அம்மா வழக்குல 100 கோடி அபராதம் கட்டணுமாமே, அதையும் நாமே கட்டிருவோமா?
பங்காளி, அம்மாவுக்கு மணிமண்டபம் கட்டுரோம் சரி. அம்மா வழக்குல 100 கோடி அபராதம் கட்டணுமாமே, அதையும் நாமே கட்டிருவோமா?
பங்காளி வேணாம், வேணும்ணா சசிகலா கும்பல் கட்டட்டும்னு திருப்பி விடுவோம்
ஆமா பங்காளி அதுவும் சரிதான்
பங்காளி, வழக்கமா கலைஞர், ஜெயா ஆட்சியில் ஏதும் சர்ச்சை என்றால் “ஏ ராஜினாமா செய்” என்பார்கள், நமக்கு ஏன் ஒருவரும் சொல்லவில்லை
அவர்கள் ஆட்சி இழந்தால் மறுபடியும் ஆட்சி அமைக்கும் பலம் இருந்தது, நமக்கு அப்படியா?
ஆமா பங்காளி, ராமன் சுக்ரீவனுக்கு முடி சூட்டுன மாதிரி நமக்கு சூட்டி வச்சிருக்காங்க, அந்த நன்றியில் நாம ராமர் மோடிக்கு சுக்ரிவனா அனுமாரா இருக்கோணும்
செம பங்காளி இப்போவே நாம சுக்ரீவன் அனுமான்னு ஒரு கடிதன் அனுப்புவோம், ராமர் மோடி ரொம்ப சந்தோஷபடுவார்”