அவனவன் பட்டுகொண்டிருக்கும் பாடு போதாதா?

சீனா கொரோனா வைரஸின் தாயகமான யுகான் மாகாணம் கொரோனாவில் இருந்து விடுபட்ட மாகாணமாக அறிவிக்க படாதபாடு படுகின்றது

மேற்குலகம் கொரோனாவில் சிக்கி சீரழியும் நேரம், உலகமெல்லாம் அச்சம் மேலோங்கும் நேரம் சீனா இதை செய்வது பலத்த அதிர்ச்சியும் கவனமும் பெறுகின்றது

தாங்கள் விரைவாக மீண்டெழுந்துவிட்டோம் என உலகுக்கு சொல்ல துடிக்கும் சீனா இக்காரியத்தை செய்வதை உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது

மிகுந்த கட்டுப்பாட்டுடன் பேருந்துகள் நாளையில் இருந்து இயங்கும், ஆனால் பயணிகள் கோட் மூலம் அடையாளபடுத்தபட்டு பேருந்தில் ஏற்றபடுவார்கள்

அதாவது ஒருவரின் எல்லா தகவலும் பதியபட்ட கோட் மூலம் யார் யார் எங்கு செல்கின்றார்கள் போன்ற ஒரு கண்காணிப்பு நடக்கும்

இது சீனாவில் கொந்தளிப்பு ஏற்படுத்துவதையும் கவனிக்க வேண்டும்

ஆம் இது யுகானோடு நிற்காது, சீனா முழுக்க விரிவுபடுத்தபடும் அப்பொழுது ஒவ்வொரு மக்களும் சீன அரசால் கண்காணிக்கபடுகின்றார்கள் என அஞ்சுகின்றார்கள்

சீனாவோ இது அவசரகாலத்துக்கு மட்டும் என சொல்கின்றது

சீனா மொத்த கொரோனா நோயாளிகளையும் கொன்றுவிட்டதா இல்லை மருந்து கண்டுபிடித்துவிட்டதா? ஆனால் இரண்டில் ஒன்று இல்லாமல் அசட்டு தைரியத்தில் இறங்கமாட்டார்கள் என கவனிக்கின்றது உலகம்

அவர்கள் பஸ் விடட்டும் , ட்ரெய்ன் விடட்டும் ஆனால் விமானம் விடமுடியுமா? இப்போதைக்கு ஏதாவது ஒரு நாடு அதை அனுமதிக்குமா என்ன?

அவனவன் பட்டுகொண்டிருக்கும் பாடு போதாதா?