அமைச்சர் உளறுவது நன்றாக தெரிகின்றது

இந்த தமிழக அரசிற்கு மனநலம் சரியில்லை என்பது அவ்வப்போது தெரிந்தாலும் சிவி சன்முகம் பேசும்பொழுது நன்றாக தெரிகின்றது, இனி சட்டமன்றத்தை கீழ்பாக்கத்தில் நடத்துவது நல்லது
1974ல் ஒப்பந்தம் புதுபிக்கபடவேண்டுமாம், கபினி ஹேமாவதியில் கன்னடம் அணைகட்டும்பொழுது தமிழகம் தடுக்கவில்லையாம்
இந்த சிக்கலை தொடங்கி வைத்தவர் காமராஜர், அமராவதியில் பவானியில் அவர் அணைகட்டிய பின்பே கபினியில் ஹேமாவதியில் கன்னடம் அணைகட்டியது
என்ன செய்யமுடியும் கலைஞர், எங்கள் காமராஜர் கட்டியது சரி, கன்னடன் கட்டியது தவறு என எங்கு போய் சொல்லமுடியும்? அதில்தான் அமைதி காக்கபட்டு சில சர்ச்சைகள் வந்தன
அதன் பின் 1977ல் ராமசந்திரன் முதல்வர், 10 ஆண்டுகள் காவேரியில் என்ன கிழித்தார் என்பது நாமெல்லாம் சிவி சன்முகம் என்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வி
குறிப்பாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்த்தை ராமசந்திரன் ஏன் குறைத்தார் என்பதெல்லாம் சன்முகத்திற்கான கேள்விகள்
அதன் பின்பு கலைஞர் வந்தார். இந்த சன்முகத்தின் அரசியல் தலைவர் ஜெயா அப்பொழுது ராஜிவ் பின்னால் கூட்டணிக்கு நடராஜனோடு ஓடிகொண்டிருந்தார்
ஈழம் பற்றியோ, மண்டல் கமிஷன் பற்றியோ, காவேரி பற்றியோ அவருக்கு ஏது அக்கறை
விபி சிங் பிரதமராக கலைஞர் ஆதரவளித்தார் அதுதான் பின் அமைதிபடை மீட்கவும், காவேரி நடுவர் மன்றம் அமையவும் காரணமாயிற்று
அந்த நடுவர் மன்றத்தை எதிர்த்தவர் ஜெயலலிதா, அதனை கெஜட்டில் போட கூடாது என பேசியவர் ஜெயலலிதா
உண்மையில் கலைஞர் விபிசிங் மூலமாக பெற்று தந்த நன்மைகள் பல உண்டு. அக்காலம் இந்தியாவிற்கு தமிழகத்திற்கும் பல நன்மைகள் விளைந்த காலம்
அந்த கலைஞரின் பொற்கால ஆட்சியினை ராஜிவிற்கு நெருக்கடி கொடுத்து கலைக்க செய்தவர் ஜெயலலிதா
அய்யா சன்முகம் அந்த நல்ல பிரதமர் விபிசிங் ஆட்சியினை கெடுத்தவர் ராஜிவ் காந்தி. அந்த ராஜிவ்காந்திக்கு ஜால்ரா போட்டது உங்கள் ஜெயலலிதா
விபிசிங்கின் ஆட்சி நல்ல ஆட்சி என சொல்கின்றீர்கள் அல்லவா? அதை கெடுத்தது உங்கள் ஜெயலலிதாவும் அவரின் குரு ராஜிவ்காந்தியும்
நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து வந்த கன்னட கலவரமும் இன்னும் பல சிக்கலும் காவேரியில் மேல் வழக்கு ஆயின
ராஜிவ் கொலையால் தமிழக திமுக மீது வெறுப்பில் இருந்த காங்கிரஸின் கருணை பார்வையும் கன்னடம் மேல் இருந்தது.
வழக்கு இருக்கும்பொழுது என்ன செய்ய முடியும்? இந்திய யதார்தபடி அமைதிதான் காக்க முடியும்
மன்மோகன்சிங் அரசில் கலைஞர் இருந்தபொழுதும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை எல்லாம் எதிர்த்து மறு வழக்கு போட்டுகொண்டே இருந்தது கன்னடம்
அப்பொழுதும் அவ்வப்போது அவசர மனு தாக்கல் செய்து நீர் பெற திமுக தவறவில்லை
இறுதி தீர்ப்பு வரா நிலையில் திமுக ராஜினாமா செய்வது எப்படி சாத்தியம்? அதனால் பலன் ஏது?
