அமெரிக்கா, ரஷ்யாவிற்கான அமைதி உடன்படிக்கை

சிரியாவில் நடக்கும் யுத்ததை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா, ரஷ்யாவிற்கான அமைதி உடன்படிக்கை நடப்புக்கு வந்தது

கவனியுங்கள், யுத்தம் நடப்பது சிரியா அரசுக்கும் ஆட்சி மாற்றம் வேண்டும் என சொல்லும் குழுக்களுக்கும். ஐஎஸ் என்பது வேறு

இப்பொழுது சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுது எங்கோ இருக்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும்

இங்கு எங்காவது தீவிரவாதிகளை கலந்தாலோசித்தார்களா என்றால் இல்லை

இப்படி ஒரு ஒப்பந்தம்தான் அன்று இந்தியா இலங்கையிடையே நடப்புக்கு வந்தது

ஆனால் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என சொல்லி அதனை ஏற்கமுடியாது , எங்களை பிரநிதிகளாக ஏற்கவேண்டும் என சொல்லி புலிகள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, ஈழ அமைதி அதில்தான் அழிந்தது

இதோ ரஷ்ய அமெரிக்க தலையீட்டை ஏற்கமாட்டொம் என சிரிய குழுக்கள் கிளம்பினால் இனி சிரிய மக்களை யாராலும் காப்பாற்ற முடியும்? அது முள்ளிவாய்க்காலில் தான் முடியும் , ஈழத்தில் அப்படித்தான் முடிந்தது.

இந்தியாவிற்கு ஈழத்தில் என்ன வேலை என புலிகள் கேட்டு அழிந்தது போல, அமெரிக்க ரஷ்யாவிற்கு சிரியாவில் என்ன வேலை என எந்த குரலாவது கேட்கின்றதா? கேட்காது அவர்களுக்கு சிந்திக்கும் அறிவு இருக்கின்றது

இதுதான் உலகம், இந்த உலகத்தோடு ஒத்துபோகாமல் புலிகள் தேடிகொண்டதுதான் ஈழ நாசம்..