அழகிரியினை தூற்றினால் கலைஞரையும் தூற்றவேண்டியது வரும்
தா.கிருஷ்னன் கொலை வழக்கிலே அழகிரியினை கட்சியினை விட்டு விரட்டியிருக்க வேண்டும், மத்திய அமைச்சராக்கி அழகுபார்த்ததது பெரும் தவறு : உடன்பிறப்புக்கள்
இவர்கள் தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக இருக்குமோ?
அழகிரி கொலைவழக்கில் சிக்கினாலும் காத்தவர் கலைஞர், மாறன் பிரதர்ஸ் அழகிரி கொலைகாரன் என செய்தி வெளியிட்டபொழுது “மாறா நான் பெற்ற மகனை பழிக்கின்றான் நீ பெற்ற பிரகாலதான்” என முரசொலியில் செத்துபோன மாறனிடம் அழுதுதும் கலைஞர்
அழகிரியினை அமைச்சர் ஆக்கியதும் கலைஞர். ஒவ்வொரு நிமிடமும் அவரை பாதுகாத்ததும் கலைஞர்
ஸ்டாலின் மிஞ்சினால் அழகிரியினை மிஞ்ச விடுவதும் , அழகிரி மிஞ்சினால் இப்பக்கம் திருகுவதும் இருவரும் மிஞ்சினால் “கனிமொழி என் வாரிசு அதாவது இலக்கியத்தில்..” என சொல்லி குடும்பத்தையே திகைப்பில் வைத்தவர் கலைஞர்
இன்று அழகிரியினை தூற்றினால் மறைமுகமாக கலைஞரையும் தூற்றவேண்டியது வரும்.
ஆக இவர்கள் கலைஞரை பழிக்க தொடங்கிவிட்டார்கள் என்றால் இவர்கள் நிச்சயம் ஸ்லீப்பர் செல்களாகத்தான் இருக்க முடியும்
அழகிரி ஏன் கட்சிக்கு வந்தார், யார் விட்டது, யார் காப்பாற்றியது என்றெல்லாம் கிளம்பினார்கள் என்றால் கடைசியில் முடிவது கலைஞரிடம்தான் என்பதால் கொஞ்சம் பார்த்து திமுகவினர் விமர்சிப்பது நல்லது