அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்…

துரைமுருகன் பொதுகுழுவில் அழுதார் என்றால், அதனை விமர்சிக்கலாமா?

அது புனிதமான கண்ணீர் என ஏகபட்ட அறிவுரைகள்

கலைஞர் இல்லா முதல் கூட்டமாம் அதனால் அழுதாராம்

அப்படியானால் வந்தவுடன் அல்லவா கதறி அழுதிருக்க வேண்டும்? ஸ்டாலினை அழைக்கும்பொழுது ஏன் அழவேண்டும்.

கலைஞர் பங்குபெற்ற கூட்டங்களில் எல்லாம் ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கபடவில்லை, அதற்கு வாய்ப்பே இல்லை.

கலைஞர் இல்லாத கூட்டத்தில்தான் அறிவிக்க முடியும்

அதவாது கலைஞர் இருந்தால் அறிவிப்பில்லை, அறிவிப்பு இருக்கும் போது கலைஞர் இருக்க முடியாது

இது எல்லோருக்கும் தெரியும் பொழுது திமுகவினருக்கு தெரியாதா?

இதில் அழுவதற்கு என்ன இருக்கின்றது?

என்ன தேசமோ?

பிரதமர் எதற்கெடுத்தாலும் அழுகின்றார்

தமிழக முதல்வரும் அழுகின்றார், அவரின் கட்சியின் பொதுசெயலாளரும் அழுகின்றார்,

எதற்கெடுத்தாலும் அங்கு அழுகைதான்.

இங்கே திரும்பினால் முக ஸ்டாலின் துரை முருகனோடு அழுகின்றார்

விஜயகாந்த் கதவை சாத்தி 4 மாதமாக அழுது முடிக்கவில்லை.

மக்களில் விவசாயி முதல் எடிஎம் முன்னால் நிற்பவன் வரை அழுது தொலைக்கின்றான்

அவன் கண்ணீரை துடைக்க வேண்டியவர்களும் அழுதுகொண்டிருக்கின்றார்கள்

ஒரே அழுகாய்ச்சி காட்சிகளாக எங்கு பார்த்தாலும் தெரிகின்றது.

என்ன இது? மக்களை நடத்தவேண்டிய தலைவர்கள் எல்லாம் இப்படி அழுதுகொண்டிருந்தால் இந்த நாடு எப்படி உருப்படும்.

இப்படி கண்ணீர் ஆறு ஓடும் தேசத்தில் நீரும் ஓடவேண்டுமா என அழுத வருணபகவான் வேறு எங்கோ சென்றுவிட்டார்


கொசுறு
“கண் ஒடுங்கினவன் எல்லாம் புரூஸ்லி கிடையாது” என விருமாண்டியில் கமலஹாசன் சொன்னது நினைவுக்கு வருகின்றது
Image may contain: 4 people, people smiling, people sitting and indoor