அற்புத கவிஞனுக்கு குஷ்பு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும்
எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம்
எத்தனையோ முறை தேசியவிருதினை வென்றிருக்கும் அற்புத கவிஞன், கற்பக கவிஞன்
அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம். அதற்கு பெரும் காரணமும் இருக்கின்றது
அழியா பாடல்கள் , அற்புதமான கிராமத்து கதைகளை அவர் எழுதியதை விட நமக்கெல்லாம் பெரும் உதவி செய்திருக்கின்றார், மறக்க முடியாத உதவி
குஷ்பூவிற்கு மிக பொருத்தமான பாடல்களை வைரமுத்து எழுதினார்
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..” என அவர் குஷ்பூவிற்கு எழுதியபாடல் ரசனையின் உச்சம், மிகபெரும் குஷ்பூ ரசிகனாக இல்லாவிட்டால் அப்பாடல் சாத்தியமே இல்லை
“சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெரித்து ஓடுதே அதுவா” என்ற வரிகளாகட்டும், முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா” என்ற வரிகளாகட்டும், குஷ்பூவிற்காய் எழுதபட்டது
இந்த வரிகளுக்காகவே வைரமுத்துவிற்கு வைரமாலை சாற்றலாம்.
கம்பன் தன் கதை நாயகியினை பாடியது போல அப்படி ஒரு உருவகம் தந்த இரண்டாம் கம்பன் அவர்.
நம்மை போலவே உருகி ரசித்து ஆனால் நம்மால் சுத்தமாக முடியாத, அற்புதபாடலை கொடுத்தவர் வைரமுத்து
அப்பாடலை எழுதியதற்காகவே அவரை கொண்டாடலாம், இப்பாடலை எழுதியற்காகவே இன்னொரு முறை தேசிய விருது கொடுக்கபட வேண்டிய கவிஞர் அவர்
அதனால் ஸ்பெஷல் வாழ்த்து
அந்த அற்புத கவிஞனுக்கு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இன்னொருமுறை அவர் குஷ்பூவிற்கு இன்னொரு அழியாபாடல் இயற்ற வாழ்த்துவோம்
அந்த அழியாபாடலை கண்டு கேட்கவும்
https://youtu.be/JsdUpLw_N6I