அம்ருதா என்பவர் ஜெயாவின் மகளா?

அந்த அம்ருதா என்பவர் ஜெயாவின் மகள் என்ற கோஷத்தை புதிதாக தொடங்கி இருக்கின்றார் ஒரு டாக்டர்

அன்னார் ஜெயாவிற்கு அக்குபங்சர் சிகிச்சை கொடுத்துகொண்டிருந்தாராம், அப்பொழுதுதான் ஒரு நாள் ஜெயாவினை திடீரென அப்பல்லோவில் கொண்டு போய் அப்படியே மெரினாவிற்கும் எடுத்துசென்றுவிட்டார்களாம்

இந்த டாக்டர் இப்பொழுது வந்து அம்ருதா ஜெயாவின் மகள், அதனை நிருபிக்க அப்பல்லோவில் இருக்கும் ஜெயா டி.என்.ஏ மாதிரிகளை எடுத்து அம்ருதாவுடன் சோதித்து அவரை மகள் என அறிவிக்க வேண்டும் என பெரும் சத்தம் போடுகின்றார்

ஏன் அப்படி ஜெயா பாசமா? இல்லை நீதி வேண்டும் என்ற போராட்டமா?

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, ஜெயா 20 நாளாக சிகிச்சை எடுத்துவிட்டு பணம் கொடுக்காமல் போயே விட்டாராம். இந்த அம்ருதா ஜெயா மகள் என நிரூபிக்கபட்டால் உடனே இவர் அம்ருதாவிடமிருந்து வசூலித்துவிடுவாராம்

சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கின்றது என்பது இதுதான்

ஆனால் அன்னார் சிக்கிவிடும் ஆபத்தும் உண்டு என்பதும் ஒரு விஷயம்

பின்னே? ஜெயாவிற்கு இவர் அக்குபங்க்சர் சிகிச்சை தவறாக கொடுத்ததால்தான் ஜெயா இறந்தார் என அப்பல்லோ திருப்பி சொன்னால் என்னாகும்?

ஆளாளுக்கு பிடித்து இவரை அங்கு பங்க்சர் ஆக்கிவிட மாட்டார்களா?