அம்மக்களுக்கு உண்மை விளங்கட்டும் , மராட்டியத்தில் அமைதி நிலவட்டும்

Image may contain: sky, tree, plant, cloud, outdoor and nature

புனேவில் ஏற்பட்ட கலவரமும், மும்பை ஏன் பந்தில் சிக்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்ற காரணத்தை நோக்கினால் பெரும் அச்சம் ஏற்படுகின்றது

அதாவது 200 ஆண்டுகளுக்கு முன் ஜாதிகொடுமையால் பலர் பிரிட்டிசார் படையில் சேர்ந்திருக்கின்றனர், அந்த வலிமையில் பிரிட்டானியார் கோரேகான் எனும் இடத்தில் அந்த அரசனை தோற்கடித்திருக்கின்றனர்

அங்கு ஒரு வெற்றித்தூண் இருக்கின்றது, நிச்சயம் அது ஆங்கிலேயர் கட்டிய வெற்றிதூண். ஆனால் பின்னாளில் தாழ்த்தபட்ட மக்கள் அடித்து பெற்ற வெற்றி என்பது போல் மாற்றபட்டுவிட்டது

அங்கு அம்பேத்கர் வரை சென்று அஞ்சலி செலுத்தினார், விடுவார்களா? கிட்டதட்ட தமிழகத்து இம்மானுவேல் சேகரன் கல்லறை அளவிற்கு கொண்டுவந்தாயிற்று

இவ்வருடம் அங்கு 200ம் ஆண்டு விழா

அதனால் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் இந்தியா முழுக்க இருந்து தன்னை தலித் தலைவர் என சொல்லிகொள்பவர்களை அழைத்திருகின்றார்கள், குஜராத்தின் ஜிக்னேஷ் என்பவரும் வந்திருக்கின்றார்

எம்மை பொறுத்தவரை இந்த ஹிர்த்திக் பட்டேலுக்கு என்ன இடமோ அதேதான் ஜிக்னேஷூக்கும். சாதிபெயரால் அரசியல் செய்வது யாராயினும் அவர்கள் சரியல்ல‌

அதுமட்டுமன்றி சர்ச்சைகுரிய மரணமான‌ ரொகித் ரொமுவுல்ல என்பவரின் தாயார் என பலரை அழைத்திருக்கின்றார்கள்

மாயாவதி, திருமா, கிருஷ்ண்சாமி எல்லாம் அழைக்கபடவில்லை, அவர்களை தலித் என அங்கு யாரும் கருதவில்லை போல‌

(இவ்விஷயத்தில் தமிழகம் பரவாயில்லை, ஆங்கில படையிலும் மருதநாயகம் போன்ற தமிழர் இருந்தனர், கட்டபொம்மன், வேலுநாச்சியார் போன்றவர்கள் படையிலும் தாழ்த்தபட்டவர் இருந்தனர்

என்றாவது இப்படிபட்ட சாதி கண்ணோட்டத்துடன் சிக்கல் வந்ததுண்டா?

அதுவும் குமரிபக்கம் தோள்சீலை போன்ற கொடுமைகள் நடந்த இடம், அங்கும் சில நினைவு சின்னம் உண்டு. இப்படி அதனை எல்லாம் யாரும் அரசியலாக்கவில்லை)

அக இப்படி தாழ்த்தபட்ட மக்கள் இணைந்த பிரிட்டிஷ் படை வென்ற நிகழ்வினை ஏதோ ரஷ்ய புரட்சி அளவிற்கு கொண்டாட சென்றிருக்கின்றார்கள்

இதனை ஆர்.எஸ்.எஸ் கோஷ்டி விடுமா? அதுவும் மராட்டியத்தில் தேர்தல் வரும் நேரம் விடுமா ? கலவரம் ஆயிற்று

இரு பக்கமும் நடந்தது சுத்த அரசியல் அது அன்றி வேறல்ல‌

பிரிட்டானியர் ஒன்றும் அவ்வளவு நல்லவர்கள் அல்ல, அப்படி தலித்துகள் பால் அக்கறைகொண்டவர்கள், அம்மக்களை கைதூக்கிவிட எண்ணம் கொண்டவர்கள் என்றால் சுதந்திரத்தின்பொழுது ஏதாவது செய்திருக்க வேண்டாமா?

சாதியினை விட மதம் பற்றி எரிந்ததால் அதை வைத்து இத்தேசத்தை பிளந்தான் வெள்ளையன்

அவனுக்கு இங்கிருக்கும் பிளவுகளை எப்படி பயன்படுத்திகொள்ளலாம் என்ற நரித்தனமே அவனிடம் இருந்தது

அந்த நரித்தனத்திற்கு பலியாகிவிட்டு அது தாழ்த்தபட்டோர் எழுச்சி என கிளம்புவதும், அதனை எதிர்த்து இன்னொரு கோஷ்டி கலவரம் செய்வதும் சுத்த பைத்தியகாரதனம்

இப்படி ஒரு காலம் இருந்திருக்கின்றது சாதி கொடுமையால் ஆங்கிலேயனுடன் சேர்ந்து நம் மக்களே சொந்த மக்களை கொன்றிருக்கின்றார்கள் என இரு தரப்புமே நாணி தலைகுனிய வேண்டிய விஷயம் இது

அப்படி ஒரு காலம் இனி வேண்டாம் என சொல்லி இருதரப்புமே அந்த தூணை வணங்கிவிட்டு வந்தால் எவ்வளவு அமைதியாக இருக்கும் அம்மாநிலம்

அதனைத்தான் செய்யவேண்டும், நிச்சயம் செய்ய வேண்டும்

மாறாக அதனை தலித் எழுச்சி என சொல்வதும், இவர்கள் அது கூலிப்படை என சொல்வதும் இன்னும் ரத்த ஆறுகளை ஓட செய்யுமே அன்றி ஒரு நிம்மதியும், முன்னேற்றமும் கொண்டுவராது

எம்மை பொறுத்தவரை இரு தரப்புமே பார்த்து வெட்கபட்டு இனி அப்படி நடக்கவிடோம் என உறுதி எடுக்க வேண்டிய இடம் அது

ஆனால் செய்வார்களா? செய்யமாட்டார்கள்

அவர்கள் செய்ய நினைத்தாலும் இந்த அரசியல்வாதிகள் விடவே மாட்டார்கள்

அம்மக்களுக்கு உண்மை விளங்கட்டும் , மராட்டியத்தில் அமைதி நிலவட்டும்