அமெரிக்காவை விட கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
“மிஸ்டர் டிரம்ப்
அமெரிக்காவினை இந்த அமைச்சர் எப்படி கேவலபடுத்துகின்றார் பார்த்தீர்களா? இப்படி யாராவது அமெரிக்காவினை அசிங்கபடுத்தியிருக்கின்றார்களா?
எங்களுக்கென்னவோ நீங்கள் பதவிக்கு வந்தபின்புதான் இவர்கள் இப்படி எல்லாம் பேசுகின்றார்கள் என தோன்றுகின்றது
எவ்வளவு பெரும் அமெரிக்க அவமானமிது?
உடனே பின்லேடனை தூக்கிய ஸ்டைலில் வந்து இவர்களை தூக்கிகொண்டு செல்லுமாறு உங்கள் சீல் படைக்கு உத்தரவிடுங்கள்
இல்லாவிட்டால் டிரம்பினை விட நல்லாட்சியினை பழனிச்சாமி கொடுக்கின்றார் என்ற அளவு பேசுவார்கள், அதனை கேட்டு உங்களுக்கு மாரடைப்பு வரலாம், வடகொரிய அதிபர் எல்லாம் சிரிப்பார்
அதனால் உடனே ஏதாவது செய்து , இந்த அமெரிக்க அவமானத்தை களையுங்கள்”
அமெரிக்காவில் தேங்கும் அளவுக்குக் கூட சென்னையில் மழைநீர் தேங்கவில்லை: அமைச்சர் வேலுமணி
முதலில் இவரை கழுத்தை பிடித்து அமெரிக்க விமானத்தில் அங்கே அனுப்பி வைக்க வேண்டும்
எப்படிபட்ட பொய் இது?
மழைபொழிவு நன்கு கொண்ட நாடு அமெரிக்கா, ஆனால் ஒரு சொட்டு நீர் சாலைகளிலும் தெருக்களிலும் தங்காது அப்படி பார்த்து திட்டமிட்டு கட்டியிருக்கின்றார்கள், அதைவிட முக்கியம் பராமரிக்கின்றார்கள்.
சிங்கப்பூர் மிக சிறிய நாடு, ஒரே நகரம் சிங்கப்பூர் தலைநகரம் வால் நகரம் எல்லாம் அதுதான், அப்படி வைத்திருக்கின்றார்கள்
அமெரிக்கா மிகபெரிய நாடு, ஆனால் முக்கிய நகரங்களை மிக திட்டமிட்டு பராமரிக்கின்றார்கள், மிகுந்த தொலைநோக்கு கொண்டு செயல்படுகின்றார்கள், கிராமங்களும் மோசமல்ல
மிகபெரிய தேசம் என்பதால் மிக சில இடங்களில் சில சிக்கல்கள் இருக்கலாம், அவை எல்லாம் தொலை தூரபகுதிகள்
இங்கே சென்னை நிலவரம் என்ன? மகா முக்கியமான நகரின் நிலவரம் என்ன?
வாஷிங்டன்னையும் சென்னையினையும் ஒப்பிட்டு சொல்ல சொன்னால், சென்னையினையும் அமெரிக்காவில் கரடிகள் வாழும் காட்டையும் ஒப்பிட்டு சொல்லும் அமைச்சரை என்ன சொல்வது?
சென்னை நிலவரம் எப்படி என சொல்லி தெரிய வேண்டியதில்லை, பேருந்துகள் நீந்துவதும் இன்னும் எதுவெல்லாம் நீந்துவதும் ஒன்றும் ரகசியமல்ல
சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதர் இதனை கேட்டால் வாய்விட்டு சிரிக்க மாட்டாரா?
நாளை இன்னொரு விஷயத்தில் அமெரிக்க அளவிற்கு கூவம் மோசமில்லை என கூசாமல் சொன்னால் அமெரிக்கா பொறுக்குமா?
எப்படி இப்படி எல்லாம் இப்படி மகா பொய்களை சொல்கின்றார்கள் என தெரியவில்லை
ஒரு அமைச்சர் சிங்கப்பூர் அளவிற்கு டெங்கி இல்லை என்கின்றார், இன்னொருவர் அமெரிக்க அளவிற்கு இங்கு நீர் மேலாண்மை என்கின்றார்
முதல்வரோ ஸ்காட்லாந்து யார்டை விட தமிழக போலிஸ் பெஸ்ட் என்கின்றார்
ஆளாளுக்கு அள்ளி விடுகின்றார்கள்
இந்த சனியன்களுக்கு உலகம் என்றால் என்ன என்றே தெரியாது போல
போயஸ்கார்டனுக்குள் வளர்ந்த குஞ்சுகள் இப்படித்தான் இருப்பார்கள் போல
ஜெயாவிற்கு ஏன் நோபல் பரிசு கேட்டார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது, அவ்வளவு அப்பாவிகள் இவர்கள்
முதலில் ஒரு விமானத்தில் இவர்களை ஏற்றி உலகெல்லாம் அனுப்ப வேண்டும், நல்ல அனுபவத்தோடு அவர்கள் திரும்ப வந்தால் நல்லது
அந்த விமானம் மலேசிய விமானம் போல மர்மமாக ஒழிந்தால் இன்னும் ரொம்ப நல்லது.