அரசியலில் பொய் சொல்லலாம் பதவியில் இருப்பவர்கள் பொய் சொன்னால் நன்றாயிராது

அரசியலில் பொய் சொல்லலாம் பதவியில் இருப்பவர்கள் பொய் சொன்னால் நன்றாயிராது

ஆனால் பொய்களை மட்டுமே சொல்வோம் என ஜெயா சமாதியில் சத்தியம் செய்திருக்கும் அதிமுக அமைச்சர்கள் இப்பொழுது அவமானபட்டு நிற்கின்றனர்

பெரியாருக்கு, காமராஜருக்கு, ஜாணகிக்கு மெரினாவில் கலைஞர் இடம்தர மறுத்தார் என்ற பச்சை பொய்களை அவர்கள் வாதமாக வைத்தனர்

ஆனால் பெரியார் இறந்தபொழுது அவரின் இறுதிகாரியங்களை செய்த வீரமணி போன்றவர்கள், காமராஜருக்கு செய்த குமரி அனந்தன், நெடுமாறன் போன்றவர்கள், ஜாணகியின் உறவினர்கள் எல்லாம் பொதுவாக ஒன்றை சொல்கின்றார்கள்

அது இவர்கள் யாரையுமே மெரினாவில் வைக்க அனுமதி கோரபடவில்லை என்பது

உண்மையும் அதுதான், அப்படிபட்ட கோரிக்கை எழவே இல்லை

அதிலும் ஜாணகி ராமசந்திரன் பக்கம் புதைக்கபட கூடாது என்பதில் கருத்தாய் இருந்தார் ஜெயா

ஆக இல்லாத கோரிக்கையினை கலைஞர் மறுத்தார் என சொல்லி பெரும் அசிங்கபட்டு நிற்கின்றது அமைச்சரவை

ஆனால் வருந்துவார்களா? இல்லை

காரணம் அவமானபடுவது ஒன்றும் புதிதல்ல, அவர்களுக்கு தெரிந்த அரசியல் அது ஒன்றுதான்


திருமுருகன் காந்தியினை உடனே விடுதலை செய்ய வேண்டும் : டிடிவி தினகரன்

தன் வீட்டு வளர்ப்பு நாயினை யாராவது பிடித்துவிட்டதை அறிந்து சண்டைக்கு செல்லாவிட்டால் அவன் என்ன எஜமான்?


துரோகி கருணாநிதி இருக்கும் வரை ஈழம் மலரவே மலராது : 2009ல் சீமான்

அங்கிள், இந்த வாரத்துக்குள்ள ஈழம் மலருமா இல்லையா?


ராமசந்திரன், கலைஞரை தொடர்ந்து தமிழகத்து அடுத்த “கருப்பு கண்ணாடி” அடையாளம் தலைவிதான்.

அவர்களுக்கு அடுத்து அந்த நாற்காலியும் தலைவிக்கே.