அயோக்கிய சாமியார்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள்

கேரளாவில் தாமஸ் என்றொரு பாதிரி இருந்திருக்கின்றார், அவர் இணையத்தில் நற்செய்தி சொல்ல முகநூல் எல்லாம் வந்திருக்கின்றார்

வங்கதேச பெண்ணொருத்திக்கு இவர் நற்செய்தி சொல்ல முயன்றபொழுது மன்மதன் எங்கிருந்தோ அம்புகளை ஏவி விட்டிருக்கின்றான், ஏனோ கடவுள் அதை தடுக்கவில்லை

அப்பெண்ணும் இவரை சந்திக்க வந்திருக்கின்றாள், கனி கையில் கிடைத்த ஆதாம் போல இவரும் விழுங்கிவிட்டாராம் ,

என்ன இருந்தாலும் பைபிள் படித்தவர் அல்லவா? அதனால் இனி துறவறம் கலைந்து இல்லறம் புகுவோம் , இப்போதைக்க் வங்கம் போ என அனுப்பிவிட்டாராம்

அதன் பின் இவருக்கு ஞானம் வந்தாயிற்று , “துறவிக்கு இதெல்லாம் சாத்தானின் சோதனை, மனமே கடந்துவிடு, இயேசு மன்னிப்பார் , அவர் இரக்கமுள்ளவர்” என சொல்லி அப்பெண்ணின் தொடர்புகளை துண்டித்திருக்கின்றார்

இயேசு மன்னிக்கலாம் , அப்பெண் விடுவாளா, அல்லேலூயா என முன்பு சொன்னவள் இப்பொழுது அய்யோ என அலறிவந்திருக்கின்றாள் விஷயம் பெரிதாகிவிட்டது

முதற்கட்டமாக அவரை சபையில் இருந்து நிர்வாகம் நீக்கிவிட்டது, சுவாமிகள் இனி வங்கதேசம் சென்று நற்செய்தி அறிவிக்கலாம் என கடைசிகட்ட செய்திகள் சொல்கின்றன‌

ஆக அயோக்கிய சாமியார்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள்