அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்கின்றது
அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்கின்றது
அதுபற்றி பேசுவார் யாருமில்லை
ஜல்லிகட்டுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்பவர்தான் இங்கு மருத்துவ துறைக்கும் அமைச்சர் என்பது கூடுதல் செய்தி
அவர் ஜல்லிகட்டுக்குத்தான் முதலிடம் கொடுப்பார், புதுகோட்டை பக்கம் எங்கு ஜல்லிகட்டு நடந்தாலும் அவரையும் அவர் மாட்டையும் காணலாம்
கடந்தவருடம் அவரின் மாடு போட்டியில் இறந்துவிட, சில வாரங்களுக்குமுன்புதான் அதற்கு சிலை திறந்தார்
குட்கா ஊழலில் தனக்கு சம்பந்தமில்லைஎன அந்த மாட்டின் மேல் சத்தியம் செய்திருந்தாரோ என்னவோ?
அப்படிபட்ட காளைமாட்டு துறை அமைச்சரிடம் மருத்துவ துறையினை கூடுதலாக கவனிக்க சொன்னால் எப்படி?
மருத்துவர்கள் போராட்டத்தை அவர் சீரியசாக எடுத்ததாக தெரியவில்லை
மக்கள்படும் துயரத்தை கண்டால் பரிதாபமாக இருக்கின்றது, கண்டுகொள்வார் யாருமில்லை
முதல்வர் சென்னைக்குள் பஸ் விட்டு விளையாடுகின்றார், துணைமுதல்வர் மகனை அடுத்து துணை ஜனாதிபதியாக்கும் முடிவில் இருக்கின்றார்
ஆக மருத்துவர்கள் சிக்கலை அவர்கள்தான் தீர்க்க வேண்டும், அதற்கு அமைச்சர் பேசவர வேண்டும் ஆனால் வரமாட்டார்
என்ன செய்யலாம்
அரசு மருத்துவர்களுக்கு நாம் ஒரு யோசனை சொல்கின்றோம்
போராட்டம் என கிளம்பினால் இங்கு ஒன்றும் நடக்காது அமைச்சரும் வரமாட்டார்
மாறாக ஜல்லிகட்டு போட்டிகளை ஏற்பாடுசெய்யுங்கள், அமைச்சர் மாட்டுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால் போதும்
அவரை கூட அழைக்க வேண்டாம்
ஜல்லிகட்டு தினத்தில் முதல் ஆளாக வந்து அமர்வார் , அப்பொழுது லபகென்று அவரை அமுக்குங்கள்
இல்லாவிடில் அவர் காளை வெற்றிகாளை என அறிவித்து பரிசுகொடுங்கள், மனிதர் உடனே மனம் மகிழ்ந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்
ம்ம் தொடங்கட்ட்டும் ஜல்லிகட்டு.. வாழ்க அமைச்சரின் காளை மாடு