அழகிரியினை விரட்ட அன்பழகனை தொடர்ந்து வீரமணி வந்திருக்கின்றார்

Image may contain: 2 people

திமுகவில் கலைஞர் சில விஷயங்களுக்கு பல்ஸ் பார்ப்பதற்காக இந்த அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரமணி மூலம் சில கற்களை வீசுவது அவரின் தந்திரம்

இப்பொழுது அதே பாணியில் அழகிரியினை விரட்ட அன்பழகனை தொடர்ந்து வீரமணி வந்திருக்கின்றார்

இந்த வித்தை மற்றவருக்கு புரியாவிட்டாலும் திமுக குடும்பமான அழகிரிக்கும் அவர் மகனுக்கும் புரியாதா?

பாம்பின் கால் பாம்பறியும், வம்பின் மூலம் வம்பு அறியும்

அப்படி அழகிரிக்கு புரிந்திருக்கின்றது, எப்படி திருப்பி அடிக்க வேண்டும் எனவும் தெரிந்திருக்கின்றது, போய்யா எச்சி சோறு என்ற ரீதியில் அடித்துவிட்டார்

இனமான வீரமணிக்கு, தன்மான சுயமரியாதை வீரமணிக்கு இதெல்லாம் மாபெரும் மானகுறைவா என்றால் இல்லை

காரணம் பிராமணன் ஏதும் அவமானபடுத்தினால் அன்றி வேறு எதுவுமே அவருக்கு சுயமரியாதைக்கு இழுக்கு இல்லை

எப்படியோ 1960களில் அரிசி அரிசி என கத்திய திமுக , இப்பொழுது சோறு சோறு என மாறி இருக்கின்றது

அதாவது வெந்து பக்குவபட்டு கொண்டிருக்கின்றது, இன்னும் நன்றாக வேகட்டும்


திமுகவின் உட்கட்சி பூசலில் இந்த பகுத்தறிவாளர் வீரமணி ஏன் மூக்கை நுழைக்கின்றார்?

இதுதான் ஆரிய, பார்பானிய சதியாக இருக்குமோ?


கலைஞரால் எம்பி பதவிகளை பெற்ற சரத்குமார் என்பவரையும், ராதிகா செல்வி என்பவரையும் யாராவது கண்டீர்களா?

கலைஞர் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்த நெப்போலியன் என்பவரையும் காணவே இல்லை

நன்றி என்றால் என்ன என இவர்களிடம் இருந்து கற்றுகொள்ள வேண்டும்