அரசியல் பாடம் இல்லாளுக்கு வேண்டவே வேண்டாம்…

சோனியா காந்தி மகாத்மா காந்திக்கு என்ன உறவு என கேட்டுகொண்டிருந்த பாகம்பிரியாளுக்கு அரசியல் செய்திகள் கற்றுகொடுத்தது பெரும் தவறாகிவிட்டது

நிச்சயமாக வாழ்நாள் தவறு, இனி வருந்தி என்னாகபோகின்றது

அதாகபட்டது அதிமுக வரலாற்றையும், சசிகலா அரசியலில் உச்சம்பெற நடராஜன் பெரும் சாணக்கிய அரசியலை பாடமாக நடத்தியதில் அவள் கேட்டுகொண்டே இருந்தாள்.

கேள்வியோ பதிலோ அல்லது முகத்தில் எக்ஸ்பிரஷ்ணொ ஒன்றும் இருக்காது. எல்லா சூழலுக்கும் அப்படியே முகத்தை வைத்திருக்கும் ஆர்யா போல அப்படியே இருப்பாள்

அவளுக்கு அரசியல் உலக அறிவெல்லாம் பெருக்கிகொள்ளும் விருப்பம் இல்லை , இவளுக்கா போதித்தோம் என வருந்திய காலங்கள் உண்டு

இப்பொழுது சரியான நேரத்தில் வாய்திறக்கின்றாள்

“அவனவன் பொண்டாட்டிய படாதபாடுபட்டு முதலமைச்சராக்கி கொண்டிருக்கின்றான், எனக்கு அப்படிபட்ட புத்திசாலி புருஷனா கிடைத்திருக்கின்றது?

ஏதும் சொல்லிகொள்ளும்படி உங்களால் ஒரு பிரயோசனம் இருக்கின்றதா? “

இதுதான் இடம் பார்த்து அடிப்பது.

இனி ஒரு அரசியல் பாடங்களும் அவளுக்கு கற்பிக்க கூடாது, அதற்கு முன் சாம்பார் வைக்கவாவது மகா அவசரமாக கற்றுகொள்ள வேண்டும்

என்னைபோல‌ எத்தனை குடும்பஸ்தன் சாபங்களை நடராஜன் வாங்கி கொண்டிருக்கின்றாரோ தெரியாது.

ஆனால் பெருவாரியாக வாங்கிகட்டி கொண்டிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்