அழகிரி இன்னொரு முரசொலி அமிர்தமாக மாறியிருப்பார்

பள்ளி மாணவனாக கலைஞரை அண்ணா முன் நிறுத்தினார்கள், “இளமை பலி” எழுதிய கருணாநிதி வயதானவராக இருப்பார் என எண்ணி ஏமாந்த அண்ணா, தம்பி ஒழுங்காக படி என்றார்

அன்றே படிப்பை விட்டார் கருணாநிதி

கல்லகுடி ரயில் நிலையத்தில் போஸ்டர் ஒட்டிவிட்டு வா போதும் என சொல்லி அனுப்பி வைத்தார் அண்ணா

அங்கே ரயில் நிலையம் உட்புகுந்து, தண்டவாளம் சென்று அதில் தலைவைத்து படுத்து துப்பாக்கி சூட்டை உண்டாக்கி பாளையங்கோட்டை சிறைக்கும் சென்றார் கருணாநிதி

காமராஜரை தோற்கடிக்க கடும் வேலை செய்யவேண்டாம் என்றவர் அண்ணா

அதையும் மீறி போராடி காமராஜரை தோற்கடித்தார் கலைஞர்

அண்ணா சொன்னதை எல்லாம் கேட்டுகொண்டிருந்தால் கலைஞர் உருவாகியிருக்கமாட்டார்

அரசியலில் வளரவேண்டுமென்றால் மேலிருப்பவர் பேச்சை கேட்கவே கூடாது என நிரூபித்தவர் கலைஞர்.

கலைஞர் சொன்னதை எல்லாம் கேட்டுகொண்டிருந்தால் அழகிரி இன்னொரு முரசொலி அமிர்தமாகவே மாறியிருப்பார்

இப்படி “ஜெனரல்” அழகிரியாக ஆகியிருக்க மாட்டார்