அமெரிக்க தாலிபான்கள் பேச்சு பாதியில் முறிந்திருக்கின்றது

அமெரிக்க தாலிபான்கள் பேச்சு பாதியில் முறிந்திருக்கின்றது

விஷயம் வேறு ஒன்றுமல்ல அமெரிக்காவும் தாலிபான்களும் பேசிகொண்டிருக்கும் பொழுதே தாலிபான்கள் வழக்கமான ஆட்டத்தை ஆடிவிட்டார்கள்

ஆம் பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது காபூலில் குண்டுவெடித்தது, தாலிபானும் பெருமையுடன் பொறுப்பேற்றது

கடுப்பான அமெரிக்கா நீங்களெல்லாம் மனுஷனாடா? என கேட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டது, நாங்க மனுஷனு எவன் சொன்னான்? என தாலிபானும் சென்றாயிற்று

இந்த சம்பவத்தை ஈழவிவகாரத்தோடு தொடர்பு படுத்தலாம்

2005ல் புலிகளும் இலங்கை அரசும் நார்வே ஊடாக பேச்சு நடத்தின, இலங்கை அரச பிரந்தியாக வந்தவர் லஷ்மண் கதிர்காமர் அவர் ஒரு தமிழர்

பேச்சுவார்த்தை நடக்கும் பொழுதே லட்சுமன் கதிர்காமரை இனதுரோகி என கொன்றனர் புலிகள்

அத்தோடு 26 நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தன பெரும் போரும் தொடங்கி புலிகளும் அழிந்தனர்

அதன் பழியினை கலைஞரும் சோனியாவும் இன்றுவரை சுமக்கின்றனர்