அப்படி எல்லாம் நீதிமன்றத்தில் சாதிக்கலாம் என்றால் ஜெயா ஏன் அமைதி ஆனார், ஒரு வழக்கு தொடுத்தால்தான் என்ன? அதுபற்றி அமைச்சர் ஏன் பேசவில்லை?
ஆக அவர்களாலும் முடியாமல் அல்லவா இருந்திருக்கின்றது?
காவேரியில் இறுதி தீர்ப்பு இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, அப்பீல் இல்லா தீர்ப்பு என சொல்லியாயிற்று
இந்த இறுதிநிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அதிமுகதான் இப்பொழுது அமைதி காக்கின்றது
ஏன் நீங்கள் அன்று ராஜினாமா செய்யவில்லை என சொல்பவர்கள் இன்று ராஜினாமா செய்தால் என்ன?
ஏன் பழனிச்சாமி இப்பொழுது டெல்லிக்கு செல்கின்றார், நான் வரமாட்டேன் தூக்கு போடபோகின்றேன் என சொன்னால் என்ன?
அதெல்லாம் சொல்லமாட்டார்கள்,
முற்றிய மனநோயாக அவர்கள் ஸ்டாலினை பார்த்து குரைக்கின்றார்கள்
காவேரி விவகாரத்தில் கலைஞர் என்ன செய்தார் என்பது வரலாறு எங்கும் காணகிடக்கின்றது, அப்படியும் புரியாவிட்டால் ஆதாரத்தோடு சொல்லிதர பலர் இருக்கின்றார்கள்
அப்படியும் புரியாவிட்டால் அமைச்சரை முதியோர் கல்வியில் சேர்த்துவிட்டு பின்னர் சொல்லிகொடுக்கலாம்
ஆண்மை இருக்கின்றதா, ஆண்மை இருக்கின்றதா என கலைஞரை பற்றி நீங்கள் கேட்டால் ராமசந்திரன் சிலை பார்த்து அவர்களுக்கு சிரிக்க தெரியாதா?
இல்லை உங்கள் முன்னாள் குருநாதர் நடராஜன் படத்தை பார்க்க தோன்றாதா?
ஆண்மை சர்ச்சை எல்லாம் குருமூர்த்தியோடு வைத்து கொள்ளுங்கள்
பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பேச சில வரைமுறை உண்டு, நாகரீகம் உண்டு அதெல்லாம் பண்பாடும் அறிவும் உள்ளவர்களிடம் எதிர்பார்க்கவேண்டிய விஷயம் எனினும் சன்முகம் கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லது
சொன்னது எல்லாம் பொய், அதில் உச்சகட்ட பொய் ஷோபனா பின்னால் ஸ்டாலின் 1974ல் அலைந்தார் என்பது
1974ல் உச்ச நட்சத்திரம் என்பது சாட்சாத் ஜெயலலிதா, அவருக்கு ஷோபனா என இன்னொரு பெயர் இருக்க வாய்ப்பே இல்லை
நமக்கு தெரிந்த பிரபல ஷோபனாக்கள் இரண்டே பேர்
நடிகை ஷோபனா, இன்னொன்று ஷோபனா ரவி
இருவருமே 1989களில்தான் வந்தார்கள், பின் எப்படி 1974ல் ஷோபனா?
ஆக யாரோ ஒரு கனவு கன்னி அப்படி ஒரு பெயரில் அமைச்சருக்கு இருந்திருக்கலாம்
அமைச்சர் உளறுவது நன்றாக தெரிகின்றது
நிச்சயம் இது டாஸ்மாக்கில் இயங்கும் அரசுதான், மக்களை குடிக்க வைத்துதான் அது இயங்குகின்றது. அதில் மக்கள் மட்டும் குடித்து அரசை தாங்குவது எப்படி என இப்பொழுது மொத்தமும் எல்லோரும் இறங்கிவிட்டார்கள் போல
வாழ்க எம்ஜிஆர் நாமம், வளர்க ஜெயலலிதா புகழ்