அமெரிக்காவில் விமான கடத்தல்
அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்திருப்பது கடும் கவனத்தை பெற்றிருக்கின்றது
அதாவது நமது ஊரில் மினிபஸ்கள் போல அமெரிக்காவில் ஏகபட்ட உள்நாட்டு விமானங்கள், அது மிக மிக பரந்த நாடு என்பதாலும் தொழில்நுட்பட்தில் உச்சத்தில் இருப்பவர்கள் என்பதாலும் அவர்கள் வானமெல்லாம் விமானங்களினாலே நிறைந்திருக்கும்
அப்படி சியாட்டிலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த விமானத்தை, அதை பராமரிக்கும் மெக்கானிக் ஒருவன் கடத்தி சென்றிருக்கின்றான், உடனே அலறிய விமான நிலையம் அமெரிக்க விமானபடையினை தொடர்பு கொள்ள அவர்களும் ராணுவ விமானத்திடன் பின் தொடர்ந்திருக்கின்றார்கள்
இந்நிலையில் கடத்தபட்ட விமானம் வானிலே வெடித்திருக்கின்றது, அத்தோடு கடத்தியவனும் செத்துவிட்டான். விசாரணை நடந்தது
முடிவும் வந்தது
“அவன் விமான வீடியோ கேம் விளையாடுவான் ஏதோ ஆசைபட்டு கடத்திவிட்டான் , ஆனால் நடுவானில் இந்த தொடரி படத்து கீர்த்தி சுரேஷ் போல விமானத்தை கட்டுபடுத்த தெரியாமல் தவித்திருக்கின்றான் அது வெடித்துவிட்டது” என மூடிவிட்டார்கள்
நீங்கம் நம் வாசகர்களாக இருந்தால் சில சந்தேகம் வரலாம்
விமானம் இயக்க தெரியாதவனா டாக்சி வேயில் இருந்து ரன்வேக்கு ஓட்டி வந்து அட்டகாசமாக பறந்தான்?
விமான கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளாமல் எப்படி அவனால் பறக்க முடிந்தது?
கடைசியாக அவனை தொடர்பு கொண்டபொழுது என்ன பேசினான்?
9/11 சம்பவத்தை தொடர்ந்து பெரும்பாலும் விமானங்களின் பாதுகாப்பும் தொழிநுட்பமும் கடத்தமுடியாமல் வலுபடுத்தப்ட்டபின் இது மட்டுமெ எப்படி முடிந்தது?
கடத்தியவன் இறங்கும் இடம் தெரியாமலா கடத்தியிருப்பான்?
ஆக நடந்திருப்பது இதுதான் என்கின்றார்கள்
முதலாவது தீவிரவாதிகள் ஏதும் பரிசீலித்து பார்த்திருக்கலாம், கடத்தியவன் சீலீப்பர் செல்லாக இருந்திருக்கலாம், இம்மாதிரி பராமரிப்பிற்கு நிறுத்தியிருக்கும் விமானங்களை கடத்துவது சாத்தியமா? என பரிசீலித்திருக்கலாம்
இரண்டாவது விஷயம் கவனிக்க வேண்டியது
ஏதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடிய உளவு தகவலை பெற்ற அமெரிக்க பாதுகாப்பு துறை அட்டகாசமாக அவர்களே நாடகத்தை நடத்தி, எப்படி கடத்தினாலும் இது முடிவு என மவுனமாக உலகிற்கு சொல்லலாம்
மூன்றாவது கோணம் இப்படிபட்ட சூழலுக்கு விமானபடை பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என சோதிக்க இந்த விஷயம் நடத்தபட்டிருக்கலாம்
அமெரிக்க உளவுதுறையினையும், பாதுகாப்பு துறையினையும் நம்பமுடியாது என்பதால் இரண்டாவது விஷயத்திற்கு வாய்ப்பு அதிகம்
ஆனால் ஒரு விஷயம் கவனிக்கதக்கது, அதாவது விமானம் கடத்தபட்டவுடன் அமெரிக்க ராணுவ விமானம் பாய்ந்திருக்கின்றது
அந்த அளவு எந்த சூழலுக்கும் தயாராக இருந்திருகின்றார்கள்
இதுவே இந்தியா என்றால் எப்படி இருந்திருக்கும்? விமானம் கடத்தபடுகின்றது என அலறினால், விமானி விடுமுறையில் சென்றுவிட்டார், விமானத்திற்கு பெட்ரோல் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை என ஆயிரம் காரணம் சொல்லிகொண்டே இருப்பார்கள், அதற்குள் விமானம் செல்லவேண்டிய இடத்திற்கு பத்திரமாக கடத்தபட்டு கடத்தல்காரர்கள் பேச்சுவார்த்தையும் தொடங்கி இருப்பார்கள்
எப்படியோ அமெரிக்கா யாருக்கோ எதையோ சொல்ல வருகின்றது புரிகின்றது, புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
அமெரிக்காவில் விமானம் கடத்தபட்ட உடன் அந்த விமானபடை எப்படி உடனே கிளம்பியது என சொல்லும்பொழுது இந்திய நிலையினையும் சொன்னோம்
உடனே எப்படி சொந்தநாட்டை இழிவுபடுத்துவதா என கிளம்புகின்றார்கள்
இங்கே எப்பொழுதும் எல்லா பாதுகாப்பு விஷயமும் விழிப்பாக இந்ததே இல்லை, நிறைய சொல்லலாம் இருந்தாலும் 2 விஷயம் மகா அவமனாகரமானது
முதலில் ராஜிவ் கொலையாளி பெங்களூர் பக்கம் பதுங்கி இருந்தபொழுது அதிரடி படையினை உடனே கோரினார்கள், ஆனால் அது வீரர்களை திரட்டி விமானம் ஏறி வந்து சேர ஒரு நாள் ஆனது
அதற்குள் சுதாரித்து ஆவணங்களை எரித்து, சாவகாசமாக சண்டையிட்டு , கடைசியாக தற்கொலை செய்தான் சிவராசன், அதுவும் அவன் செத்து சிலமணி நேரம் கழித்தே உடல் மீட்கபட்டது
மும்பை தீவிரவாத தாக்குதலில் நடந்ததென்ன?
தாஜ் ஹோட்டலை தீவிரவாதிகள் கைபற்றுகின்றார்கள் என செய்தி அனுப்பி மிக மிக தாமதமாகவே வந்தது பாதுகாப்பு படை
என்ன செய்தார்கள்?
தூங்கியவர்களை எழுப்பி , துப்பாக்கி வேலை செய்கின்றதா என பார்த்து, இன்னும் சாப்பிட்டு மெதுவாக ஷூ எல்லாம் போட்டு வருவதற்குள் என்னவெல்லாமோ ஆனது
அதிரடி தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களில் நம் படைகள் கிளம்புவது இப்படித்தான்
இதை சொன்னால் பலருக்கு கோபம் வருகின்றது
உலகிலே எதற்கும் தயார் என 24 மணி நேரமும் விழிப்பாய் இருக்கும் நாடு இஸ்ரேல் நினைத்தஉடன் அவர்களால் யுத்தமே நடத்த முடியும்
9/11 தாக்குதலுக்கு பின் அமெரிக்காவும் அப்படி மிக ஜாக்கிரதையாக ஆகிவிட்டது
இந்தியா இன்னும் விழிக்கவில்லை, அதை சொன்னால் ஏற்றுகொள்ள மறுக்கின்றார்கள்