அருண் ஜெட்லி அறிவித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல‌

Image may contain: 1 person, glasses and close-up

2010களில் அமெரிக்காவில் பெரும் பொருளாதார குழப்பம் வந்தது, எப்படி வந்தது?

வங்கிகள் வீடு கட்ட பெரும் கடன் அளித்திருந்தது, வீட்டு விலை சரிவு, வேலை வாய்ப்பு தடுமாற்றம் என யாரும் ஒழுங்காக லோன் கட்டவில்லை

சாவியினை ஒப்படைக்க தயாரானார்கள், புதிய வீடுகள் விற்கபடவில்லை, வங்கிகளுக்கு பணம் வரவில்லை

விளைவு? பெரும் வங்கிகள் திவாலாயின, நாடு ஸ்தம்பித்தது

பின் அமெரிக்க அரசு பணம் கொடுத்தது, அமெரிக்காவிற்கு பணம் வேண்டுமல்லவா? அது ஈராக்கினை கொள்ளையடித்தல், உலக நாடுகளை சுரண்டுதல், டாலர் விளையாட்டு என என்னவெல்லாமோ செய்தது

உலகெல்லாம் இருந்து அதன் முதலீடுகளை திரும்ப பெற்று, நாட்டை ஓரளவு நிறுத்தியது.

உலக பொருளாதார மந்தம் இப்படி ஏற்பட்டது, உலகமே அரண்டது, மன்மோகன் சிங் எப்படியோ இந்தியாவில் சமாளித்து மீட்டார்.

அமெரிக்காவில் இந்த பிரச்சினை இன்றுவரை முழுவதுமாக தீர்க்கபடவில்லை. வங்கிகள் திவால் என்பது அவ்வளவு பெரும் ஆபத்தை கொண்டுவரும் விஷயம்

இந்த சம்பவம் ஏன் சொல்கின்றோம் என்றால், அருண் ஜெட்லி அறிவித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல‌

வங்கிகள் அளித்த கடனில் 2,75,000 கோடி வாரா கடனாம், அதாவது வங்கிகள் தொங்கலில் நிற்கின்றன‌

இப்பொழுது அரசு என்ன செய்ய போகின்றதாம், அங்கே அமெரிக்க அரசு கொடுத்தது போல கொடுக்க போகின்றதாம்

இங்குதான் சிக்கல்

அதாவது அமெரிக்கா பணக்கார நாடு, அவர்கள் டாலர் முதல் விமானம் வரை எல்லாம் பணம். ஏகபட்ட ரிசர்வ் வைத்திருக்கும் நாடு

தாங்கிகொண்டது, பணக்கார அரசு சமாளித்தது.

இந்தியா எப்படி சமாளிக்குமாம் 2,75,000 கோடிக்கும் கடன் பத்திரம் கொடுத்து சமாளிக்குமாம்.

அதாவது வங்கிகள் இழந்தது 2,75,000 கோடி, இனி வாங்கபோகும் கடன் 2,75,000 கோடி ஆக மொத்தம் கடன் 5, 50, 00 கோடி பணம்

அரசு கடன் வாங்கி வங்கிகளுக்கு கொடுக்குமாம், அமெரிக்க பாணியில் சமாளிப்பார்களாம்

முடியுமா? அமெரிக்க பண பலத்திற்கும், இந்தியாவிற்கும் பொருந்துமா?

இரும்பு சட்டி எதனையும் தாங்கும், மண்சட்டி தாங்குமா?

ஒரு திட்டமும் இல்லாமல் இந்த பணம் எப்படி மீட்டெடுக்க முடியும், வாய்ப்பே இல்லை

ஆக நாடு பெரும் சிக்கலை நோக்கி செல்கின்றது. மோடி மவுனம் காக்கும் ரகசியம் இதுதான்

இது சொல்வதென்ன?

பொருளாதாரம் உண்மையில் படுத்திருக்கின்றது, வங்கிகள் திவாலாகின்றன, அரசு ஏதோ செய்ய பார்க்கின்றது, நாடு மோசமான நிலை நோக்கி செல்கின்றது என்பதே

ஏதும் அதிசயம் நடந்தால் ஒழிய இனி இந்திய பொருளாதாரம் எழ இவர்கள் ஆட்சியில் வாய்ப்பே இல்லை.

அடுத்த தேர்தலுக்குள் இவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தாலும் ஆச்சரியமில்லை, நிலமை அவ்வளவு மோசமாகும்

இருந்து பாருங்கள், பெரும் குழப்பங்கள் ஏற்படலாம்.