அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார்…
அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார், இந்த முரசொலி அறக்கட்டளைக்கு என்று உதயநிதி ஸ்டாலின் தலைவர் என அறிவிக்கபட்டாரோ அன்றிலிருந்தே சலசலப்பு தொடங்கி இன்று வெடித்திருக்கின்றது
அந்த வெங்கடப்பா நாயக்கன் சொத்துக்கள் பெரியார் அறக்கட்டளைக்கு வந்து இன்று வீரமணி கையில் சிக்கியதை போல முரசொலி அறக்கட்டளைக்கு ஒரு நிலை வந்துவிடுமோ என அழகிரி யோசித்திருக்கலாம்.
பெரியாருக்கு வாரிசு இல்லை, அதனால் சிக்கல் இல்லை.
நிச்சயம் முரசொலி அறக்கட்டளை என்பது முழுக்க முழுக்க கலைஞரால் உருவாக்கபட்டு இன்று பெரும் சொத்து மதிப்போடு திகழ்கின்றது, எப்படி விடுவார்கள் கலைஞரின் மற்ற பிள்ளைகள்?
அறகட்டளை என்பது என்ன? சட்ட சிக்கல்களை தவிர்க்க அது பொது சொத்து என்பது போல் காட்டி கொண்டு தன் குடும்ப வாரிசுகளை தாளாளர், தலைவர் என நியமித்து அனுபவிக்க செய்வது என்பது தமிழக நிலை
நோபல் அறக்கட்டளை, ராக்பெல்லர் அறக்கட்டளை போல இங்கு நிலை அல்ல, இங்கு எல்லாமே வேறு வகை
இந்த அறகட்டளைகளை ஒழிக்காமல் இந்தியாவில் நிதி சீர்திருத்தம் கொண்டுவர முடியாது. இனி கட்சிகளை காப்பாற்றவும் இந்த அறக்கட்டளைகளை ஒழிக்க வேண்டும் போல..
ஆக இது வேறு எங்கொ செல்கின்றது. இதனால் கட்சி பாதிக்கபடாமல் இருந்தால் நல்லது. ஆனால் அது அவ்வளவு சுலபம் போல தெரியவில்லை
கலைஞரின் சொத்து மேலேதான் எல்லொருக்கும் குறியே தவிர, அவரை போல் உழைக்கவேண்டும் , கட்சி நடத்தவேன்டும் என அக்கறையோ ஆசையோ இல்லை
உதயநிதி ஸ்டாலினை இப்போதைக்கு முன்னிறுத்தாமல் பின் வரிசையில் வைப்பது திமுகவிற்கு நல்லது