அற்புத நண்பர் செந்தில் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்த முகநூலில் எழுதி என்ன சம்பாதித்த விஷயம் என்னவென்றால் ஏராளமான நண்பர்கள், அவர்களில் பலர் குறிப்பிடதக்கவர்கள்

கடல்கடந்த தூரமோ, நேர இடைவெளியோ எதுவும் அதனை பாதிக்கவில்லை மாறாக நட்பு வளர்கின்றது

அப்படி முகநூல் கொடுத்த அற்புத நண்பர் Senthil Kumar Krishnan என்பவருக்கு இன்று பிறந்தநாள்

மனிதரையும் என்னையும் நட்பாக்கியது யாரென்றால் கலைஞர் எனும் ஆச்சரிய மனிதர். ஆம் கலைஞரை ரசிக்கும் தம்பிகளில் ஒருவராக வந்து பழகி இன்று மிகசிறந்த நண்பராகிவிட்டார்

அவரை இன்னும் சந்தித்தது கூட இல்லை, ஆனால் சென்னை வரட்டுமா என கேட்டதுதான் தாமதம், அங்கு எனக்கான எல்லா தயாரிப்புகளையும் அவர் நொடிப்பொழுதில் செய்துவிட்டார்

அடிக்கடி அகில இந்திய பயணம் மேற்கொள்பவர் அவர், பொழுது போகவில்லை என்றால் ரயில் ஏறி கல்கத்தாவில் தயிர் பலகாரம் அருந்திவிட்டு அப்படியே சிம்லாவில் மல்லாக்க கிடப்பவர்

அப்படிபட்ட பரபரப்பான மனிதர் எனக்காக தன் இந்திய சுற்றுபயணத்தையும் ஒத்திவைத்திருக்கின்றார்

அப்படி அந்த மனிதருக்கு நான் என்ன செய்துவிட்டேன் என்பத்தான் புரியவில்லை, முகம் காணா நட்பும் சாத்தியம் என்பது விளங்குகின்றது

பொதுவாக பெண் தோழிகளை தவிர யாருக்கும் நம்பர் கொடுக்காத என் உயர்ந்த கொள்கையினையே மாற்றி என் தொடர்பு எண்ணை வாங்கியவர், வாரம் இருமுறையாவது அழைத்து பேசிவிடுவார்

மனிதர் குஷ்பு ரசிகர் மன்றத்திலும் வாழ்நாள் மெம்பராக அடிமை சாசனமும் எழுதி கொடுத்துவிட்டார்

இன்று பிறந்த நாள் அன்று அவரை அழைத்தால் காணவில்லை.

சென்னையில் என்ன வேண்டும் என்று முன்பு கேட்டார், சுதும்பு மீனும் சுண்ட கஞ்சியும் என்றேன்

சுதும்பு அதிகாலையில் வாங்கலாம், சுண்டகஞ்சியினை விசாரித்து சொல்கின்றேன் என சொல்லிவிட்டு சென்ற நண்பரை காணவே இல்லை , அதனை எங்காவது தேடிகொண்டிருப்பார்.

அப்படிபட்ட மிக சிறந்த நண்பரை பெற்றதில் மகிழ்ச்சி, இன்று பிறந்தநாள் காணும் அவர் கலைஞர் போல நீண்ட ஆயுளும் எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.