அரசியல்வாதிகளில் உருப்படியாக பேசிகொண்டிருப்பது டாக்டர் ராமதாஸ்
இப்போதைய அரசியல்வாதிகளில் உருப்படியாக பேசிகொண்டிருப்பது டாக்டர் ராமதாஸ் என்பவர்தான், ஆனால் உலகம் அவரை பழைய விஷயங்களிலே எடை போடுகின்றது
அவரும் சும்மா அல்ல, ஜெயா சசிகலாவினை அருகே இருத்தி தன் பெயரை, உயிரை எல்லாம் கெடுத்துகொண்டது போல ராமதாஸுக்கு காடுவெட்டி குரு எனும் உடன்பிறவா சகோதரர் அல்லது பெற்றெடுக்கா மகன். அவர் அருகிருக்கும் வரை தமிழகத்தை 10 துண்டுகளாக பிரித்தாலும் ஒரு துண்டின் மீதும் ராமதாஸ் அமரபோவதில்லை
இப்போது விஷயம் குரு அல்ல அன்புசெழியன்
அன்புசெழியன் விவகாரத்தில் திமுக,அதிமுக திரையுலக ஜாம்பவான்கள் எல்லாம் மென்னி முழுங்கி எதனையோ முணங்கிகொண்டிருக்க ஓங்கி அடிக்கின்றார் ராமதாஸ்
அன்புசெழியன் யார்? அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது, தர்மயுத்தம் நடத்திய மகனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? என்றெல்லாம் போட்டு தாக்குகின்றார்
ஆனால் ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அவை அப்படித்தான்
ஆனால் ராமதாஸின் கேள்விகள் நியாயமானவை, இந்த விவகாரத்தில் அடித்து நொறுக்கி முன்னால் நின்று கேள்வி எழுப்புவர் அவர் ஒருவர்தான், அந்த தைரியம் பாராட்டதக்கது
அன்புசெழியனை விமர்சிக்கவே தைரியம் வேண்டும், அதுவும் அமைச்சர், அதுவும் தர்மயுத்தம் நடந்திய அமைச்சர் ஒருவரின் மகனே அன்புசெழியனுக்கு மூலம், அன்புசெழியன் பணம் எல்லாம் அவரின் கருப்புபணம் அவர்தான் இப்பொழுதும் பாதுகாத்து வருகின்றார் என சொல்வதற்கு தனி தைரியம் வேண்டும்.
சினிமாவில் அரசியல்வாதிகளின் கருப்புபணம் விளையாடுகின்றது, அதற்கு அன்புசெழியன் போன்றோர் கைத்தடிகள் என சொன்னதற்காக ராமதாஸுக்கு ஸ்பெஷல் சல்யூட்
வாழ்த்துக்கள் டாகடர் அய்யா…
முன்பு முதுகுளத்தூர் கலவரத்தில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் வோட்டுக்கு அஞ்சி முத்துராமலிங்கதேவரை விமர்சிக்க பயந்தன, பெரியார் மட்டும் துணிச்சலாக “அந்த முத்துராமலிங்கம்னு சொல்ற பயல பிடிச்சி உள்ள போடாம இந்த கலவரம் நிற்காது” என்றார்
இப்பொழுது அன்புசெழியனுக்கு தமிழகமே மிரண்டு நிற்க, துணிச்சலாக எதிர்குரல் எழுப்புகின்றார் ராமதாஸ்
அன்னாரின் தைரியத்தையும், துணிச்சலையும் கண்டு வியந்த தைலாபுரம் தோட்டத்து சிகாமணிகள் தலைவருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்? “இரண்டாம் பெரியார்”, “தாடியில்லா பெரியார்”, “வெண்தாடியில்லா வேந்தர்”, என பல பெயர்களை பரிசீலித்து வருகின்றன