுக்காக மக்கள் சுதந்திரத்தில் கைவைக்க கூடாது என்றொரு கும்பலும் சொல்லிகொண்டிருக்கின்றன
எனினும் இந்த ஆயுத சுதந்திரம் குறித்து அமெரிக்கா ஒரு முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது மட்டும் புரிகின்றது