அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சிக்கு பெயர் வைத்தார் தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சிக்கு பெயர் வைத்தார் தினகரன்
எல்லா படத்திலும் திரையில் “அம்மா..” என்றும், திரைக்கு பின் “அம்மு..” என்றும் அலறிய ராமசந்திரன் கட்சியில் இப்படி பின்னாளில் பெயர் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
இதுவரை அம்மாவால் முன்னேறிய மக்கள் யாரென்றால் சாட்சாத் மன்னார்குடி குடும்பம், பன்னீர் மற்றும் பழனிச்சாமி
ஆனால் அப்படி அல்ல அம்மாவால் வளர்ந்த மக்கள் நாங்கள்தான் என தினகரன் மிக உரிமையாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” தொடங்கிவிட்டாராம்
இன்னும் முன்னேற என்ன இருக்கின்றது, ஆர்.கே நகரில் காட்டாத முன்னேற்றமா? இனி கழகம் தொடங்கியும் முன்னேற வேண்டுமா?
ஒரு விஷயம் தினகரன் மறக்கின்றார்
ஆனானபட்ட ராமசந்திரனுக்கே திராவிடம் பேசாவிட்டால் உருப்படமாட்டோம் என்ற பயம் இருந்தது, அண்ணா திமுக என அவர் பெயர் சூட்டியது அதனால்தான்
அண்ணா மக்கள் முன்னேற்ற கழகம் என்றிருந்தால் நாசமாய் போயிருப்பார்
ஆட்சியினை பிடிக்கவேண்டுமென்றால் திராவிடம் பேச வேண்டும், தினகரன் கட்சி என்பது பன்னீரை பழிவாங்கவும் சொத்துக்களை காக்கவும் என்றான பின் அது அம்மா மக்கள் முன்னேற்றம் என இருந்தால் என்ன? அடிமைபெண் முன்னேற்ற கழகமாக இருந்தால் என்ன?
(சொர்கத்தில் இப்பொழுது என்ன நடக்கும் என்றால் இந்த படத்தில் காணும் காட்சிதான், ராமசந்திரன் இப்படித்தான் பரிதாபமாக முழிப்பார், அருகே அம்மு சிரித்து கொண்டிருக்கும்)