அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பில் புலிகளின் பங்கு என்ன?

அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பில் புலிகளின் பங்கு என்ன? என ஒரு கதை கசிய தொடங்கியிருக்கின்றது

அது இப்பொழுது அல்ல, 1993ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலிலே புலிகளுக்கு தொடர்பு இருந்தது என இப்பொழுது சொல்ல தொடங்கியிருக்கின்றார்கள்

ஏன் இப்பொழுது சொல்ல வேண்டும்?

புலிகளும் தீவிரவாதிகள், உலகில் இன்னொரு தீவிரவாத குழுவுடனான தொடர்பு இல்லாமல் அவர்களால் இயங்க முடியாது அப்படி சில குழுக்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது என அப்பொழுதே சொன்னார்கள்

2001ல் இரட்டை கோபுரம் தகர்க்கபட்ட பின் உலக தீவிரவாத குழுக்களை அமெரிக்கா தடை செய்ததும், அதில் புலிகளும் இடம்பெற்றதும் உண்மை

ஐரோப்பிய யூனியனுக்கும் புலிகளுக்கும் என்ன சண்டை? ஐரோபபாவில் புலிகள் ஏதும் தாக்குதல் நடத்தியதுமில்லை, பின்னர் ஏன்?

ஆக ஏதோ பெரும் தீவிரவாத குழுக்களுடன் புலிகளுக்கு தொடர்பிருந்தது நன்றாக புரிய வருகின்றது, தமிழ்செல்வன் கொல்லபட்ட நுட்பம் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள வித்தை , புலிகளின் கப்பல்களை காட்டிகொடுத்தது அமெரிக்காவே

அதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு நாள் இல்லாமல் ஏன் இம்மாதிரியான தகவல்கள் திடீரென கசிகின்றன?

இன்னும் 4 நாளில் போர்குற்றம், முள்ளிவாய்க்கால் என கொடிபிடிக்க ஒரு கூட்டம் கிளம்பும்,

ஐரோப்பாவிலும் கனடாவிலும் பல கும்பல்கள் நீதி வேண்டும் என கத்திகொண்டிருக்கும்

இது கலைஞரின் கொலை. காங்கிரசின் வெறி என இன்னொரு கூட்டம் கிளம்பும்

அதற்கு முன்பே இச்செய்திகள் கசியவிடபட்டால் என்ன அர்த்தம??

இம்மாதிரி கும்பல்களுக்கு உலகமே குறிவைத்தாயிற்று என அர்த்தம் , இதற்காகத்தான் புலிகள் கொல்லபட்டார்கள், எவண்டா கூமுட்டை கலைஞரையும் காங்கிரசையும் திட்டிகொண்டிருக்கின்றான்? என்பது போன்ற அர்த்தம்…