அய்யாகண்ணு திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் புரட்சி…

அய்யாகண்ணு பெரும் போராளியாக இருக்கலாம், ஆனால் திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் புரட்சிசெய்ய அவரை அனுமதித்தது யார் என தெரியவில்லை

அதிலும் அப்பெண் அவரை பிராடு என்பதும், பதிலுக்கு இவர் வைரமுத்துவின் சர்ச்சை பெயரோடு பாய்வதும் பார்க்க சகிக்கவில்லை

அதனை இந்து அபிமானிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை, இதெல்லாம் ஆலய வளாகத்தில் நடைபெறவேண்டிய சண்டை அல்ல‌

ஆனால் மாநில அரசை கண்டிக்காமல் டெல்லியில் ஆடையின்றி உருண்டவரை , அதன் பின் பழனிச்சாமி பக்கமே செல்லாதவரை பிராடு என்றுதான் சொல்வார்கள்

இன்னும் விவசாய கடன் அப்படியே இருக்கின்றது, ஆனால் இலவச ஸ்கூட்டி வழங்கபடுகின்றது. அய்யா கண்ணு அந்த மேடை முன் ஆடை அவிழ்த்தாரா?

பின் இவரை பிராடு என சொல்லாமல் பெரும் போராளி என்பார்களா?

அய்யாகண்ணு என்பவருக்கு மகளிர் தினத்தில், அது கொண்டாடபடுவதன் நோக்கம் அவர் கன்னத்திலே புரிந்திருக்கின்றது.

தென்னக பெண்கள் யார் என அய்யாகண்ணு தெரிந்திருக்கும் நேரமிது , அவர் கண்ணை தோண்டாமல் விட்டார்கள் அதுவரைக்கும் அய்யாகண்ணுவிற்கு நல்ல நேரம்