அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம்

Image may contain: 1 personஅமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியிருக்கின்றது, நிச்சயம் அது முறைகேடான சொத்துக்கள், இல்லையென்றால் அத்துறைக்கும் அமைச்சருக்கும் என்ன வாய்க்கால் தகறாரா?

இந்த ஊழல் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கின்றார், நிச்சயம் அக்கட்சியிலிருந்து ஒரு குரலும் வராது, ஒரு திருடன் இன்னொரு திருடனை குற்றம் சொல்லமாட்டான், தொழில் அப்படி

ஆனால் எதிர்கட்சிகளும் இதில் அமைதி காக்கின்றன, ஒரு சத்தமும் இல்லை, அதனால் விஜயபாஸ்கர் செட்டியார் பெரும் அரசனின் வம்சாவளி, நேரம் போகாமல் அரசியலுக்கு வந்தவர் என நம்பிகொள்வோம்

அவர் பதவி நீக்கமே செய்யபடவில்லை எனும்பொழுது கைது எல்லாம் நடக்க கூடிய விஷயமாக தெரியவே இல்லை

தமிழகத்தை காக்க வந்திருக்கும் புரட்சி பாஜகவும் இதுபற்றி வாய்திறக்கவில்லை, கமலஹாசன் என்றால் உடனே பழம் கண்ட குரங்காக, மான் கண்ட புலியாக குதித்தோடி வருபவர்கள், இவ்விஷயத்தில் சத்தமே இல்லை

தமிழிசை அக்கா? நீங்களுமா அமைதி

“நல்லை அல்லை.. நல்லை அல்லை 
தமிழிசை அக்கா நீர்
நல்லை அல்லை…”