அவசியமா?
காஷ்மீர் தாக்குதலுக்கு நிர்மலா சீத்தாராமன் பதவி விலக வேண்டும் என சில அரைவேக்காடுகள் பேசிகொண்டிருக்கின்றன
சரி அவரை பதவி விலகிவிட்டு யாரை அமர்த்த வேண்டும் என்றால் முக ஸ்டாலினை என்பார்கள
1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் திமுகவும் இருந்தது, காந்தகார் விமான கடத்தல் முதல் கார்கில் போர் வரை அப்பொழுதுதான் நடந்தது
அப்பொழுதெல்லாம் ஒரு திமுகவினர் அந்த வாஜ்பாய் அரசை குற்றம் சொல்லவில்லை
காரணம் இவர்கள் அந்த அமைச்சரவையில் இருந்தார்கள் அதனால் நாட்டுபற்று நிரம்ப வழிந்து “ஒற்றுமையே பலம், அரசை விமர்சிக்க இது நேரமில்லை” என் நாட்டுபற்றோடு திரிந்தார்கள்
2008 மும்பை தாக்குதல் மத்திய அரசின் தோல்வி என எல்லோரும் சொன்னபொழுது இல்லை “இது அரசை விமர்சிக்க வேண்டிய நேரமில்லை, இது நாட்டுபற்றோடு ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்” என்றார்கள்
ஆம் அப்பொழுதும் மன்மோகன்சிங் அமைச்சரவையில் திமுக இருந்தது, ஒரு பயலும் அப்பொழுது அரசை குறை சொல்லவில்லை
ஆக திமுகவினருக்கு நாட்டுபற்று நிரம்பியிருக்க அவர்களை பதவியிலே வைத்திருக்க வேண்டும் போலிருக்கின்றது