அல்லிராஜா சுபாஷ்கரன் ஈழதமிழர்
அந்த அல்லிராஜா சுபாஷ்கரன் ஈழதமிழர், லண்டனில் கொடிகட்டி பறக்கும் தமிழர்
லைக்கா எனும் பெரும் மொபைல் சாம்ராஜ்யமும் இன்னும் ஏராள தொழிலும் அவருடையது, அப்படிபட்டவர் இங்கு படம் தயாரிக்க வந்தார்
ஒரு ஈழதமிழன் , ஈழ காவல் தெய்வங்கள் நிறைந்த தமிழகத்தில் வரும்பொழுது என்ன செய்யவேண்டும்? ஒவ்வொரு சாமியாக கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டுவிட்டு வரவேண்டும்
ஆனால் சுபாஷ்கரன் வந்து கத்தி படம் தயாரித்தார், வேல்முருகன் எனும் ஈழச்சாமி பொங்கியது, ஏய் இவர் ராஜபக்சே கூட்டாளி என கடும் அழிச்சாட்டியம்
அப்பொழுது ஜெயா இருந்தார், நேரே முழுமுதற்கடவுளிடம் சுபாஷ்கரன் செல்ல, விஜய்க்கு செக் வைத்த மகிழ்வோடு வேல்முருகனை ஜெயா முறைக்க , கத்திபடம் வெளிவந்தது
அதன் பின் லைக்காவினை யாரும் எதிர்க்கவில்லை, அவர்களும் ஈழகாவல் தெயவங்களுக்கு பொங்கல் வைத்தார் அல்லது பொரி வீசினார் என்கின்றார்கள், தெய்வங்கள் அமைதி
ஆனாலும் அவ்வப்பொழுது ரஜினி லைக்காவோடு யாழ்பாணம் செல்வதாக இருந்தால் சாமியாடி தாங்கள் இருப்பை காட்டி கொள்வார்கள்
இப்பொழுது சுபாஷ்கரனின் பிரமாண்ட தயாரிப்பான எந்திரன் 2.0 வரும் நேரம், ஹீரோ ரஜினிகாந்த்
இது இப்பொழுது களத்திற்கு வந்திருக்கும் தமிழர் காவல் தெய்வம் பாரதிராஜாவின் கண்களை உறுத்திற்று. என்ன இவர் நம்மை கவனிக்காமல் செல்வதா? அதுவும் ரஜினி படம் எப்படி?
ரஜினியினை வைத்து பாரதிராஜா படம் எடுக்கலாம் அது கலை, ஆனால் லைகா எப்படி எடுக்கலாம்? லைக்கா ரஜினியினினை நடிக்க வைத்தால் அது இன துரோகம்.
இதனால் பாரதிராஜா எனும் சாமி இப்பொழுது ஆட தொடங்குகின்றது. லைகாவினை எதிர்கின்றோம் , லைகாவிற்கும் தமிழ்ராக்கர்ஸ்க்கும் தொடர்பு என்றெல்லாம் குதிக்கின்றார்
விட்டால் எங்களுக்கும் ஐஎஸ்க்கும் தொடர்பு என்ற அளவில் இவர் உளருவார் என்பதால் அவர் மீது வழக்கு தொடரும் அளவிற்கு லைக்க்கா இறங்கிவிட்டது
எதற்கு வழக்கு?
ஊருக்குள் நுழையும்பொழுது காவல் தெய்வங்களுக்கு தேங்காய் உடைப்பதை போல இவர்களுக்கு பணப்பெட்டி உடைத்தால் தீர்ந்தது விஷயம்
அதற்குத்தான் சாமிகள் இப்படி ஆடி தீர்க்கின்றன
ஆனால் லைக்கா பரகாசுர நிறுவணம்,
முதலில் பொரி வீசி பார்ப்பார்கள், அடுத்து ஆடுவெட்டி பார்ப்பார்கள் அப்பொழுதும் சாமி ஆக்ரோஷம் அடங்கவில்லை என்றால் அதனை கட்டி தூக்கி கடலில் போடவும் லைக்கா வசம் சில மந்திரவாதிகள் உண்டு
விஷயம் எப்படி வருகின்றது என பார்க்கலாம்
(இன்னொரு கோணம் வித்தியாசமானது
ஈழவிவகாரத்தை தமிழக சினிமாவில் புகுத்தி பலனடைய சில திட்டம் இருப்பதாக சொல்கின்றார்கள், அதாவது தமிழக சினிமா உலகத்தை ஈழதமிழர் கைபற்றுவது
புலிகளின் இறுதிகட்ட திட்டம் அப்படி இருந்திருக்கின்றது, அதில் புலிகளின் அழைப்பினை ஏற்று சென்ற பல இயக்குனரில் ஒருவர்தான் ஆமைகறி சைமன்
புலிகள் இல்லாவிட்டாலும் சில சக்திகள் அதை செய்கின்றன என்கின்றன சில செய்திகள்
தமிழக அரசியலின் பிராதன இடமாக சினிமா இருப்பதால் அதன் மூலம் ஊடுருவலாம் எனும் திட்டமும் இருந்ததாக சில செய்தி உண்டு
ஆனால் தமிழக அரசியலை சினிமா எப்படி கெடுத்ததோ அப்படி ஈழவிவகாரத்தையும் கெடுத்தது அதற்கு அங்கிள் சைமன் , வ கவுதமன் போன்றோரே சாட்சி
இதனால் ஏற்பட்ட பண மோசடி மோதல்களும் அவ்வப்போது வெடிகின்றது என்கின்றார்கள்
இருந்தாலும் பிரச்சினையினை திசை திருப்ப வேண்டும் அல்லவா?
இப்பொழுது பாரதிராஜா விஷாலை குறிவைக்க காரணமும் அதுவாக இருக்கலாம்
தமிழ்சினிமாவினை தமிழனே ஆளவேண்டும் என பாரதிராஜா ஏன் குதிக்கின்றார் என்றால் இப்படிபட்ட பிண்ணணிகளும் இருக்கலாம் )