அமெரிக்கா விமான நிலையத்தில் திடீர் மின் தடை….
அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் மிக பிசியான விமான நிலையம் உண்டு, தினமும் 2.500 விமானங்களும் 2 லட்சம் பயணிகளும் வந்துபோகும் விமான நிலையம் அது
சென்னை கொயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து போகும் பேருந்துபோல நொடிக்கொரு விமானம் வந்து போகும் இடம் அது.
அங்கு திடீரென மின் தடை காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. மின் தடை என்றால் விளக்கு மட்டும் எரியாது என்பதல்ல, கணிணி முதல் எஸ்கலேட்டர் வரை எதுவும் இயங்காது, ராடாரும் இயங்காது
என்னதான் உலகம் முன்னேறினாலும் இன்னும் மின்சாரத்திற்கு அணைகட்டி சேமிக்கும் முன்னேற்றம் வரவே இல்லை, சில நொடிகள் தாங்கலாம் அவ்வளவுதான்
இப்படியான சிக்கலில் அந்த விமான நிலையம் ஒருநாள் முழுக்க மூடபட்டு விமானங்கள் திருப்பிவிடபட்டன, பயணிகள் கடும் குழப்பத்திற்கும் கோபத்திற்கும் ஆளாயினர்
இப்பொழுது நிலமை சரியாகி வந்தாலும், குழப்பம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பினையும் , ஏராளமான அதிருப்தியினையும் உண்டாக்கிவிட்டது
இந்த செய்தி தமிழக அமைச்சர்களை எட்டியதா என தெரியவில்லை, தெரிந்தால் என்னாகும்?
அமெரிக்காவினை விட மிக சிறந்த போக்குவரத்து சேவை தமிழகத்தில் தங்கள் ஆட்சியில் இருப்பதாக சொல்லி மிக்க ஆனந்தபடுவார்கள்