அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது: ஓ.பன்னீர்செல்வம்

Image may contain: 2 people, close-upஎடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது: ஓ.பன்னீர்செல்வம்

வேறு என்ன ம….க்கு முன்பு தியானம், ஆளுநர் சந்திப்பு, நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றேல்லாம் ஓப்பாரி வைத்தீர் அய்யா?

ஆட்சி வேண்டாம் என்றுதான் சட்டபேரவையில் கலவரம் நிகழ்த்த முயன்றார், இப்பொழுது அதே ஆட்சி வேண்டுமாம், ஆதரிப்பாராம்…

உங்களையும் நம்பி அந்த ரிசாட்டை என்னபாடு படுத்தினார்கள்?, எவ்வளவு கஷ்டம் அவர்களுக்கு

இதனை அன்றே சொல்லியிருக்கலாமே? அன்று ஒரு நிலைப்பாடு, இன்றொரு நிலைப்பாடா?

இதன் பெயரா தர்மயுத்தம்? ஜெயா இறந்த மர்மம் எல்லாம் வெளிகொண்டுவந்துவிட்டீரா?

ஆக இவர் நடத்திய தர்மயுத்தம் மேட்ச் பிக்ஸிங்கில் முடிந்துவிட்டது,

உண்மையில் ஆளுநரிடம் முன்பு சொன்னதற்கும், இப்பொழுது உளறுவதற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் இவர் மீது நடவடிக்கை எடுத்து, பதவியினை பறிக்கத்தான் வேண்டும், அப்படியான மோசடி இது

இன்றிருக்கும் அரசியல்வாதிகளிலே மகா மோசமான அரசியல்வாதி இவர்தான், இவரின் அரசியல் இத்தோடு முடிந்தது

வழக்கமாக வாக்கு கேட்க சென்றால் அடி விழாது, ஆனால் இவருக்கு இனி விழும், நிச்சயம் விழும்

என்னவெல்லாம் பேசினார், என்ன சவால் எல்லாம் விட்டார், மிக விழிப்பாக திமுக இவரை நம்பவில்லை, அவர்களுக்கு இவரை நன்றாக புரிந்திருக்கின்றது

இனி என்ன மிஸ்டர் பன்னீர்? இணைப்புதானே, அப்படியே அமைச்சர் பதவிதானே, வாங்கிகொள்ளுங்கள்

அத்தோடு இன்னொரு நாட்டுக்கு குடியுரிமைக்கும் முயற்சி செய்யுங்கள், அதுதான் நல்லது.

சசிகலா கும்பலை விட மிக ஆபத்தான இவரை கட்சியில் வைத்திருந்ததான் ஜெயாவின் மிகபெரும் தவறு

கடைசியில் ஆத்தாவிற்கு விசுவாசமாக ஒருவர் கூட இல்லை..


கொசுறு

ஜெயலலிதாவின் துணிச்சல் அவர்பின் வந்தவர்களுக்கு ஏன் வரவில்லை: தா. பாண்டியன் கேள்வி

பழைய கம்யூனிஸ்டுகளின் வீரமும், அறிவும், மானமும் இவரிடம் ஏன் இல்லை என யார் கேட்க போகின்றார்கள்? அந்த தைரியம் இவருக்கு