அமெரிக்க அடிவருடிகளுக்கும் மறுபடியும் முறுகுகின்றது

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் முறுகுகின்றது என்றால், கத்தாருக்கும் அமெரிக்க அடிவருடிகளுக்கும் மறுபடியும் முறுகுகின்றது

கத்தாருக்கு சவுதிக்கும் பொருந்தவில்லை, கத்தார் என்றல்ல எந்த நாட்டு அரசன் எண்ணைய் பணத்தை தனக்காக அல்லாமல் மக்களுக்கு செல்வழிப்பானோ அவனை சவுதிக்கு பிடிக்காது

காரணம் தன் நாட்டு மக்களும் அப்படி ஆசைபட்டால் என்னாவது?

இப்படி தொடர்ந்த சிக்கல் கொஞ்சநாளாக அமைதியாக இருந்தது, இப்பொழுது கத்தார் சவுதி நாட்டு பால் கூட உள்ளே வரகூடாது, சவுதி மட்டுமல்ல அவர்கள் கூட்டாளியான எகிப்து, ஐக்கிய அரபு உற்பத்தி எதுவும் உள்ளே வரகூடாது என சொல்லிவிட்டது

இதனை தொடர்ந்து மறுபடியும் அவர்கள் முறுகல் சூடுபிடிக்கின்றது, இப்போதைக்கு சவுதி பக்கம் அமைதி என்றாலும் விவகாரம் வெடிக்கலாம்

ரமலான் நோன்பு நேரமாக இம்மாதிரி சர்ச்சைகளை கத்தார் ஏன் செய்தது என்றால் அதுதான் அரபு அரசியல்