அரசியல் என்பது சிரமாமனது
“திராவிட கொம்பன்” திவாகரன்…
“திராவிட செல்வன்” தினகரன்
“பொன்மன கம்மல்” விவேக்,
“வத்தியார்” ஜெயந்தன்
இப்படி எல்லாம் பட்டத்தோடு அவர்கள் மோதிகொள்வதை பார்க்க கண் கோடி வேண்டும். இந்த மோதலை பார்த்து புன்னகைப்பதால் பழனிச்சாமி “புன்னகை போராளி” ஆகிவிட்டார்
எப்படிபட்ட பயங்கர மோதல்?
நாஞ்சில் சம்பத்தே இருக்க முடியாமல் ஓடிவந்துவிட்டார் என்றால் சும்மாவா?
இந்த ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பில்லை. மறு தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும்” : ராமதாஸ்
மருத்துவமனையில் இருக்கும் காடுவெட்டி குருவிற்கு நம்பிக்கை அளிக்கும் ஆறுதலை இதை தவிர எப்படி சொல்லமுடியும்?
அப்படியே காடுவெட்டி குரு சபாநாயகர் ஆகிவிடுவார் என்பதையும் சொல்லுங்கள், குரு உடனே டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்
அரசியல் என்பது சிரமாமனது, அதில் தன் குடும்பத்தாரை அனுமதிக்காததும் முடியா விஷயம். யார் எப்பொழுது முதுகில் குத்துவார் என்பதும் தெரியாது
கலைஞர் முதுகில் ராமசந்திரன் குத்தினார், ராமசந்தினனின் இறுதிகாலத்தில் ஜெயா குத்தினார், இன்று சசிகலாவினை பன்னீர் குத்தினார், எடபாடி குத்தினார் என எல்லாமே இங்கு துரோக அரசியல்
அதில் கலைஞரை ராமசந்திரன் முதல் வைகோ வரை குத்தியவர் ஏராளம். வலம்புரி ஜாண், இந்த டி.ராஜேந்தர் வரை அந்த வரிசை பெரிது, அவர் பட்ட வலியும் பெரிது
இது திமுகவில் மட்டுமல்ல தெலுங்குதேசம் முதல் காங்கிரஸ் வரை ஏராள கட்சிகளில் காணப்படும் விஷயம். பாஜக இதில் விதிவிலக்கு
காரணம் அது கட்சி அல்ல, சாமியார் கூட்டம்.
இதனால்தான் மற்ற கட்சிகள் தன் குடும்பத்தாரை உள்ளே நிறுத்த வேண்டிய அவசியம் பல இடங்களில் வருகின்றது
நிச்சயமாக குடும்பத்தார் பலரை அரசியலுக்குள் விடுவது பத்ம வியூகம் போன்றது, வெளிவரும் கலை தெரியாவிட்டால் மொத்தமும் போய்விடும்
கலைஞர் அதில் வித்தகர், அட்டகாசமாக பத்ம வியூகத்தை உடைக்கும் வழியினை சொல்லிவிட்டு, செய்து காட்டிவிட்டு ஓய்வில் இருக்கின்றார்
அதிமுக அதில் வசமாக சிக்கிவிட்டது. மன்னார்குடி குடும்பத்தில் நடக்கும் குடுமிபிடி சண்டைகள் அதை தெளிவாக சொல்கின்றன
இப்பொழுது கலைஞர் நலமாக இருந்தால் என்ன நடந்திருக்கும்?
சகாதேவனிடம் ஆலோசனை கேட்க சென்ற துரியதனன் போல மன்னார்குடி குடும்பம் ஓடி சென்று தீர்வு கேட்டிருக்கும்
காக்க கலைஞரும் இல்லா நிலையில் அக்குடும்பத்தின் சண்டை அட்டகாச ரகம்
இனி கொஞ்ச நாளைக்கு நல்ல பொழுதுபோக்கினை அக்குடும்பம் நிச்சயம் கொடுக்கும், இந்த சினிமா, ஐபிஎல் எல்லாம் வேண்டாம்